முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒத்தப்பட்டியை நோக்கி....!!!!



சுள்ளி கொளுத்தி,
சுற்றி அமர்ந்து ,
சுகமாய் விளையாடும் சிறுவர்கள்!!!

கிண்டிக் கிளறி .,
கொக்கரித்து ஓடும்.,
பெட்டைக் கோழிகள்!!!

குச்சிகளை நட்டி.,
குறைந்த செலவில்.,
" ஸ்டெம்ப் " செய்து விளையாடும்.,
கிரிக்கெட் சிறுசுகள்!!!

கிழிந்த அழுக்குக்
கைலி கட்டி.,
"ஹெட் போனில்" பாட்டுக் கேட்கும்.,
இளசுகள்!!!

சாக்கடை மேட்டில் .,
சுத்தம் அடையும்.,
பத்துப் பாத்திரமும்.,
பாமர அம்மாக்கள்!!!

பக்கத்தில் அமர்ந்து.,
"பீடி" ஊதிக் கொல்லும்.,
ஐயப்ப பக்தர்கள்!!!

" மொபைல் போன் " டவரில் ,
" ம்யூஸிக் " வாசிக்கும்.,
மைனாக்கள்., குருவிகள்!!!

மயான பூமியில்.,
கழுகுக்கு பதிலாய்.,
வெள்ளைக் கொக்குகள்!!!

கோவில் கண்ணாடியில்.,
விபூதி அழகு பார்க்கும்.,
பள்ளிச் சிறுவர்கள்!!!

போட்டி போட்டு.,
பந்தயம் ஓடும்.,
மாட்டு வண்டிகள்!!!

பாட்டியே வடை சுட்டு
விற்கும்.,
பெட்டிக் கடைகள்!!!

ஓடி வரும்.,
கழிவு நீருடன் ,
காட்டு ஆறுகள்!!!

பச்சையாய் பூமி.,
மாறிக் கிடக்கும்.,
வயக்காடுகள்!!!!

அவசரமாய்.,
"பம்ப் செட்டை"
சாலை ஓரச்
சுவரில் திறக்கும்.,
சுட்டிச் சிறுவர்கள்!!!

எல்லா இடத்திலுமே.,
கொட்டிக் கிடக்குது.,
கோடி அழகுகள்!!!

யாவையும் அழகாய்
காட்டித் தொலைகிறது.,
ரசிக்க விழைகிறது.,
இந்தப் பேதையின் கண்கள்!!!



கருத்துகள்

  1. அடடா!
    ரசிக்க வைக்கும் காட்சிகள்;
    அதை அழகு படுத்தும் வரிகள்...!

    நல்ல படைப்பு!

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. :) :) நன்றி.. கத்துக் குட்டி நான் !!!

    பதிலளிநீக்கு
  3. Congrats for Displaying beautiful scenery in beautiful sentences.Thank U

    பதிலளிநீக்கு
  4. ஒத்தப்பட்டிக்குச்(மம்சாபுரம் அருகில் உள்ள ஒத்தப்பட்டி தான் என நினைக்கிறேன்) சென்றிருந்தும் நான் உற்று நோக்காத காட்சிகள் தங்கள் பார்வையில் கவிதை வடிவில்.... நன்று.... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. @@ கார்த்திகேயன் , மம்சாபுரம் எனக்குத் தெரியாது :) ஆனால் இந்த ஒத்தப்பட்டி மதுரை செல்லும் வழியில் உள்ளது. மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோ, ஒரே மாதிரி பெயர் இருந்ததால் அதுவென்று நினைத்துவிட்டேன்... கிராமங்கள் என்றாலே அழகு தான்.... நன்றி....

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...