உலகமே சிரிக்க.,
உயிர் பெற்று செழிக்க.,
தன் சோகத்தை உரமிட்டு.,
நகைச்சுவை பூக்களை
நட்டு வைத்தவன்!!!
ஹிட்லர் ஆட்சியை.,
கேலிப் பொருளாக்கி.,
கவனம் ஈர்தவன்!!!
மனித நேயம் நிறைந்த.,
மனசுக்கு சொந்தக்காரன்.,
மழையில் தன் கண்ணீரை.,
வாரி இறைத்து.,
நகைச்சுவை வாசம்
பரப்பி நின்றவன்.,
பிரியா இடம்
நம் மனதில் பிடித்து.,
உலகம் விட்டு.,
பிரிந்து சென்ற நாள்.,
சுவாசத்தின் துளிகள் சேர்த்து.,
நன்றி சொல்கிறேன்.,
உன் மனிதத்திற்கு!!!
மனிதத்திற்கு!!!
பதிலளிநீக்குgood one .., intha varthaikum inga neraiya perku meaning theriyathu .... நல்ல எழுத்துக்கள்..