முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#12

முந்தைய பாகங்கள்: 


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 

காரைக்குடி, அந்த வரிசை வீடுகளின் முன் வந்து தேவதை போல, அழகாய், வெள்ளை நிறத்தில், சொர்க்கம் போல நின்றது அந்த மகிழ்வுந்து.

கதவு திறந்தது, உள்ளிருந்து இறங்கினார், வெள்ளைச் சட்டை, கருப்பு கால்ச்சட்டை அணிந்த ஒருவர். வயது முப்பது தான் இருக்கும், மிடுக்காய் இருந்தார். ஆயினும், அனுபவம் பளிச்சிட்டது கண்களில். கையில் விலை உயர்ந்த கடிகாரம். பார்த்தாலே பெரும் பணக்காரர் என்று பட்டது.

நீண்ட நாட்களாக, தண்ணீருக்காய் ஏங்கிய ஒரு பாலைவன வழிப்போக்கன் போல, பார்வையில் தாகம் இருந்தது, தேடல் தெரிந்தது.

தனக்குத் தெரிந்த ஒன்றை, தொலைத்த ஒன்றை விட்டுச் சென்ற ஒன்றைத் தேடி வந்தவன் போலத் தேடினார் எதையோ.

அந்த வரிசை வீடுகளில், ஒரு வீட்டின் முன் பதிந்தது அவரது பார்வை.

அந்த வீட்டின் வாசலில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பத்து வயதுக்கு உள்ளே இருக்கும் அவர்களுக்கு. இந்தக் காட்சியைப் பார்த்த அந்த பணக்காரரின் முகம் சற்று வாடியது. தேடி வந்தது, தொலைந்தே போனது நிரந்தரமாய் என்பது போல இருந்தது அவரது உணர்வு.

குண்டான தோற்றம், கருப்பு நிறம், ஒரு பெண் வெளியே வந்தார் அந்த வீட்டில் இருந்து.

இவரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். ஏதோ இவன் தன்னிடம் கேட்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பார்வையில் அலட்சியம் இருந்தது, ஏதோ எதிரியைப் பார்ப்பது போல இருந்தது. என் நேரத்தை வீணடிக்க வந்தாயா என்பது போல கேள்வி இருந்தது.

அந்தப் பெண்ணிடம் கேட்டார், " இங்க.. ரேணுகானு..."

"அப்டி எல்லாம் யாரும் இல்லைங்க.." விசுக்கென்று ஏதோ வேண்டாதவரைப் பார்த்தது போல உள்ளே சென்றாள் அந்த அம்மா.

நொறுங்கிப் போனார் அவர்.
தேடிவந்து, விவரம் கேட்போருக்கு இப்படியா பதில் சொல்வார்கள்? சொத்தையே எழுதி வை என்று சொன்னது போல, எரிக்கிறார்களே பார்வையால்.

மீண்டும் வெளியே வந்து, " ஏ.. ப்ரியா.. இங்க வா.. படிக்கணும், காலைல இருந்து ஒரே வேலயாட்டாப் போச்சு உனக்கு, பரீட்சை இருக்குல, வா படி.." , சத்தமிட்டாள் அந்தப் பெண்மணி.

"இதோ வரேன்மா.. கொஞ்ச நேரம்..", சிணுங்கலும் கெஞ்சலும் சேர்ந்து சில்வண்டு போலக் கத்தினாள் அச்சிறுமி.

அருகில் இருந்த வீட்டைப் பார்த்தார். கதவு மூடி இருந்தது.

வேகமெடுத்தார் அந்த வீட்டை நோக்கி. தயக்கம் இன்றி அவசரமாக கதவைத் தட்டினார்.

உள்ளிருந்து சத்தம் வந்தது, " இதோ வரேன்..", தளர்ந்த குரல், சோகத்தின் குரல், கரைந்து கொண்டிருந்த உயிரின் குரல். தனிமையின் குரல்.

கதவு திறக்கப்பட்டது. வந்தார் ஒரு வயதான மனிதர். மெதுவாய்த் கேட்க அவர் வாய் எடுக்கும் முன்னே, அவசரமாய்க் கேட்டார், "அண்ணே.... குமார் அண்ணே... எண்ணத் தெரிலயானே?"

"யாருப்பா.. சரியா தெரிலயே.. எனக்குக் கொஞ்ச நாலா கண்ணு பார்வை சரியாத் தெரில...", இழுத்து மெதுவாய் பேசினார் அந்தப் பெரியவர்.

"அண்ணே.. நான் தான்னே, ராமு, ராமச்சந்திரன். இங்க பக்கத்துல தங்கி இருந்தனே, முந்தி ரொம்ப வர்சத்துக்கு முன்னாடி, நியாபகம் இல்ல?"

"அட நம்ம ராமுவா.. அடையாளமே தெரியலப்பா.. இன்னும் சின்னப் பையன் மாத்ரி இருக்கப்பா.. முப்பது வயசுக்காரன் மாதிரி இருக்கப்பா.. வா உள்ள வா.. "

"முப்பதா.. நாப்பதுக்கு மேல ஆச்சுண்ணே.. ", குனிந்து நெளிந்து நுழைந்தார் அந்த குறுகிய வாசலுள், ராமச்சந்திரன்.

"பாத்து வாப்பா... முட்டிக்காத.. மெதுவா வா.."

------------------------------------------------------------------------------------

சேர்ந்தார்களா ரேணுகாவும் ராமுவும்? வாசிக்கலாம் வரும் பாகங்களில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்