முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாகுபாடின்றி நேசிப்போம் !!!


"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" -- பாரதியார் 

  பெண்களின் நிலை மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயினும் சில இடங்களில் பெண்கள் சில கொடுமைகளை அனுபவித்து தான் வருகிறார்கள். நான் இங்கு பெண்களுக்குச்  சாதகமாய், பெண் உரிமைக்குக் குரல் கொடுக்க முற்படவில்லை.  கிடைத்த 
உரிமைகளையும் , சுதந்திரத்தையும் தவறாகக் கையாளும் சில பெண்களைப் பற்றியும்., பெண்களைத் தாழ்வாக என்னும் சில ஆண்களைப் பற்றியுமே  எழுத முற்படுகிறேன்.


  பெண்களுக்கு எதிரான செயல்கள், கொடுமைகள் இன்றும் பல இடங்களில் நடந்து வந்தாலும்., சில பெண்களால் ஆண்களுக்கே துன்பம் ஏற்படும் அளவிற்கு, சில இடங்களில் பெண்கள் அதீதமாக முன்னேறி இருக்கிறார்கள். ஏதேனும் வெறுப்பு இருப்பின், கணவரின் மீதே பொய்ப் புகார் கொடுக்கும் பெண்கள் இன்று பெருகி வருவதென்னவோ  உண்மை தான். 

  இயற்கையிலேயே, பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்களே. ஆண்களின் துணை பல இடங்களில் தேவை தான் எமக்கு. ஆயினும் இதனால் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றில்லை. பெண்ணின் துணை இன்றி ஒரு ஆண் வாழ்வதும் கூட கடினமே. தாயாகவோ., தாரமாகவோ., தங்கையாகவோ., ஏதேனும் ஒரு விதத்தில் பெண்ணைச் சார்ந்தே ஆணும் இருக்கிறான். 

   பெண்மை உண்டு ஆண்களிடமும்., ஆண்மை உண்டு பெண்களிடமும்.,
பெண்களின் உடல் பலவீனத்தைக் கொண்டு அவர்களைத் தாழ்வாக ஆண்கள் எண்ணாமல்., ஆண்களை எதிரிகளைப் போல் எண்ணி , அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க பெண்கள் புறப்படாமல்., பாசம் பகிர்ந்து வாழ்ந்தால்., வாழ்க்கை பவித்ரமாக அமையும்.

                        " பெண்மையும் ஆண்மையும் ஒரு சேர உழைப்பின்.,
                          பாரினில் பிரிவுகள் பெருமளவு குறையும்"
                                         "  பாகுபாடின்றி நேசிப்போம் !!! "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...