முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#4

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி!  #1 | #2  | #3 

அன்று காலை பத்து மணி, ஞாயிற்றுக் கிழமை, நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ரேணுகா.

பின்னே இருந்து ஒரு கை, அவளது கண்களை மூடியது, "ராமு சும்மா இரு.. நாடகம் பாக்கறேன்ல.. கைய எடு.."

"நாடகம் பாத்தா ஒலகத்தயே மறந்துடுவியே... ஞாயிற்று கிழமை தான் எனக்கு விடுப்பு, அன்னிக்காவது உன்னோட கொஞ்ச நேரம் செலவு பண்ணலாம்னா நாடகம் பாத்துட்டு உக்காந்துட்ற"

"ஆமா போ, அப்படியே பெருசா லட்சக் கணக்குல போட்டு வாங்கிக் குடுத்துட்ட பாரு, எங்க அப்பா என்ன எப்டி பாத்துக்கிடாங்க தெரியுமா, அவங்கள எல்லாம் விட்டுட்டு, உன்ன கல்யாணம் பண்ணேன் பாரு, என்ன கொஞ்சினா மட்டும் போதாது, சம்பாதிக்கணும், பணம் இல்லாம எதுவும் நடக்காது"

"ஏய், ஏன் எப்பப்பாரு பணம் பணம்னே பேசற, பணக்காரண கல்யாணம் பண்ணி இருந்தா புரியும் உனக்கு, பணம் இருந்திருக்கும், அத சம்பாதிக்க ஓடிருப்பானே தவிர உன்ன நல்லா பாத்ருக்கமாட்டான்."

"உடனே அறிவுரைய ஆரம்பிச்சிடாத, போ, போய் சமையல் பண்ணு, வாரம் முழுக்க நான் தான பண்றேன், இன்னிக்கு ஒரு நாள் நீ தன் பண்ணனும், போ.."

"உனக்கு இப்போ புரியாது ரேணு, ஒரு நாள் பாசமா பாத்துக்க ஆள் இல்லாம ஏங்குவ, அப்போ புரியும் உனக்கு..", சமையல் செய்ய அடுப்படியில் நுழைந்தான் ராமு(ராமச்சந்திரன்).

கால் மேல் கால் போட்டு மீண்டும் நாடகம் பார்க்கத் தொடங்கினாள் ரேணுகா.

அழுகை நிற்கவே இல்லை ரேணுகாவிற்கு, கணவன் தனக்காக பாசமாக சமைத்த நாட்கள், தன் கடும் சொல் தாங்கிய நாட்கள், நினைவை வந்து வதைத்தது.

"அப்பா எப்பம்மா வருவாங்க?", முரளியின் கேள்வி காதுள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.


அழுதவாறே படுக்கையில் யோசனையில் மூழ்கினாள் ரேணு மீண்டும்.

கல்லூரி இறுதி ஆண்டு,

"ராமு, இனி நம்ம எப்டி சந்திக்கிறது? எங்க வீட்ல எனக்கு மாப்ள பாக்க ஆரமிச்சுட்டாங்க, நீ கண்டிப்பா பெரிய மென்பொருள் நிறுவனத்-ல வேலைக்கு சேந்திடு, அப்புறம் எங்க வீட்ல பேசு, ஒத்துப்பாங்க, ஒத்துக்கலனா, நான் உன்னோட வந்துடறேன்."

"ரேணு, நான் உனக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன், எனக்கு மென்பொருள் நிறுவனத்ல வேல பாக்க விருப்பம் இல்லன்னு, நான் அரசு சேவைப் பிரிவு தேர்வுக்கு தயார் பண்ணிட்டு இருக்கேன், அது இன்னும் ஒரு 4 வருசத்துக்குள்ள நான் கண்டிப்பா தேர்ச்சி ஆகிடுவேன், என்னோட வாழ்நாள் லட்சியம் ரேணு இது, தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ, அப்புறம் பெத்தவங்க சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கணும்."

"நீ தேர்ச்சி ஆவணு என்ன நிச்சயம் ராமு, இப்போ கல்லூரியிலயே தேர்ச்சி ஆகிட்டா சம்பாதிக்கலாம் சீக்ரமா"

"சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னு, எனக்கு பிடிக்காத ஒரு வேலைய என்னால செய்ய முடியாது ரேணு, நீ எனக்காக காத்துக்கிட்டு இரு, தயவு செஞ்சு, நீ மேல படி, வீட்ல படிக்கிறேன்னு சொல்லு. இப்போதைக்கு கல்யாணம் வேணாம் நாலு வர்ஷம் போகட்டும்னு சொல்லு.."

"சரி, நான் பேசிப் பாக்கறேன், நீ நான் சொன்னா கேக்கவே மாட்ட.."


-----------------------------------------------------------------------------

என்ன நடந்தது ராமு ரேணுவுக்குள்? வாசிக்கலாம் நாளை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....