முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடைந்த பொம்மை!

இது என் தோழி சிறுவர்களுக்கு ஏற்றார் போலக் கதை வேண்டும் என்று கேட்டதால் எழுதியது.
அதனால நீங்களும் சிறுபிள்ளையாக உங்களை பாவித்துக் கொண்டு வாசிக்க ஆரம்பிங்க.

அன்னைக்கு கமலேசோட அப்பா ஊர்ல இருந்து வந்தாங்க. கமலேசுக்கு அவ்வளவு ஆனந்தம். அப்பா வருவாங்க வருவாங்கன்னு வாசல்லயே
நின்னுட்டு இருந்தான். அவனோட அப்பா ரொம்ப நாள் கழிச்சி, ஊர்ல இருந்து வந்துட்டு இருந்தாங்க. அதனால ரொம்ப ஆசையா இருந்தான்.

வந்துட்டாங்க அப்பா. தூரத்துல அப்பா வண்டி வரத பாத்ததுமே, குதிக்க ஆரம்பிச்சுட்டான். அப்பா அவனுக்காக ஒரு பூனை பொம்ம வாங்கிட்டு வந்திருந்தாங்க. அதுல இருந்து, அந்த பொம்ம தான் அவனோடநெருங்கிய தோழன். தூங்குவான் அது கூட தான், வெளயாடுவான், சாப்டுவான், எல்லாம் அந்த பொம்மையோட தான்.

அது ஒரு பீங்கான் பொம்ம. கீழ போட்டா உடைஞ்சிடும். உண்டியல் மாதிரி காசும் சேத்து வைக்கலாம் அதுல. காசு நெறஞ்சுட்டா அந்த உண்டியல் பொம்மைய ஒடச்சு தான் எடுக்கணும்.

கமலேசும் சேத்து வச்சான் காசு அதுல. முழு உண்டியலும் ஒரு நாள் நெறஞ்சிடிச்சு. அம்மா சொன்னாங்க ஒடச்சு காச எடுடா, வேற உண்டியல் வாங்கலாம்னு. அந்தக் காசு வருமைல இருக்கிற அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கும்னு சொன்னாங்க.

ஆனா கமலேசுக்கு ஒடைக்க மனசே வரல. அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் ஒடைக்கல. அந்த பொம்மைய அவன் உசுரா நெனச்சான்.

ஒரு நாள், ரோட்ல நடந்து போயிட்டு இருந்தாங்க அவனும் அவனோட அம்மாவும். அப்போ தெருவுல எல்லாருக்கும் துண்டுச் சீட்டு குடுத்துட்டு இருந்தாங்க சிலர்.

அதா அவங்க அம்மாவும் வாங்குனாங்க. அவன் அம்மா கிட்ட, அது என்னனு கேட்டான்.

அம்மா சொன்னாங்க, இது ஒரு வேண்டுகோள். ஒரு குட்டி பையனுக்கு ஒடம்பு சரி இல்லையாம், அவனுக்கு அறுவை சிகிச்சை பண்ண, ரொம்ப செலவாகுமாம், அதுக்கு உதவி கேட்ருக்காங்க-னு அவங்க அம்மா சொன்னதும், அவன் "நம்ம உதவி செயலாம் மா"னு சொல்றான்.

நம்ம கிட்டயே காசு இல்ல, நம்மளால முடியாதுன்னு அம்மா சொல்லறாங்க.

வீட்டுக்குப் போனதும் உண்டியல ஓடைகிறான் கமலேசு. அவன் முகம் கொஞ்சம் வாடி இருந்தாலும், "அம்மா இந்த காச குடுக்கலாம்" னு சொல்லி சிரிக்கிறான்.

அவன இருக்க கட்டிக்கறாங்க அவங்க அம்மா.

நீதி:
நமக்கு பிடிச்ச பொருளா இருந்தாலும், அதால அடுத்தவங்களுக்கு நல்லதுனா, அத நம்ம இழக்கறதுல தப்பு இல்ல.
எதிர் பார்ப்பு இல்லாம, யோசிக்காம உதவனும். நமக்கு இழப்பு ஆகுதேன்னு நினைக்காம, உதவனும்.

கருத்துகள்

  1. கதையைப் படித்ததும், இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருந்த ஈரம் குபுக் என்று கண்களுக்கு வந்துவிட்டது. அருமை !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...