முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிறுக்கல்கள்!

இராமேஸ்வரத்தில் ஒரு கோவிலின் சுவரில்
குருட்டுக் காதல் செய்யும் கூட்டத்திற்காக!!
நூதனமாய் நடக்கும்,
நட்பிற்காக!


"காதலிற்கு கண்கள் இல்லை"
கூற்றை நான் நம்பத்தான் இல்லை!

"ருபாய் நோட்டு, கோயில் சுவர்கள்,
பேருந்தின் ஜன்னல் ஓரம்!
பார்க்கும் இடமெல்லாம்,
காதலியின் பெயரையும் உன் பெயரையும்
கிறுக்கும் காதலுக்கு
கண்கள் இல்லை தான்!
நின் கண்கள் புண்கள் என உணர்ந்திடு!!
"கிறுக்குவது பெருமையோ??"

சிறப்பாக நிற்கும் ,
சரித்திரக் குறியீடுகளை,
கிறுக்கிக் கிறுக்கியே,
சீரழிக்கும் உன்னை,
சரித்திரத்தில் இடம் பெறுவாய் என
சரீரத்தை உருக்கி,
குருதியை பிரித்து,
பெற்றெடுத்த உன் அன்னை,
வெட்கி வருந்துவதை உணர்ந்திடு!!
கிறுக்குவது சரித்திரமோ??

நம் நாட்டை,
நாடி வரும்,
நூற்றுக்கணக்கான வெளிநாட்டோர்
நம்மை தூற்றுவது விருப்பமோ?
நின் குருட்டுக் காதலாலும்,
கிருக்கல்களாலும்,
நன்மை தான் இல்லை,
தீமை குறைத்திடேன்?
உன்னால் நாடே நாணுது,
உச்சியில் உரைக்கட்டும்,
உனது பிழை உணர்ந்திடு!
கிறுக்குவது இன்பமோ?

காதலர்கள் மாடுமல்ல ,
பல நல்லவர்களும் இதிலடக்கம்,
நண்பர்களும் இதிலடக்கம்!
நீ கிறுக்கிக் கிறுக்கி,
நின் பெருமை தொலைத்ததோடு,
நாட்டின் பெருமையும் ஏனடா அழிக்கிறாய்?

காகிதமும், புத்தகமும்,
தொட்டு எழுத வலிக்கும்,
கல்லூரி செல்ல கசக்கும்,
சுற்றிச் சுற்றி கோயிலிலும்,
பேருந்திலும், பொதுச் சுவரிலும்,
கிறுக்க மட்டும் இனிக்குதோடா?
முட்டாளே,
நின் முட்டாள்த் தனம் உணர்ந்திடு!

(தயவு செய்து, பொது இடங்களை தூய்மையாக, மாசு படுத்தாமல் காத்திடுங்கள்! கோயில், பேருந்து போன்ற பொதுச் சொத்துக்களை சேதம் செய்ய வேண்டா)

கருத்துகள்

  1. மிக அருமையான கவிதை
    வாழ்த்துக்கள் தோழி.

    எனினும் எழுதுங்கள்
    காத்திருக்கின்றோன்.
    உங்கள் ஆக்கத்தை திருடிவிடவே..

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி. நிச்சயமாகத் தொடர்வேன்...

    பதிலளிநீக்கு
  3. சரியாக சொன்னீர்கள்,கிறுக்குத்தனமானவர்களின் காதல்கள் இது போலத்தான் தன்னை பொது இடங்க்ளில் கிறுக்கி விளம்பரம் செய்து கொள்கிறது.இவர்கள் அசிங்கப்படுத்துவது இவர்களை மட்டுமல்ல புராதான சின்னங்களையும்,பொது இடங்களையும் தான்.அருமையான சிந்தனை பொதிந்த கவி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்