முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் பொதிப்பது (Embed) எப்படி?

"அவரு ரொம்ப நல்லா எழுதுவாரு, ஆனா, இப்போ எல்லாம் அவரு ப்ளாக்-ல எழுதுறதே இல்ல.. எல்லாம் முகப்புத்தகத்துல தான். இதனால நெறைய பேருக்கு அவர் எழுதுறது சில நேரம் போய்ச் சேரமாட்டிக்குது..", இப்படி நன்றாக எழுதும் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம், நானும் நண்பர் ஒருவரும்.

உண்மை, கட்டுரைகள் கதைகள், இப்படி எழுதுவது குறைந்து, சிறு சிறு வாசகங்களாக, நக்கல் பேசும் வரிகளாக மாறிவிட்டன இப்போது எழுத்துக்கள் எல்லாம்.

"சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது", என்பது சிறப்புதான் என்றாலும், விரிவாக ஒன்றை எழுதுவதும் திறமை தானே?

சரி, நாம் கதைக்கு வருவோம், ஒருவர் நன்றாக முகநூலில் எழுதுகிறார், அது உங்களுக்குப் பிடித்து இருக்கிறது, உங்கள் வலைப்பூவில் அதைப் போட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

இப்படி நான் நினைத்தால், "copy - paste" செய்து, ஒரு இணைப்புக் கொடுத்து இருப்பேன். ஆனால், இதற்கு மாற்றாக ஒரு வழி உள்ளது. நேரடியாக அந்த நபர் முகநூலில் எழுதியதை நீங்கள் அப்படியே உங்கள் வலைப்பூவில் போடலாம்.

எப்படி? அந்த நபர் எழுதி இருக்கும் பதிவை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, கீழ் வருமாறு செய்யலாம்.


  1. அவர்களின் பதிவின் ஓரம் வலது மூலையில் இருக்கும் அம்புக்குறியை அழுத்தவும்.
  2. அதில் "Embed Post" என்கிற வசதியை அழுத்தவும்.
  3. அழுத்தியதும் ஒரு "code" உங்கள் திரையில் தெரியும். அதை "copy" செய்து கொள்ளுங்கள். (கூடுதல் விபரங்கள் அறிய "learn more"என்று அந்த "code"ன் கீழ் வரும் இணைப்பை சொடுக்கி வாசித்துப் பாருங்கள்)
  4. பிறகு, உங்கள் வலைப்பூவில் எங்கு அந்தப் பதிவை "embed" செய்ய விரும்புகிறீர்களோ, அங்கு "paste" செய்யவும்.
  5. "paste" செய்து பதிவை முழுமையாக முடித்த பிறகு, ஒரு முறை "Preview" செய்து பாருங்கள். உங்களது "code"  அப்படியே வருகிறதா, அல்லது பதிவாகத் தெரிகிறதா என்று.
  6. "code"  அப்படியே வந்தால், உங்கள் பதிவின் "settings" ல் சிறிது மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். 
  7. வலது புறம் இருக்கும் "settings" ல் "Interpret typed HTML" என்று மாற்றிக் கொள்ளுங்கள். 
  8. மறுபடி "Preview"  செய்து பார்த்து விட்டு, பதிவை வெளியிடலாம்!
இதில் என்ன சிறப்பு என்றால், இந்த போதிக்கப்பட்ட பதிவை உங்கள் வாசகர்கள் நேராக உங்கள் தளத்திலேயே முழுமையாகப் படிக்கலாம், அது மிகவும் நீளமான பதிவாக இருந்தாலும். ஆனால், இப்படிப் பொதிக்கும் பதிவு, "public" என்று, எல்லோரும் வாசிக்கும்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இதை நான் Techmaza தளத்தில் இருந்து கற்றுக் கொண்டேன் சமீபமாக, அதைப் பயன்படுத்தி ஒரு பதிவும் பதிந்து பார்த்தேன் எனது வலைப்பூவில். நன்றாக வேலை செய்தது. உங்களுக்கும் முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் போட வேண்டும் என்றால், இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

கருத்துகள்

  1. நல்ல தகவல்.. ஆனால் ப்ளாக்கை ஃபேஸ்புக்கில் embed செய்யும் வசதி தான் தேவை.. ஃபேஸ்புக்கை ப்ளாக்கில் embed செய்வது அந்த அளவு வரவேற்பை பெருமா என தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எதுவும் இருக்கறதா தெரியலையே! இது பயன்படும், முகநூல்ல நல்லா எழுதி இருக்க பதிவ வச்சு, அது சார்ந்து நீங்க எழுதனும்னு ஏதாவது நெனச்சா.. இல்ல, வேற ஒரு நல்லா எழுதற நண்பர நீங்க உங்க வலைபூல அறிமுகம் செய்ய நெனச்சா, நல்லாப் பயன்படும் :)

      நீக்கு
  2. அட ! கண்மணி அன்போடு-வில் Technical Post :) வாழ்த்துக்கள் கண்மணி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) "அட அட அட..." எனக்கு RJ பாலாஜியோட ப்ரோக்ராம்ல வர்ற, "அட" நினைவுக்கு வந்துடுச்சு! :) நன்றிகள்!

      நீக்கு
  3. பலருக்கும் பயன் தரும் பதிவு... விளக்கத்திற்கு நன்றி...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...