முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அத்தனைக்கும் ஆசைப்படு!


ஆயிரம் கனவுகள் இருந்தபோதும்,
ஒருசில மட்டுமே நனவாகும்!
கோடிகள் அதிலே இருந்துவிட்டால்,
ஆயிரம் நனவாகும் வாய்ப்பு தரும்!

நினைவு தெரிந்த நாள் முதலாய்,
ஆசை நிறைய, நிறைய உண்டு.
களிமண் பொம்மை உடைய வேண்டாம்,
காகிதக் கப்பல் கிழிய வேண்டாம்.

பாலின் நிறம் வெண்மை வேண்டாம்,
புல்லின் நிறம் பசுமை வேண்டாம்.
"இப்படி ஆசை இருந்த போது,
எப்படியம்மா நிறைவேறும்?
அது எப்படியம்மா நிறைவேறும்?"

இப்படி சொன்ன சிலருக்காக,
நல்லன சில நான் ஆசைப்பட்டேன்!
நம் நாட்டவர் கண்ணீர் கலைந்திடவும்,
சோகங்கள் எல்லாம் அழிந்திடவும்.

இதற்கும் இல்லை என்று சொன்னால்,
பேதை எங்கே சென்றிடுவேன்,
"அத்தனைக்கும் ஆசைப்படு"
சொன்னது யார்?
சொல்லுங்கள் அவரிடம்,
ஆசையே சாபம் என்று!

கருத்துகள்

  1. // சொல்லுங்கள் அவரிடம்,
    ஆசையே சாபம் என்று!// அழகாய் முடித்தீர்கள்

    //நம் நாட்டவர் கண்ணீர் கலைந்திடவும்,
    சோகங்கள் எல்லாம் அழிந்திடவும்.// மாற்றம் வேண்டும் என்று ஆசைப்படுவோம்.... ஆசைக்கும் கனவிற்கும் வித்தியாசம் நூலளவு தான்.. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மை தான். ஆசைபட்டுக் கொண்டு சும்மா இருக்காமல் ஏதேனும் செயலில் செய்தால் நன்மை தான்.

      நீக்கு
  2. எனக்கு மட்டும் அந்த சிவபெருமானை போல் 'வரம்' கொடுக்கும் 'சக்தி' இருந்திருந்தால்.... இந்தா பிடி என்று தங்களுக்கு வரம் அருளியிருக்கலாம் என்ன செய்வது எனக்கு அந்த சக்தி இல்லையே :) :)

    எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி! தொடர்ந்து கவி மழை பெய்யட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி :) :) கவி மழை பொழியும். தொடர்ந்து நனைய வாருங்கள்! :)

      நீக்கு
  3. ஆசை சாபம் அன்று அதை மெய்யாக்கும் முயற்சி இல்லாமல் சோம்பி விதியையும் , காலத்தையும் , மற்றவரையும் குறை கூறுவதே சாபம்

    கவிதை வரிகள் அருமை ஆனால் பொருள் தான் கொஞ்சம் உதைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்.. சிலசமயம் எவ்வளவு முயன்றாலும் சில காரியங்கள் நடப்பதில்லயே? அதான் அப்படி எழுதினேன்.

      நன்றி.

      நீக்கு
  4. அத்தனைக்கும் ''ஆசைப்படு''
    காலம் வரும்வரை காத்திரு,,
    கொடுத்த கடமையை சரிவர செய்திடு
    கோடிகளும் நினைவாகும்...!

    நல்லது கண்மனி!!

    ஏன் ''நம்ம'' பக்கம் நேற்று வரவில்லை..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் நனவாகும்.
      நன்றி.
      மன்னிக்கவும். கல்லூரியில் வைத்து இந்தப் பதிவு செய்தேன்.
      சிறிது நேரம் தான் இணைப்புக் கிடைத்தது. அதான் பதிவு போட இயலவில்லை

      நீக்கு
  5. சரிதான்....ஆசையே அனைத்திற்கும் காரணம்...இப்ப நீங்க படுவது கூட ஆசைதான்...ஆசை சாபம் மற்றும் வரம் இரண்டின் சேர்க்கை..இப்ப நீங்க இணையம் வழி எழுதுவது கூட ஆசையின் வெளிப்பாடுதான்.ஆசைபடுங்கள்,ஆசைபடாதிருக்க ஆசைப்படுங்கள்..
    தொழிற்களத்தில் என் முதல் சிறுகதை மறக்காமல் வாசிங்க: http://tk.makkalsanthai.com/2012/09/godshortstory.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) :) ஆசைப்படாமல் யாராலும் இருக்க முடியாது என்பது தானே உண்மை! நன்றி...

      நீக்கு
  6. பாத்துங்க , ஜக்கி வாசுதேவ் உங்க மேல வழக்கு போட்டுட போறார்.

    பதிலளிநீக்கு
  7. Ahem ahem..from where you looted this title :P :P

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...