முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீழ்ச்சிகளும் தேவையடா!!!

இரவின் இருளில், இருண்டு கிடந்த நாம்., இன்று இன்பமாய் , இலக்கியம் பேசுகிறோம்; வெளிச்சம் வந்தாலும், வீழ்ச்சிகள் குறையவில்லை, வீரமும் குறையவில்லை; இரவும் பகலும், என்றும் வருவது போல், என்றும் இங்கு, மேடு பள்ளங்கள், தொடர்கதையே... பகலே தொடர்ந்தால், பயனில்லை, இரவும் வேண்டும், இந்த மண்ணிற்கு. எந்த தேசமும், எழுச்சி அடைய, தவறுகள் தேவை; தவறுகளில், திருத்தம் செய்து, முன்னேறுவோம்.. முன்னேற்றுவோம்.. வீரம் கொள்ள, வீழ்ச்சிகளும் தேவையடா என் தோழா...

நட்பே உன்னை ஆராதிக்கிறேன்...

உயிரின் ஒவ்வொரு துளியும், உறவின் ஒவ்வொரு நொடியும், உண்மை நேசம் செய்தோம்... கனவுகள் கண்டு, கற்பனை செய்து, நிஜமாய் நடந்திட, நாளெல்லாம் உழைத்தோம்... சோகமும், சொந்தமும், வாட்டிய போதும், தோள் தந்து, தூக்கிவிட்ட, நட்பே உன்னை ஆராதிக்கிறேன்.....

போடா அண்ணா

அம்மா கிட்ட சண்ட போட்டு , அப்பா கிட்ட திட்டு வாங்கி, அழுதுட்டே இருந்தப்போ, அண்ணா வந்து செல்லமா பேச, அழுதுகிட்டே நான் சொன்னேன்,  " போடா அண்ணா" ஆசையா வாங்குன , அல்வாக்காக சண்ட போட்டு, அடி வாங்குனப்போ, அடிச்சு சொன்னேன் , "போடா அண்ணா" எத்தன தடவ சொன்னாலும், எப்பவும் சண்ட போட்டு , திட்டு வாங்கணும், "போடா அண்ணா" ..... :)