முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் பொதிப்பது (Embed) எப்படி?

"அவரு ரொம்ப நல்லா எழுதுவாரு, ஆனா, இப்போ எல்லாம் அவரு ப்ளாக்-ல எழுதுறதே இல்ல.. எல்லாம் முகப்புத்தகத்துல தான். இதனால நெறைய பேருக்கு அவர் எழுதுறது சில நேரம் போய்ச் சேரமாட்டிக்குது..", இப்படி நன்றாக எழுதும் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம், நானும் நண்பர் ஒருவரும்.

உண்மை, கட்டுரைகள் கதைகள், இப்படி எழுதுவது குறைந்து, சிறு சிறு வாசகங்களாக, நக்கல் பேசும் வரிகளாக மாறிவிட்டன இப்போது எழுத்துக்கள் எல்லாம்.

"சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது", என்பது சிறப்புதான் என்றாலும், விரிவாக ஒன்றை எழுதுவதும் திறமை தானே?

சரி, நாம் கதைக்கு வருவோம், ஒருவர் நன்றாக முகநூலில் எழுதுகிறார், அது உங்களுக்குப் பிடித்து இருக்கிறது, உங்கள் வலைப்பூவில் அதைப் போட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

இப்படி நான் நினைத்தால், "copy - paste" செய்து, ஒரு இணைப்புக் கொடுத்து இருப்பேன். ஆனால், இதற்கு மாற்றாக ஒரு வழி உள்ளது. நேரடியாக அந்த நபர் முகநூலில் எழுதியதை நீங்கள் அப்படியே உங்கள் வலைப்பூவில் போடலாம்.

எப்படி? அந்த நபர் எழுதி இருக்கும் பதிவை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, கீழ் வருமாறு செய்யலாம்.


  1. அவர்களின் பதிவின் ஓரம் வலது மூலையில் இருக்கும் அம்புக்குறியை அழுத்தவும்.
  2. அதில் "Embed Post" என்கிற வசதியை அழுத்தவும்.
  3. அழுத்தியதும் ஒரு "code" உங்கள் திரையில் தெரியும். அதை "copy" செய்து கொள்ளுங்கள். (கூடுதல் விபரங்கள் அறிய "learn more"என்று அந்த "code"ன் கீழ் வரும் இணைப்பை சொடுக்கி வாசித்துப் பாருங்கள்)
  4. பிறகு, உங்கள் வலைப்பூவில் எங்கு அந்தப் பதிவை "embed" செய்ய விரும்புகிறீர்களோ, அங்கு "paste" செய்யவும்.
  5. "paste" செய்து பதிவை முழுமையாக முடித்த பிறகு, ஒரு முறை "Preview" செய்து பாருங்கள். உங்களது "code"  அப்படியே வருகிறதா, அல்லது பதிவாகத் தெரிகிறதா என்று.
  6. "code"  அப்படியே வந்தால், உங்கள் பதிவின் "settings" ல் சிறிது மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். 
  7. வலது புறம் இருக்கும் "settings" ல் "Interpret typed HTML" என்று மாற்றிக் கொள்ளுங்கள். 
  8. மறுபடி "Preview"  செய்து பார்த்து விட்டு, பதிவை வெளியிடலாம்!
இதில் என்ன சிறப்பு என்றால், இந்த போதிக்கப்பட்ட பதிவை உங்கள் வாசகர்கள் நேராக உங்கள் தளத்திலேயே முழுமையாகப் படிக்கலாம், அது மிகவும் நீளமான பதிவாக இருந்தாலும். ஆனால், இப்படிப் பொதிக்கும் பதிவு, "public" என்று, எல்லோரும் வாசிக்கும்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதை நான் Techmaza தளத்தில் இருந்து கற்றுக் கொண்டேன் சமீபமாக, அதைப் பயன்படுத்தி ஒரு பதிவும் பதிந்து பார்த்தேன் எனது வலைப்பூவில். நன்றாக வேலை செய்தது. உங்களுக்கும் முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் போட வேண்டும் என்றால், இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

கருத்துகள்

  1. நல்ல தகவல்.. ஆனால் ப்ளாக்கை ஃபேஸ்புக்கில் embed செய்யும் வசதி தான் தேவை.. ஃபேஸ்புக்கை ப்ளாக்கில் embed செய்வது அந்த அளவு வரவேற்பை பெருமா என தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எதுவும் இருக்கறதா தெரியலையே! இது பயன்படும், முகநூல்ல நல்லா எழுதி இருக்க பதிவ வச்சு, அது சார்ந்து நீங்க எழுதனும்னு ஏதாவது நெனச்சா.. இல்ல, வேற ஒரு நல்லா எழுதற நண்பர நீங்க உங்க வலைபூல அறிமுகம் செய்ய நெனச்சா, நல்லாப் பயன்படும் :)

      நீக்கு
  2. அட ! கண்மணி அன்போடு-வில் Technical Post :) வாழ்த்துக்கள் கண்மணி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) "அட அட அட..." எனக்கு RJ பாலாஜியோட ப்ரோக்ராம்ல வர்ற, "அட" நினைவுக்கு வந்துடுச்சு! :) நன்றிகள்!

      நீக்கு
  3. பலருக்கும் பயன் தரும் பதிவு... விளக்கத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்