முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாவமடி நான்!


உண்மையில் எனக்குத் தெரியாது!
புத்தகம் படிக்கத் தெரிந்த அளவு,
பிறரது புத்தியைப் படிக்க!

கடினம் தான் எனக்கு,
கணிதம் போடுவதோடு சேர்த்து,
கொஞ்சம் ஞாபகம் கொள்வதும்!

எல்லோரும் கேலி செய்தீர்கள்,
கேலி என்ன கேலி?
கோபமே கொண்டீர்கள்!
உண்மை தான்,
பாடப் புத்தகத்தில் வரும்,
வைரஸ்கிருமியின்
பெயர்களை நினைவில்
பதிய வைத்துக் கொண்டேன்!

ஏனோ, மனிதரின் பெயர்கள்,
மனதில் பதியவே மறுக்கிறது,
அடிக்கடி மறக்கிறது!

பெயர் தான் மறந்ததே தவிர,
பாசம் மறப்பதில்லை!
பிரிவும் பிடிப்பதில்லை!


அதோ, அன்றொரு நாள்,
எனக்கு தேநீர் வாங்கித் தந்தாயே,
நீயும் நானும் ஒரே சாலையில்,
நடந்து போனோமே?

பனிக்கூழ் வாங்கக் கூடாது,
பாட வேண்டும் நான்,
மறுவாரம்,
பாட்டுப் போட்டி எனக்கு,
பாசமாய் சொல்வாயே,
பனிக்கூழ் சாப்பிடாதே என்று!

"படம் வரஞ்சு தா பிரியா"
நான் கேட்க,
எனக்காக படம்,
அழகான படம் 
வரைந்து நீ தர,

 அதை வாங்கி,
அழகாய் பையில் 
போட்டுக் கொண்டேனே?
தீபாவளி வாழ்த்துச் சொல்லி?

அதில் "கண்ணு",
நீ எழுதிய வார்த்தையில் இருந்த,
நிகரில்லா அன்பு,
மறக்கவில்லையடி எனக்கு!

எல்லாமே எனக்கு மறந்து போகும்,
நினைவு படுத்த நீ இருக்க,
மறந்தாலும் வருந்தவில்லை இதுவரை!

உண்மை தான்,
சுயநலக் காரியோ நான்?
எதுவுமே உனக்காக செய்ததாக,
நினைவிருக்கவில்லை எனக்கு!

உண்மை தான்,
பாசம் தெரியாதவளோ நான்?
பாவம் என்னை நேசிக்கும்,
உன் போன்ற தோழிகள் எல்லாம்!

உண்மை தான்,
நாடகக் காரியோ நான்?
ஞாபக மறதி எனக்கு,
பாடம் தவிர மற்ற விசயங்களில் எல்லாம்!

அய்யோ! இதுவரை மறந்தால்,
நீ இருந்தாய் அருகில்,
நினைவூட்டி வழிநடத்த,
நீ கோபம் கொண்ட பிறகு,
அட, யார் இருப்பார் நினைவூட்ட?

பேசாமல் போகாதேடி,
பாவம் உந்தன் கண்ணுமணி!
பிரியா, பேசாமல் போகாதேடி,
பாவம் நான் உன் செல்லமடி!

இனி இப்படிச் செய்யமாட்டேன்,
மன்னிப்புக் கேட்க மாட்டேன்,
கண்ணீர் வந்தாலும்,
தோழி பேசவில்லையே,
கண்ணீரோடு ஏக்கம் நிறைந்தாலும்,
மன்னிப்புக் கேட்க மாட்டேன்!

பெருமிதக் காரியோ நான்?
பொய்சொல்லியோ நான்?
எப்படி இருந்தாலும் இருக்கட்டும்!
ஏற்றுக் கொள்வேன் எல்லாம்!

ஆனால், பேசாமல் போகாதேடி,
பாவம் உந்தன் கண்மணி!
என் தோழி, பேசாமல் போகாதேடி,
சோகம் என்னை சூழுமடி!

சுயநலம் இருக்கலாம்,
ஜோடிப்பு இருக்கலாம்,
துரோகம் கூட இருக்கலாம்!

என்ன தான் இருந்தாலும்,
உரிமை உள்ளது எனக்கு,
உன்னிடம் உரிமை உள்ளது எனக்கு,
பேசிவிடு, பாவமடி நான்!
:'(  :'( 

கருத்துகள்

  1. semma touching Kannu :)
    Hope you and your friend will sort out the issues soon :) Wish you a happy life :)

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. பெயரிலேயே பிரியம் கொண்டவர்
    பிரியாவிடை எப்படி பெறுவார்?

    பிரிவு விரைவில் பிரியும்
    உங்களை விட்டு...

    பிரியம் கை கூடட்டும்
    பிரிவை விட்டு ....

    ஓ ... சிறந்த பேச்சாளி , கவிஞர், எழுத்தாளர், படிப்பில் முதல் மாணவி என்று தெரியும், பாடகி கூடவா? வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் பாடுவேன் கொஞ்சம். என் வலைப்பூவில் கூட ஒரு சில பாடல்கள் இருக்கின்றன, கேட்டுப் பாருங்களேன்?

      நாங்கள் சேர்ந்துவிட்டோம், நன்றி :)

      நீக்கு
  4. பெருமிதக் காரியோ நான்?
    போயசொல்லோயோ நான்?

    இதில் ஏதோ நெருடல் தெரிகிறதே , கவனிக்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) ஆம், தட்டச்சுப் பிழை! பொய் சொல்லியோ நான், அது தவறாக பதிந்து இருக்கிறது. சரி செய்துவிட்டேன். நன்றி :)

      நீக்கு
    2. செழியனுக்கு ஆசிரியர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன :-)

      நீக்கு
    3. ஆமா! சரியா சொன்னிங்க. கடுமையான ஆசிரியர்! :) :)

      நீக்கு
  5. சோகத்தை கூட அந்தக்கால கவிஞர் போல், இந்தக்கால சினிமாக்காரகள் போல் கவிதை பாடி வெளிப்படுத்துகிறீர்கள்.. நல்ல கவிதை.. எந்த நல்ல நட்பும் சண்டையால் பிரிந்ததில்லை.. சீக்கிரம் உங்கள் தோழி உங்களிடம் பேசுவார், புது உத்வேகத்துடன், அதிகமான அன்புடன்.. வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) சமாதானம் ஆகிவிட்டோம் நாங்கள்! :) நன்றி :)

      நீக்கு
  6. தோழியின் கோவம் எவ்வளவு தூரம் உன்னை பாதித்திருக்கிறது என்று உன் வரிகளில் தெரிகிறது கண்மணி!
    பிரியா! எங்கள் கண்மணி நீங்கள் பேசாததால் மிகவும் தவிக்கிறாள், சீக்கிரம் பேசிவிடுங்கள்!

    இன்னும் கொஞ்சநாள் பேசாமல் இருந்தால் எங்களுக்கு இதைப் போன்று இன்னொரு அற்புதமான கவிதை கிடைக்கும் ஆனாலும் கண்மணி பாவம், உங்கள் செல்லம் அதனால் உடனே பேசுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நன்றி மா, பிரியா சமாதானம் ஆகியாச்சு! :) நன்றி :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...