முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரசிகப் பெருமக்களே!

எல்லோரும் புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு என்று வரிசை வரிசையாக பதிவு எழுதிக் கொண்டு இருக்க, ஒரு பக்கம் சிலர் புதிதாக வந்த வீரம், வில்லா.. (வில்லாவா? ஜில்லாவோ?), விழா இப்படி எதேதோ படங்களுக்கு எல்லாம் சன் டி.விக்குப் போட்டியாக திரை விமர்சனம் போட்டுக் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், நிறைய, பெரிய பெரிய இலக்கியவாதிகள் (??!!) எல்லாம், தங்கள் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க, அந்தப் புத்தகங்களுக்கு சிலர், ” இதென்னையா இவன் சின்னப் பய, இவன் எழுதுறதெல்லாம் புஸ்தகமா போட்டுக்கிட்டு! என்ன கருமமோ ” , (ஒருவேள பொறாமையா இருக்குமோ??) என்பது போல புத்தக விமர்சனம் எழுதிக் கொண்டிருக்க, (அப்போ, நான் எல்லாம், புத்தகம் போட்டு, பெரிய எழுத்தாளரா வரவே முடியாதா?? அய்யஹோ!), இத்தனைக்கும் மத்தியில், நான் மட்டும் ஒன்றுமே எழுதவில்லையே? நீண்ட நாட்களாக? ஆயிரக் கணக்கில் எனக்காக உலகமெங்கும் இருக்கும் ரசிகர்கள் எல்லாம், ” என்ன எழுதல? என்ன கண்மணி மேடம், எழுதல? ” , என்று கேட்கத் தொடங்கிவிடவே, (சரி, பொய் தான் என்ன செய்ய ஒரு விளம்பரம்) அவர்களை திருப்தி படுத்தும் பொருட்டு இந்தப் பதிவை அடியேன்(அடியாள்-னு வருமா பெண்பால்?) எழுதுகி