முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யார் சொன்னது? (அழகின் ரகசியம்)

Beauty

வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்!

நொறுங்கிப் போகச் செய்தாய்,
நன்றாக இல்லை என்றாய்,
ஆனால், யார் நீ கணிப்பதற்கு,
நீயே குறைகளோடு இருக்கையில்?
உன்னிடம் நிறைய இருக்கிறது,
நீ மாற்றிக் கொள்ள வேண்டியது!
ஆனால், நான் என வருகையில்,
வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்!

நான் அழகு தேவதை அல்ல,
ஆனால் நான் அழகி தான்!

உனக்கு உரிமை உண்டு,
அழகான வாழ்க்கை வாழ!

யார் சொன்னது?
யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று?
யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று?
யார் சொன்னது, நீ மட்டும் தான்
காயப்படுத்துகிறாய் என்று?
நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே,
யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று?
யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று?
யார் சொன்னது?

இது சற்று வேடிக்கை தான்,
வேறு எதுவும் வேடிக்கையாக இல்லை,
நீ மட்டும் வேடிக்கையோ?
நீ புரியவை உன்னை அவர்களுக்கு!
அவர்கள் உண்மையை மறைப்பார்கள்,
அது வெளிச்சத்தைக் காணாத,
ஒரு கலை போன்றது!
உன்னை விண்மீன்களுக்கு
கீழே வைத்து,
வானத்தைத் தொட,
விடவேமாட்டார்கள்!


நான் அழகு தேவதை அல்ல,
ஆனால் நான் அழகி தான்!


உனக்கு உரிமை உண்டு,
அழகான வாழ்க்கை வாழ!


யார் சொன்னது?
யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று?
யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று?
யார் சொன்னது, நீ மட்டும் தான்
காயப்படுத்துகிறாய் என்று?
நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே,
யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று?
யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று?
யார் சொன்னது?

யார் சொன்னது,
உனக்குத் திறமை இல்லை என்று?
யார் சொன்னது, உனக்கு மேன்மை இல்லையென்று?
யார் சொன்னது, நீ திரையில் மின்ன முடியாதென்று?
நான் சொல்வதைக் கேள்!
நான் சொல்வதைக் கேள்!
யார் சொன்னது, நீ தேறமாட்டாய் என்று?
யார் சொன்னது, நீ உன்னதம் இல்லையென்று?
யார் சொன்னது? யார் சொன்னது?
சொல்லாயோ என்னிடம்?
ஆம், யார் சொன்னது?

யார் சொன்னது?
நீ அழகில்லை என்று யார் சொன்னது?





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

இது who says என்னும் ஒரு ஆங்கிலப் பாடலின் மொழி பெயர்ப்பு. சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்தப் பாடல் போல அதே இசையில் பாட இயலாது, ஆனால், அதே அர்த்தம் வருமாறு எழுதி இருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்தது இந்தப் பாடலைக் கேட்ட உடன். எல்லோரும் குறை தான் சொல்வார்கள், நீ அழகில்லை என்பார்கள், ஆனால், உண்மையில் புற அழகை விட, அக அழகே உயர்ந்தது - என்பது போன்ற பொருள் வருவதாக எனக்குப் புரிந்தது இந்தப் பாடலில். சரியாகப் புரிந்து கொண்டேனா என்று தெரியவில்ல்லை.

யார் என்ன சொன்னாலும், நாம் நமக்குப் பிடித்ததை, சிறப்பாகச் செய்து வந்தால்,
நம்மீது நாம் நம்பிக்கை வைத்து, ஊக்குவித்து, நம்மை நாமே தட்டிக் கொடுத்து வாழ்ந்து வந்தால், வெற்றி நிச்சயம்!

உலகின் பார்வைக்கு அழகாகத் தோன்ற, அழகு தேவதையாய் இருக்க அவசியம் இல்லை, நமக்கு நாம் அழகியாக, அழகான செயல்கள் செய்பவராய் இருந்தால் போதும், சரி தானே?

அப்படித் தானே உங்கள் அம்மாவும், என் அம்மாவும் அழகாக இருக்கிறார்கள்?

கருத்துகள்

  1. /// நாம் நமக்கு பிடித்ததை... ///

    ரசித்து மொழி பெயர்ப்பு செய்து உள்ளீர்கள்...

    சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல கருத்துக்கள்.. நம்மின் முதல் காதலன், முதல் ரசிகன் நாமாகத்தான் இருக்க வேண்டும்.. தன்னம்பிக்கைக்கு அச்சாரம் இந்த சுய ரசிப்புத்தன்மை தான்.. வாசிக்கும் போதே நல்ல ஊக்கம் கொடுக்கும் பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம், நன்றாக இருந்தது கேட்கும் போது, அதனால் தான் மொழி பெயர்த்தேன். நன்றி.

      நீக்கு
  3. இந்த பதிவில் நீங்கள் போட்டிருக்கும் ஹெலென் கெல்லரின் வாசகத்தை பார்க்கும் போது, கீட்ஸ் “Ode on an Greecian Urn" என்னும் பாடலில் சொல்லிய "Heard melodies are sweet, Unheard melodies are sweeter" என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. மேம்போக்காக பார்த்தால் சாதரணமாக இருக்கும் இது, கொஞ்சம் யோசித்துப்பார்த்தல் மிக மிக ஆழமான கருத்தாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், சாதாரணமாக தெரியும் பல விஷயங்கள், உற்று நோக்கினால் மிகவும் சிறப்பானவை என்பது புரியும்.

      நீக்கு
  4. கவிதை அற்புதம் !! அழகான வரிகள். மொழிபெயர்ப்பும் உறுத்தவில்லை !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி. இந்தக் கவிதை முழுவதுமே மொழிபெயர்ப்பு தான்.
      நன்றி :)

      நீக்கு
  5. பெயரில்லா5/05/2013 10:50 PM

    நல்லா இருக்கு கண்மணி. ஆனால் ஆங்கில பாடல்களை அப்படியே வார்த்தை மாறாமல் மொழிபெயர்க்க வேணுமா என்ன. கருத்து அந்த பாடல் உடையதாய் இருந்தாலும் நம் பாணியில் எழுதலாம்ல. ஒருமுறை அதை முயற்சி செய்து பாரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம் சரி முயற்சி செய்து பார்கிறேன் :) நன்றி!

      நீக்கு
  6. பெயரில்லா7/24/2014 2:37 AM

    Selena gomez who says thane
    super translation

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...