முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முகவரி தேடி!!!

ஓடும் பேருந்தோடு சேர்ந்து, முகவரி இல்லாக்  கடிதம் --> சுமை! பந்தயம் ஓடும், சாலையோர சருகுகள்!! எதையோ வெறித்துப் பார்க்கும், மரத்தடி முனிவர்கள்!! புனிதமான பூக்களுள், பூரித்துக் கிடக்கும், பன்னீர் வாசம்!! உணவைத் தேடி எங்கிருந்தேனும், ஊர்ந்து வரும், எறும்புக் கூட்டம்!! அவன் முகம், பார்க்கும் போது, சிவந்த பௌர்ணமியாய் மாறும் என் முகச் சிவப்பு! கோடி மையில்கள், தேடித் போனாலும், முகவரி அறியாமல், நான் தவிக்கும் சில இன்பக் கடிதங்கள்!

பூ முதல் பெண் வரை!

தினம் தினம் , My sweet love flowers just for you! உன்னைத் தேடித் தேடி, கண்கள் சோர்ந்து போக! ஏக்கத்தோடு நான், பார்க்கும் பெண்கள் கூட, உன் போல் தோன்ற! நிஜமாய் கண்ணா, நீ நிஜமாய், நேரில் தோன்ற! "சிச்சி பிரம்மை...", விலகி நடந்தேன், விசித்திரமாக! என் கூந்தல் சுவாசிக்கும் பூவெல்லாம் உனக்காக, உன் கண்கள் சுவாசிக்க, சூடினேனடா! உன்னைக் காணாமல், நான் வாடியது போல, கூந்தல் மட்டுமே சுவாசித்து, நீ சுவாசிக்காமல், வாடுது என் தலை ஏறிய, காதல் பூக்கள்! பூ முதல் பெண் வரை, பார்க்கும் அனைத்திலும், உன் காதல் முகம்! நினைவுகள் முழுவதும், நீங்கா இடம்!

கொண்டேன்......

உன்னோடு நான் நாணிய நொடிகள், சிவந்தேன்...! "எனக்கே கேட்காமல், எனக்கே புரியாமல், என்னால் பேச இயலும்" உன்னோடு மெதுவாய் மெதுவாய், பேசிப் பேசியே, அறிந்து கொண்டேன்! உலகில் உள்ள சிவப்பெல்லாம், ஊற்றினார் போல, அழகாய் என் கன்னம் நாணத்தில் சிவக்கும், தோழி உன் பெயர் மொழிந்த நொடியில், நாணம் கொண்டேன் ! செல்லக் கோபங்களால், சண்டைகள் கூட இனிக்கும், கொஞ்சிக் கொஞ்சி, இனிப்பாய் என்றும், நீ திட்டும் திட்டில், உணர்ந்து கொண்டேன்! "உன் கனவுல இன்னிக்கு வந்தேனா?" உறங்கி எழுந்த மறுநொடி, நான் உன் கண்ணுக்குள், உற்று உற்று, உண்மை கேட்கும் நொடியில், என்னுள் உள்ள சிறுமி, புரிந்து கொண்டேன்! நீ என் சோகத் தெப்பத்தில், முழுவதும் நனைந்து, ஈரமாகி ஈரமாகி, என் சோகம் வற்றிப்போவதால், "அழுவதும் சுகம் தான்" நேசம் கொண்டேன்!

காதலின் நிறம்!

நான் உன் இதயம் தொட்டு, நீ என் கண்கள் பார்த்து, பேசிக்கொள்ளும் புரியா பௌர்ணமியின் வண்ணம்! பூக்கள் பரிமாறி, வாசம் களவாடும், ஈர ரேகையின் வண்ணம்! கீழ் வானம் பார்த்து, கை கோர்த்து நடக்கும், சாலையின் வண்ணம்! ஒன்றாய் சேர்ந்து, ஏழையின் கை தொட்டு, கண்ணீர் துடைத்து, நாம் உதவிடும் நேரம், உண்மை உயர்வின் வண்ணம்! காதலின் வண்ணம் , நம் இருவரோடு நிற்காமல், கண்ணீர் கலைக்கும், புன்னகை விதைக்கும், புண்ணியத்தின் வண்ணமாய் பூவுலகம் சூழும், இறைவனின் வண்ணம்!

புயல்!!!

தூரத்தில் தொடங்கி, என் வீட்டு முற்றம் சேர்ந்து, ஏனோ சொல்லாமல் சொல்லுது, புயல்!!! பேசாமல் பேசுது, சீற்றமாய் சில நேரம், சுகமாய் சில நேரம்!!! கனவில் தொலைந்த, பொக்கிஷம் கொஞ்சம், பாவங்கள் கொஞ்சம், அடித்து வருது, ஆறுதல் பேசுது, அடிமனம் வதைக்குது!!! ஈரமாய் பேசி, என் இதயம் நனைக்குது, சோகத்தில் வரண்டேன், தாகம் தீர்த்தது, சந்தோஷம் அடைந்தேன், சுனாமி ஆனது !!! இனிப்பான  நரகம், இந்தக் காதல் புயல்!!!