முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னோடே போகட்டும்!

சில நேரம் சொல்ல நினைத்து,
sad
பல நேரம் மூடி மறைத்த,
உண்மைகள் என்னோடே
புதைந்து போகட்டும்!

வெளியே சொல்லி,
வேதனை அடைவதிலும்,
உள்ளே வைத்து,
வாடிவிடுகிறேன்,
என்னுடைய வேதனை,
இப்படியே போகட்டும்!

பெருமையாகச் சொல்ல,
பெரும் சாதனைகள் அல்ல,
பொறுமி அழக்கூடிய,
பெரும் வேதனைகள்,
என் பாவங்கள் எல்லாம்,
இப்படியே போகட்டும்!

இதோ அவள் சொல்கிறாள்,
இன்று ஒருத்தி சொல்கிறாள்,
அவள் கதைகள் என்று,
எதையோ எதை எதையோ!

அந்தக் கதைகள் அத்தனையும்,
அவள் பார்வையில் இன்பம்!
ஆனால், எனக்கோ?
ஏடாகூடம்!

வேண்டாம் வேண்டாம்!
யாரிடமும் சொல்ல வேண்டாம்!
என் ரகசியங்கள்,
எனக்கு மட்டும் தெரிந்த,
என் ரகசியங்கள்,
சில நேரம் சொல்ல நினைத்து,
பல நேரம் மூடி மறைத்த,
உண்மைகள் என்னோடே
புதைந்து போகட்டும்!

எனக்குள்ளே தினமும்,
நானே சொல்லிக் கொள்ளும்,
இந்த ரணம் நிறைந்த ரகசியங்கள்!
என்னோடே போகட்டும்!

நம்பிச் சொல்ல,
யாருமே இல்லை,
எனக்குள்ளே தினமும்,
நானே சொல்லிக் கொள்ளும்,
என் மெல்லிய சோகங்கள்,
சிறு பெரு ஏமாற்றங்கள்,
என்னோடே புதைந்து போகட்டும்!

யாரையும் நம்ப,
இனியும் விருப்பம் இல்லை,
என் மனமே உன்னோடே,
அவை புதைந்து போகட்டும்!
என்னோடே அவை,
அழிந்து போகட்டும்!

என்னை விட எனக்கு,
 நல்ல தோழி இல்லை,
ஆதலால் அவை,
என்னோடே போகட்டும்!

என் சோகம் யாரும்,
தாங்கிக் கொள்ள வேண்டாம்!
ஆதலால் அவை,
என்னோடே போகட்டும்!
அய்யோ! விட்டுவிடுங்கள்,
அவை என்னோடே போகட்டும்!

கருத்துகள்

  1. அப்படித்தான் இருக்கோணும்...!

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி...! :) பிழைகளை சரி செய்துவிட்டேன்!

      நீக்கு
  2. இந்த மாதிரி சூழ்நிலைகளில் தான் சுவாமி ராம்குமாரானந்தாவின் பொன்மொழியை நாம் மனதில் நிறுத்த வேண்டும்.. அது, “வாழ்க்கை தான் நம்மள வெறுக்கணும்.. நாம வாழ்க்கைய வெறுக்க கூடாது”..

    ஏன் சோகம்? எதற்காக வருத்தம்? இந்த உலகில் நம்மை சந்தோசப்படுத்தவோ, வருத்தப்படுத்தவோ நம்மை தவிர வேறு யாராலும் முடியாது என்கிற நிலைக்கு பழகிக்கொண்டால் எந்த சூழலிலும் நமக்கு பேரானந்தமோ, பெருந்துன்பமோ வரவே வராது..

    நல்ல கவிதை.. கவிதையாக மட்டும் இருக்க வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) சரிங்க சுவாமி ராம்குமாரானந்தா! இது சும்மா எழுதுனது தான். எனக்குத் தெரிஞ்சவங்களோட அனுபவம்னு சொல்லலாம்!

      எனக்கு எல்லாம் கஷ்டமே வராது :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்...