உன் மொழி அறியாத போதும், உணர்வுகளின் வழியாக, வார்த்தைகள் பரிமாறினேன்! எத்தனை ரணம் இருந்த போதும், உன் பூஞ்சிரிப்பில், சுக ராகம் சுவாசித்துக் கொண்டேன்! என் கனவுகள் பலிக்காத போதும், உன் கனவுக்காய், ஒரு வீர சபதம் எடுத்தேன்! உன் தும்மல், விம்மல் அது போதும், என் இதயம், விரிசல் விட்டு உடையக் கண்டேன்! "அப்பா.." அந்த வார்த்தை போதும், அதற்காகத் தான், தவம் செய்து கிடக்கிறேன்! சொல்லிடு சீக்கிரம், "அப்பா... அப்பா காத்துக் கிடக்கிறேன்! (எனது நண்பரின் குழந்தைக்காக எழுதிய கவிதை)
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!