முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானும் நார்த் இந்தியனும் #3

இது ஒரு தொடர் பதிவு! முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் -  நானும் நார்த் இந்தியனும்! #1  #2 இரவு சீக்கிரம் தூங்கிப் பழகிய நான், அந்தப் பெண்ணோடு சேர்ந்து நேரம் கழித்து உறங்கப் பழகிக் கொண்டேன். இரவின் அழகை ரசிக்கக் கற்றுக் கொடுத்தாள் எனக்கு அவள் தான். "எத்தனை குளிர்!", என்று இழுத்துப் போர்த்தி உறங்கிவிடுவேன் நான் இரவு பத்து பதினொறு மணிக்கெல்லாம். ஆனால், சில நாட்களிலேயே இரவு பத்து பதினொறு மணி வரை வேலை இருந்தது ஆய்வுக் கூடத்தில், நேரம் கழித்து தான் அறைக்கே வருவேன். சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டு இருப்போம். அப்படிப் பேசிக் கொண்டு இருக்கையில் ஒரு நாள், காதல் பற்றி பேச்சு வந்தது. அவள் சொன்னாள், "இங்கு திருவனந்தபுரத்தில் எல்லாம், நிறைய ஜோடிகளைப் பார்க்கவே முடியவில்லையே, தென் இந்தியாவில் எல்லாம் காதலிக்க மாட்டார்களோ நிறைய பேர்?", என்று. நான் சொன்னேன், "அப்படி எல்லாம் இல்லை, இங்கு தான் அதிகம் அப்படிப் பார்க்க முடியவில்லை, சென்னையில் எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன் நிறைய" , என்று. அவள் சொன்னாள், "ஆனாலும் எங்கள் ஊரை விட இங்கு குறைவு தான், அங்கு எல்

சொல்கிறேன் கேளடா!

இது கடிதமும் இல்லை, கவிதையுமில்லை, ஆனால், இது உனக்காக என்பது மட்டும் உறுதி! வானிற்கும் மண்ணிற்கும் இருக்கும் பந்தம் தான் உனக்கும் எனக்கும் ஊடே, ஆம், தூரத்தில் இருந்து பார்க்க, சேர்ந்தே இருப்பது போலத் தான் தோன்றும், ஆனால், ஒரு போதும் நாம் சேர்ந்தே இருந்ததில்லை! ”அதோ, அங்கு தூரத்தில் தெரியும், நட்சத்திரமும், நிலாவும் பாரேன்”, என்று கை நீட்டி, நீ காட்டிக் கதை சொன்னால், ரசித்துக் கொண்டே இருக்கலாம், ஆனால், என்ன செய்ய, எல்லா நாளும் நிலவு ஒரே போல இருப்பதில்லை, அது போலத் தான், நம் நட்பும், தேய்கிறது சில நேரம், வளர்கிறது பல நேரம். It's you ! உறங்கிப் போன பிறகும், நடு இரவில் விழித்து, உன்னை அழைத்துக் கதை பேசிச் சிரிக்கிறேன் கனவு கண்டதை எல்லாம், ஆனால், பாரேன், ஒன்றுமே இல்லாத அந்தக் கதை கூட இனிமையாகத் தான் இருக்கிறது நீயும் நானும் பேசுகையில்! உனக்குப் பிடித்த பாடலும், எனக்குப் பிடித்த பாடலும், மாறி மாறி நான்கு மணி நேரம் கேட்ட பிறகும், நமக்கு அலுத்துப் போவதே இல்லை, தொடர்கிறது நமது அரட்டை ஐந்து மணி நேரம் தாண்டியும் கூட சில சமயங்களில். சாப்பிடுவதும், கதை பேசுவதும் தான் எனக்குப் ப

ஊமைக் கனவுகள்!

கனவுகள் கருப்பு வெள்ளை, யார் சொன்னது? என் கனவுகளுக்கு, காவியும் தெரியும், பச்சையும் புரியும்! நீ வராமலே இருந்திருந்தால், இத்தனை இன்பமும் - தொடர்ந்து, இத்தனை துன்பமும், இல்லாது போய் இருக்கும்! என் கனவில், இனிமை சேர்ந்திருக்கும்! அழுது கொண்டு இருந்தேன், அன்பே நீ வந்ததும் தான், என் கருப்பு வெள்ளைக் கனவுகள், கலராய் மாறின - ஆனால், காரணம் இல்லாமல் - இன்று சண்டைகள் போடுகையில், சாயம் வெளுக்கிறதே, என் கனவின், வண்ணம் கரைகிறதே! கண்களை மூடிக் கொண்டு, காதலில் இருக்க, நீயும் நானும் காதலாய் சிரிக்க, கனவு காண்கிறேன், என்ன செய்ய, கண் திறக்கையில், கனவு கலைந்து, கண்ணீரே மிச்சம்! உன் கைகள் பிடித்து, நீண்ட தூரம் நடக்க, ஒத்திகை பார்த்து, ஒத்திகை பார்த்து, ஓய்ந்து தான் போகிறேன் தினமும் இரவெல்லாம், என்ன செய்ய, என் நடை பயணக் கனவு, பலிக்கவே இல்லையடி! தினமும் இரவில், உன் சிரிக்கும் முகம், என் கண்களைப் பார்த்து, கைகளைக் கோர்த்து, நீ பேசிக் கொண்டே இருக்கும், ஆயிரம் வார்த்தைகள், விடிந்ததும், அர்த்தம் இழந்து, ஊமையா

நானும் நார்த் இந்தியனும்! #2

இது ஒரு தொடர் பதிவு! முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும்! #1  இப்படிக் கேட்டாள் அவள், “உங்களுக்கு எல்லாம் எங்களப் பிடிக்காதோ?”, என்று ஆங்கிலத்தில். நான் கொஞ்சம் யோசித்தவாறே, “அப்படி எல்லாம் இல்ல” என்றேன்.  ”இல்ல, நான் ஊர்ல இருந்து கெளம்புனப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க, அதான் கேட்டேன்” இப்படி அடிக்கடி இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள், அந்தப் பெண். நானும் ஒவ்வொரு முறையும், அப்படி எல்லாம் இல்லை, அப்படி எல்லாம் இல்லை, என்று  சொல்லிக் கொண்டிருந்தேன் ஒவ்வொரு முறையும்! ஆனாலும், நம் ஊர் பக்கம் இருக்கும் பழக்கங்களும், அவர்களது பழக்கமும் சுத்தமாக வேறு வேறு! சரி, இப்போது, நான் முக்கியமான ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். கேளுங்கள்! அன்று நான் திருவனந்தபுரம் சென்று, விடுதியில் என் அறையின் சாவி எல்லாம் வாங்கிக் கொண்டு போய், அறையைத் திறந்தேன்! அப்போது தான் தெரிந்தது அந்த அறையில் ஏற்கனவே யாரோ இருக்கிறார்கள் என்று. தனி அறை கிடைத்தால் நல்லது என்று தான் நான் நினைத்தேன், இது சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது! அந்த அறையில் இரண்