முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிறுக்கல்கள்!

இராமேஸ்வரத்தில் ஒரு கோவிலின் சுவரில்
குருட்டுக் காதல் செய்யும் கூட்டத்திற்காக!!
நூதனமாய் நடக்கும்,
நட்பிற்காக!


"காதலிற்கு கண்கள் இல்லை"
கூற்றை நான் நம்பத்தான் இல்லை!

"ருபாய் நோட்டு, கோயில் சுவர்கள்,
பேருந்தின் ஜன்னல் ஓரம்!
பார்க்கும் இடமெல்லாம்,
காதலியின் பெயரையும் உன் பெயரையும்
கிறுக்கும் காதலுக்கு
கண்கள் இல்லை தான்!
நின் கண்கள் புண்கள் என உணர்ந்திடு!!
"கிறுக்குவது பெருமையோ??"

சிறப்பாக நிற்கும் ,
சரித்திரக் குறியீடுகளை,
கிறுக்கிக் கிறுக்கியே,
சீரழிக்கும் உன்னை,
சரித்திரத்தில் இடம் பெறுவாய் என
சரீரத்தை உருக்கி,
குருதியை பிரித்து,
பெற்றெடுத்த உன் அன்னை,
வெட்கி வருந்துவதை உணர்ந்திடு!!
கிறுக்குவது சரித்திரமோ??

நம் நாட்டை,
நாடி வரும்,
நூற்றுக்கணக்கான வெளிநாட்டோர்
நம்மை தூற்றுவது விருப்பமோ?
நின் குருட்டுக் காதலாலும்,
கிருக்கல்களாலும்,
நன்மை தான் இல்லை,
தீமை குறைத்திடேன்?
உன்னால் நாடே நாணுது,
உச்சியில் உரைக்கட்டும்,
உனது பிழை உணர்ந்திடு!
கிறுக்குவது இன்பமோ?

காதலர்கள் மாடுமல்ல ,
பல நல்லவர்களும் இதிலடக்கம்,
நண்பர்களும் இதிலடக்கம்!
நீ கிறுக்கிக் கிறுக்கி,
நின் பெருமை தொலைத்ததோடு,
நாட்டின் பெருமையும் ஏனடா அழிக்கிறாய்?

காகிதமும், புத்தகமும்,
தொட்டு எழுத வலிக்கும்,
கல்லூரி செல்ல கசக்கும்,
சுற்றிச் சுற்றி கோயிலிலும்,
பேருந்திலும், பொதுச் சுவரிலும்,
கிறுக்க மட்டும் இனிக்குதோடா?
முட்டாளே,
நின் முட்டாள்த் தனம் உணர்ந்திடு!

(தயவு செய்து, பொது இடங்களை தூய்மையாக, மாசு படுத்தாமல் காத்திடுங்கள்! கோயில், பேருந்து போன்ற பொதுச் சொத்துக்களை சேதம் செய்ய வேண்டா)

கருத்துகள்

  1. மிக அருமையான கவிதை
    வாழ்த்துக்கள் தோழி.

    எனினும் எழுதுங்கள்
    காத்திருக்கின்றோன்.
    உங்கள் ஆக்கத்தை திருடிவிடவே..

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி. நிச்சயமாகத் தொடர்வேன்...

    பதிலளிநீக்கு
  3. சரியாக சொன்னீர்கள்,கிறுக்குத்தனமானவர்களின் காதல்கள் இது போலத்தான் தன்னை பொது இடங்க்ளில் கிறுக்கி விளம்பரம் செய்து கொள்கிறது.இவர்கள் அசிங்கப்படுத்துவது இவர்களை மட்டுமல்ல புராதான சின்னங்களையும்,பொது இடங்களையும் தான்.அருமையான சிந்தனை பொதிந்த கவி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...