முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரோஜா மலர்ந்தது இன்று!

உங்களோடு பேசியதுண்டா?
ரோஜா மலர்?
உங்களோடு பேசியதுண்டா?

அழகாய் சிரித்ததுண்டா?
ரோஜா மலர், 
உங்களைப் பார்த்து 
அழகாய் சிரித்ததுண்டா?

உங்கள் இன்பத்தில்,
உங்கள் துன்பத்தில்,
தோள்  கொடுத்து,
தாங்கியதுண்டா?

இல்லையோ?
நீங்கள் கொடுத்து வைத்தது,
அவ்வளவு தானோ?
ஆனால்,
நான் கொடுத்து வைத்தது,
எவ்வளவோ!

என் தோட்டத்து,
வெள்ளை ரோஜா,
இன்று மலர்ந்த,
நல்ல ரோஜா.

என்னோடு,
தினமும் என்னோடு,
தித்திப்பாய் பேசிடும்,
அழகாய் வாசம் சுமந்து,
அன்பாய் பார்வை பார்க்கும்.

பனிக்காற்றில் என் ரோஜாவோடு,
பனிக்கூழ் சாப்பிட்டதுண்டு,
வெயிலில் என் ரோஜாவோடு,
குடையில் சென்றதுண்டு!




என்றும் வாடாத,
வெள்ளை ரோஜா,
என்றும் என் மனம்,
கொள்ளை கொள்ளும் ரோஜா!

மலர்கள் என்றுமே,
நமக்கு நல்ல தோழிகளாம்;
என் ரோஜா போல,
மலர்கள் என்றுமே,
நமக்கு நல்ல தோழிகளாம்!







இதோ, இன்று பூத்த,
என் வெள்ளை ரோஜாவுக்கு,
வாழ்த்து சொல்லுங்கள்,
பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லுங்கள்!


## இன்று என் தோழி "ரோஜாவுக்குப்" (அவள் பெயர் ரோஜா, என் தோட்டத்துப் பூ என்று நினைத்துவிடாதீர்கள்) பிறந்த நாள், அவளுக்காக எழுதியது இது.


கருத்துகள்

  1. ரசனைமிக்க பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருமை. உங்கள் தோழிக்கு என் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்லா இருக்குங்க... எனது வாழ்த்தையும் மறக்காமல் சொல்லிடுங்க...

    பதிலளிநீக்கு
  3. எத்தனை அருமையான பிறந்தநாள் வாழ்த்து!கவிதை பாடும் கண்மணியை தோழியாக அடைந்ததற்கு பாராட்டுக்கள்!
    எங்கள் வாழ்த்துக்களையும் உங்கள் தோழிக்குச் சொல்லுங்கள்.

    பி.கு.: எனது பிறந்த நாளை முன் கூட்டியே அறிவிக்கிறேன். ஒரு கவிதை ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) கண்டிப்பாமா, உங்க பிறந்த நாளுக்கும் ஒரு கவிதை உண்டு :)

      நன்றி... :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...