முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #7 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்:

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6

அன்னைக்கு நான் வேலைல இருந்து வீட்டுக்கு வந்தேன். எங்க வீடே ரொம்பச் சிறுசு, அதுல அத்தன பேர் இருந்தத பாத்தப்போ, அப்பா, எனக்கு உள்ள நாளைய எடமும் இல்ல, மனசும் இல்ல.

எதுக்கு இத்தன பேர் இருக்காங்க... புரியாம நின்னுட்டு இருந்த என்ன, பின்னாடி கூடி வந்து அடிச்சு "ஏய்.. ஓவம்மா உன்ன பொண்ணு கேட்டு இந்தக் கடி நாய்ப் பயலோட அம்மா, சொந்தக்காரங்கள எல்லாம் கூட்டிட்டு வந்திருக்குடி.... உங்க அத்த பேசுறதப் பாத்தா, அவனுக்கே உன்னக் கட்டி வச்சிரும் போலடி.. உன் கனவெல்லாம் கனவு தான் இனி, என்னைக்கும் நெசமாகாது..", இப்படிப் பக்கத்து வீட்டுக்காரி சொன்னதும், எனக்கு "அய்யோ"னு ஆகிடுச்சு.

வேகமா வந்துச்சு எங்க அத்த, "வாமா ராசாத்தி.. என்னடா மெலிஞ்சு போயிருக்க.. நம்ம வீட்டுக்கு வந்தப்பரம் பாரு, உன்ன எப்படிப் பாத்துக்கறேன்னு. சும்மா கொலு கொலு னு கொண்டு வந்துருவேன் பாரு..", என் கன்னத்தக் கில்லி கொஞ்சித் தள்ளிடுச்சு அந்த அத்த, அதாவது கடிநாயோட அம்மா...

அந்தத்த என் கன்னத்த விட்டதும், வீட்ட சுத்தி பாத்தேன், ஒரே கூட்டம், இருந்த ஒரு ரூமையும்(அறை) முழுசா அடைச்சு உக்காந்திருந்தாங்க. நடுவுல ஒரு சேரப்(நாற்காலி)  போட்டு உக்காந்திருந்தான் அவன். என்னப் பாத்ததும் என்னைக்கும் இல்லாம அன்னைக்கு அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சான் என்னப் பாத்து...

ஒரு நிமிஷம் எனக்கே என்னவோ செஞ்சுச்சு அந்த சிரிப்புல. கள்ளப் பய, எப்படி சண்டை புடிப்பான், இன்னிக்கி இப்படிச் சிரிக்கிறானேனு நெனச்சேன்.

எங்க அத்த என்கிட்டக் கேட்டுச்சு, என்னம்மா சேகரக் கட்டிகிரியா? னு.

எனக்கு விருப்பம் இல்ல, யோசிச்சுக்கிட்டு நின்னேன்.

என்னம்மா, விருப்பம் இல்லியா?

என்னோட கனவா சொல்ல முடியும், அப்படிச் சொன்னாலும் தான், ஊர் என்ன பேசும், "கஞ்சிக்கு வழி இல்லாத கழுத, ராசா வேணுமாம்ல" னு பேசுவாங்க.

மனச மறச்சிக்கிட்டு "அப்படி இல்லத்தே.." சொன்னது தான் தாமதம், எங்காத்த ஓடிருச்சி, "ஓவம்மாவுக்கு சம்மதமாம்.." சொல்லிடுச்சு அங்க கூடி இருந்த அத்தன பேருக்கும்.

எனக்கு பக்குன்னு இருந்தது, "புடிகாதுனு இல்ல அவன.. அதுக்குன்னு எனக்கு அவனப் புடிக்கும்னும் இல்ல..."

தோ, அந்நில இருந்து, அவன் என் பின்னாடியே வரதும், சண்டைய விட்டுட்டு சிரிக்கிறதுமா இருந்தான்.

எனக்கு என்ன செய்றதுனே தெரில.

ஆனா, நான் நெனச்ச மாதிரியே எனக்கு ராச குமாரனோட கல்யாணம் நடந்தது.

------------------------

ஓவம்மா பேசுவாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்...