முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனவுக் கணவன்!


நீயும் நானும்!

நான், நாள் முழுக்க நடந்ததை,
இரவெல்லாம் கதையாய்ச் சொன்னால்,
"ஏன் இப்டி படுத்துற?" செல்லமா மிஞ்சி,
காதலோட கேக்கணும்!

நான் எழுதிய கவிதையெல்லாம்,
வாசிச்சு வாசிச்சுக் காட்டினா,
சலிப்புப் பார்வை பாக்றது போல,
தேவதையாப் பாக்கணும்!

வேலைக்குப் போயிட்டு வீடு வந்தா,
என்னோட கண்ணாமூச்சி ஆடனும்,
கண்டுபுடிச்சதும் சீண்டணும்,
அள்ளி உப்பு மூட்ட தூக்கணும்!

தப்புத் தப்பா செஞ்சு நின்னா,
தட்டி நாலு போடணும்,
சண்டைபோட்டுத் திட்டணும்,
என்ன அழ வைக்கணும்!

அழுது ஒரு நாள் முழுக்க,
சோகமா நானிருக்கணும்,
நாள் முடிவுல நீ வரக்குடாது,
நான் தான் மனிப்புக் கேட்கணும்!

உன் மேல தப்புன்னு,
நான் சண்ட போட்டா,
நீ, "என் தப்பு தான்டா.."
செல்லமா மன்னிப்புக் கேக்கணும்!

எனக்குக் காய்ச்சல்னா,
உனக்குப் பாதி தருவேன்,
உனக்குக் காய்ச்சல்னா,
எனக்கு நீ பாதி தரணும்!

என்னையே சுத்துற,
நாய்க்குட்டி போல இருக்கக் கூடாது,
கோபத்தைக் கொட்டுற,
எரிமலையா இருக்கக் கூடாது!

உள்ளே பாசம் இருக்கணும்,
வெளியே காட்டாம நடிக்கணும்,
நடிக்றதும் முழுசா தெரியாம,
என்னப் பாத்து சிரிக்கணும்!

நல்ல படிப்பு வேணும்,
நல்ல அறிவு வேணும்,
நாட்டு மேல கூட,
கொஞ்சம் காதல் வேணும்!

அம்மா அப்பாப் பாசம்,
நிறைய நிறைய வேணும்,
அவங்களுக்கு அடுத்துதான்,
மனைவினு நெனப்பும் வேணும்!

காதலிக்கும் நேரமெல்லாம்,
குழந்த போல இருக்கணும்,
என்னப் போல இல்லாம,
எனக்கு எதிரா இருக்கணும்!

ஓட்ட வாய் நான்,
பேசவே குடாது நீ,
தொட்டாச் சிணுங்கி நான்,
இரும்பா இருக்கணும் நீ!

பேரழகனா வேண்டாம்,
பணக்காரனா வேண்டாம்,
நல்லவனாப் போதும்,
என் மனசத் தெரிஞ்சவனா வேணும்!

சொன்னா சொல்லுவேன்,
நாள் முழுக்க,
அப்பா பாத்தா,
அடி விழுமுங்க!
:D :) :P ♥ 

கருத்துகள்

  1. எனக்குக் காய்ச்சல்னா,
    உனக்குப் பாதி தருவேன்,
    உனக்குக் காய்ச்சல்னா,
    எனக்கு நீ பாதி தரணும்!

    Seekram oru nalla kanavan kidaika vaazthukkal sagothari :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நான் யாரோன்னு நெனச்சேன், தீபக் கார்த்திக் நீங்க தானா இது. மிக்க நன்றி :)

      நீக்கு
  2. very nice. நான் எதிர் பார்த்த கவிதைகளுள் ஒன்று. நான் விரும்பிய கவிதை. அருமையான கவிதை. இப்படியொரு கவிதை கொடுத்ததுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...