முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இப்படியாக ஒரு பயணம்!

காலையில் இருந்தே ஒரே படபடப்பு, எந்த வேலையிலும் கவனமே செல்லவில்லை. மேலதிகாரி கொடுத்த வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே இருந்தேன், ஆயிரம் பிழைகளோடு! இப்படி அரையும் குறையுமாக முடிப்பதற்கு, அப்படியே போட்டுவிட்டு உட்காரலாம். ஆனால் என்ன செய்ய, சும்மா உட்கார்ந்தால் பார்ப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களே! என்னவோ, “லொட்டு லொட்டு” என்று கணினியின் பொத்தான்கள் எல்லாவற்றையும் தட்டிக் கொண்டே இருந்தேன். மனம் மட்டும் அதே படபடப்பு நிலையில் லயித்துக் கிடந்தது! சாயங்காலம் ஆறு மணிக்கு விடுதி அறையில் இருக்க வேண்டும். அப்போதான் கிளம்பி, ஒன்பது மணிக்கு ரயிலைப் பிடிக்க முடியும். ஆறு மணிக்கு அறையில் இருக்க வேண்டுமேயானால், ஐந்து மணிக்கு ஆஃபீசில் இருந்து கிளம்ப வேண்டும்! அது கொஞ்சம் கடினம்! கொஞ்சம் இல்லை, ரொம்பவே! இது ஒரு காரணம் படபடப்புக்கு. இந்தப் பெரிய ஊருக்கு நான் இரண்டு வருடம் பழசு. சென்னை! பிழைப்புத் தேடி, எல்லோரையும் போல நானும் வந்தேன். மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்!!! முதலில் ஐயாயிரத்தில் தான் ஆரம்பித்தேன், பிறகு படிப்படியாகக் கூடி, இப்போது இந்தப் பெரிய தொகை! இது எனக்க