முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #8 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்:

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6 | 7

நாள் ஓடிக்கிட்டே இருந்தது. அடுத்து ரெண்டு மாசத்துல எனக்கும் கடிநாயிக்கும் கல்யாணம். எனக்கு அவன் எம்மேல எம்புட்டு உசுரா இருக்கான்னு தெரியும், ஆனாலும், ஆச வரல எனக்கு அவன் மேல.

என்கிட்டே வந்து அவன் சிரிக்கிறதும், கொஞ்சலாப் பேசுரதுமா இருந்தான். பழையபடி இல்லாம, சண்டை போடாம, ஏன் இவன் இப்புடி மாறுனான்? எனக்கு நெனைக்க நெனைக்க ஆச்சர்யம்!

இப்பிடியே போயிட்டு இருந்தது. தெனமும் நான் வேலைக்குப் போயிட்டு வர்றப்போ, எங்கூடவே வருவான். எனக்கு எரிச்சலா இருக்கும். அய்யோ.. இவனப் போய் கட்டிக்க வேண்டியதாப் போச்சேன்னு நெனப்பேன்.

ஒரு நாள் இதே மாதிரி, வேல முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வீட்டுக்குள்ள நொழஞ்சேன், யாரோ வந்திருந்தாங்க, அவுங்க யாருன்னு தெரியாம, முழிச்சிக்கிட்டே உள்ள போயிட்டேன்.

அவங்க பேசுரதக் கேட்டதுக்கு அப்பறமா தான் புரிஞ்சது எனக்கு, அவங்க என்ன பொண்ணு கேட்டு வந்திருக்காங்கன்னு.

அங்க என் கூட வந்த கடிநாய், உண்மையாவே கடிநாயா மாறி, வந்த அந்த ஆளுங்க கூட சண்டை போடா ஆரம்பிச்சி இருந்தான்.

வந்த ரெண்டு பேருமே, கொஞ்ச வயசுக்காரங்களா இருந்தாங்க. அதுல கொஞ்சம் செவப்பா முழுக்கால் சட்ட போட்டு, முழுக்கைச் சட்ட போட்ருந்தவர்  தான் என்னப் பாத்துப் புடிச்சுப் போய், பொண்ணு கேக்க வந்திருக்றதா சொன்னாரு.

கடிநாய்க்கு வந்த கோவத்துல, ஊரையே கூட்டிடான். "இவ எனக்கு பேசி முடிச்சவ, என்ன தைரியத்துலடா வந்தீங்க...", இப்படி ஆரம்பிச்சு, கேட்ட வார்த்தை சரளமா வந்துச்சு அவன் வாய்ல.

எனக்கு கேக்கவே முடியல. ஊரே கூடிருச்சு. என்னக் கேட்டு வந்த அந்தச் செவத்த ஆழு பெரிய கட வச்சிருக்காராம். நான் துணி தொவைக்கப் போனப்போ, என்ன வழில எங்கயோ பாத்ருக்காரு, புடிச்சுப் போச்சுன்னு வந்திருக்காரு. பணக்காரர். படிச்சவர்.

எங்க அத்தைக்கு என்ன சொல்லனு தெரியல, படிச்ச, பணக்கார மாப்பிள்ளை, குடுக்கலாமானு ஒரு யோசனை, மறுபக்கம், கடிநாய்க்கும் எனக்கும் பேசி முடிச்சாக்கேனு தயக்கம்.

கடி நாய் மட்டும், சும்மாவே இருக்கல, சண்ட, கேட்ட வார்த்த, இதெல்லாம் அவனுக்கு உள்ளயே ஊருனது. சட்டையைப் புடிச்சு, அந்த பணக்கார மாப்பிள்ளைய, அடிச்சான்.

ஊர் காரங்க வெலக்கி விட்டாங்க இவங்க சண்டைய.

"என்னய்யா, இவங்க ரெண்டு பேருக்கும் புடிக்குது சரி, ஆனா அந்தப் புள்ளைக்கு யாரப் புடிக்குதோ, அவங்களுக்குத்தானையா கட்டி வைக்க முடியும், அதக் கூப்புடுங்க.", கூட்டத்துல பெரியாலு ஒருத்தர் இப்படிக் கொளுத்திப் போட, என்னக் கூப்டாங்க.

என்ன செய்றதுன்னு தெரியாமத் தயங்கி நின்னேன். கடி நாய்க்கு எம்மேல அம்புட்டு ஆச, ஆனாலும், மொரடன், ஊர் சுத்தி, நிலையான வேல கெடையாது.

நான் கனவு கனவு கண்டது மாதிரி ராச குமாரன் இவரு.

ரெண்டு பேருல யாரக் கை நீட்டனு தெரியாம திகைச்சு நின்னேன்.

"சொல்லுமா... ரெண்டு பேருல யாரப் பிடிச்சிருக்கு..? சொல்லு.." எல்லாரும் கட்டாயப் படுத்த, யோசிச்சு நின்னேன்..

--------------------------------
யாரை ஓவம்மா திருமணம் செய்தால்? வாசிக்கலாம், அடுத்த பகுதியில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...