முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 12 ---> சிக்ன(க)ல்

                                  
                           




                                      


(பாகம் 11 படிக்கவில்லையா ?இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 11 ---> சிக்ன(க)ல்  படிச்சிட்டு, இங்க வாங்க)
இரவு வெகு நேரம் அழுது இருந்ததால் ; சற்று கண்கள் வீங்கி இருந்தது சுவாதிக்கு;
இருப்பினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழித்திருந்தாள் ;
குழந்தை போலவே தோன்றினான் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணா;
கண் இமைக்காமல் பார்த்திருந்தாள் அவனை.. அன்று தான் முதன் முதலில் பார்ப்பது போல;


நினைவுகள் பின் நோக்கி நகர்ந்தது அவளுக்கு....
முப்பத்தி ஐந்து வயதில் சுவாதி... வீட்டில் அடைபட்டு இருந்த பொழுது...


அன்று காலை., வழக்கம் போல எழுந்து அம்மாவின் அறைக்கு டீ எடுத்துச் சென்றாள் சுவாதி;


" அம்மா ., டீ எடுத்துட்டு வந்த்ருக்கேன் மா... எடுத்துகோங்க... " கைகளால் அம்மாவை தட்டி எழுப்பினாள்;


அசைவே இன்றி குளிர்ந்து இருந்தது அம்மாவின் உடல்...


அதிர்ந்து போன சுவாதி... Hall - ல் படுத்திருந்த அப்பாவிடம் ஓடினாள்
...


" அப்பா அப்பா .... அம்மா அசையாம அப்டியே இருக்காங்கப்பா.. எழுப்ப எழுப்ப எந்திக்கவே இல்லப்பா... வாங்க வந்து பாருங்கப்பா.... " , கண்ணீர் கசிய அப்பாவிடம் அழுது புலம்பினாள்...


வேகமாய் வந்த குமாரசாமி... இறந்து கிடந்த மனைவியைப் பார்த்து அதிர்ந்து போனார்!!!


" கல்யாணி .... எந்திரி கல்யாணி...." இறந்து போனாள் என்று அறிந்தும்., சிறுபிள்ளை போல் அழுது எழுப்பினார் குமாரசாமி...


அது வரை அழுதிராத., தன் தாய் தந்தை இறந்த போது கூட அழுதிராத குமாரசாமி., அன்று துயரம் தாங்காமல் ., அழத் தொடங்கி இருந்தார்..


அன்று கல்யாணி அம்மா பிரிந்து சென்றதில் இருந்து., குமாரசாமி பேசுவதே குறைந்து போனது !!!


காதலில் பிரிவு எவ்வளவு கொடுமையானது என்று அப்பொழுதான் உணர்ந்தார் குமாரசாமி...


கல்யாணி இறந்து இரண்டு மாதங்கள் ஓடி இருக்கும்,,, ஒருநாள்...


" சுவாதி... என்ன மன்னிச்சுடு மா... காதலோட பிரிவு... எவ்ளோ வலிக்கும்னு இப்போ உங்க அம்மா போன அப்புறம் தான்மா புரிது... பத்து வர்ஷதுக்கும் மேல பிரிச்சு வச்சும்... நீங்க இன்னும் ஒருத்தர ஒருத்தர் நெனச்சுட்டு இருக்கீங்க., இந்த வலி உனக்கு எப்டி இருக்கும்-னு இப்போ தான்மா அப்பாக்கு புரியுது..... மன்னிச்சுடு மா... நான் உன்ன அந்த பையனோட சேத்து வைக்றேன் நாளைக்கே..." , மனைவியைப் பிரிந்து வாழ்ந்த நரகம்., அன்பின் ஆழத்தை உணர்த்தி இருந்தது அவருக்கு., அழுதவாறு மகளிடம் மன்னிப்புக் கேட்டார்...


" பரவாலப்பா .... உங்களுக்கு நிச்சயம் ஒரு நாள் புரியும்னு தான் காத்துட்டு இருந்தோம்... கிருஷ்ணாவும் எனக்காக இன்னும் காத்ருக்கான்.. நீங்க ஏன்பா என்கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு.. " கண்ணீரை துடைத்து ஆறுதலாய்ப் பேசினாள் சுவாதி...


கிருஷ்ணா சுவாதியின் கரம் பற்றினான் முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல்...


ஊரே வாழ்த்த நடக்காவிடினும்., கோவிலில் அற்புதமாக நடந்தது திருமணம்...


வயது கடந்திருந்ததாலோ என்னவோ.., குழந்தைச் செல்வம் கிடைக்க மீண்டும் போராட வேண்டியதாகிப் போயிற்று ...


ஐந்து வருடம் மருத்துவம் பார்த்தே கழிந்தது...


நாற்பது வயது கடந்து போய் இருந்தது இருவருக்கும்...


இதற்கு மேல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் உடலில் தெம்பில்லை இருவருக்கும்..


ஒருவருக்கொருவர் குழந்தையாக வாழ முடிவெடுத்து..., இன்று வரை குழந்தைகளைப் போல் கள்ளமில்லாமல்  காதல் செய்கிறார்கள் இருவரும்....


" ஏ சுவாதி.. தூங்கலையா... இன்னும் கொஞ்ச நேரம் தூங்குமா.. night ரொம்ப நேரம் முழிச்சு இருந்தேல... " சுவாதியின் நினைவுகளைக் கலைத்து, கட்டிக் கொண்டான் கிருஷ்ணா...


காதல் கசிந்து கொண்டே இருந்தது என்றும் என்றென்றும் இருவருக்குள்ளும்...


உயர்வானது இவர்களின் காதல்.,


உண்மையில் தோய்த்து..
உயிரினில் கரைத்து.,
உயர்வுகளை அடைந்து
ஊறுகளைத் தகர்க்கும்...!!!
ஊன் பாராது இது...!!!!


                                                          ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


இதுவரை என் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தமைக்கு மிக்க நன்றி...!!!
குறைகளைச் சுட்டுங்கள், விமர்சனங்களே என்னை வளர்த்தெடுக்க உதவும்..
மிக்க நன்றி..
---------
♥ கண்மணி அன்போடு



கருத்துகள்

  1. appadi mudichutengala.............. gud... nice story... today oly red 3 chapters... gud ending........ not at all expected it..... wen gonna start next one.......?????????/

    பதிலளிநீக்கு
  2. mm, soon. college started; so will try to post the next one in week ends. Happy reading Mr. Shanthosh

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...