முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#13

முந்தைய பாகங்கள்:  

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 |  #12


அந்தச் சின்ன வீடு, ஏழ்மையின் சின்னமாக இருந்தது. மருந்து வாசனை நிறைந்து இருந்தது வீடு முழுவதும், குமாரசாமியின் தோற்றமும், அந்த மருந்து வாசனையும், அவரது உடல் மிக மோசமான நிலையில் இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டு இருந்தன.

"குமாரண்ணே, ஆளே மாறிப் போய்ட்டிங்களே.. ஒடம்புக்கு என்னாச்சு? முன்னாடி எவ்ளோ திடமா இருப்பிங்க, என்ன சொல்விங்கலே, வயசுப் பையன் நல்லா சாப்டுபா, ஒல்லியா இருக்கியேன்னு.. உங்க ஒடம்புக்கு இப்போ என்னாச்சு-ணா?"

"ஒண்ணும்ல தம்பி, முன்னாடி நல்லா இளம் வயசுல, தண்ணி போட்டுட்டு திரிஞ்சேன், கொஞ்ச வயசு ஒன்னும் தெரியல, ஆனா இப்போ தான் எல்லாம் வேலையக் காட்டுது, வைத்துல புத்துநோய் கணக்கா ஏதோ வந்த்ருக்காம்.. மருந்து சாப்டுட்டு இருக்கேன்.. என் பொண்டாட்டி போனப்றம் ரொம்ப சிரமமா போச்சுப்பா., ஒத்தைல இந்த வியாதியோட அவதிப்படறேன், என் பையன் எனக்கு மாசம் மாசம் பணம் மட்டும் குடுக்கறான், பணம் குடுக்கக் கூட அவன் இங்க வரது இல்ல, யார்கிட்டயாவது குடுத்து விடுவான், பணம் போதுமாப்பா?, இப்போ எனக்கு பக்கத்துல ஆதரவாப் பேச ஆள் இல்லாம, நரகமா போகுதுப்பா வாழ்க்க.", அழுகாத குறையாய்ப் பேசினார் குமரேசன்.

பாசத்திற்காக ஏங்கிக் கொண்டு, தனிமையின் கொடுமையைப் பேசிக்கொண்டு இருந்தன அவரது ஒளி இழந்த கண்கள்!

"நீங்க வருத்தப் படாதீங்கணே, பேசாம நீங்க என்னோட வாங்க, நான் உங்கள பாத்துக்கறேன், நான் இப்போ நல்லா இருகேன், உங்கள நல்ல வைத்தியர்கிட்ட காட்டி, குணப்படுத்திடலாம், என்னோட வாங்க..", தனக்கு உதவி செய்த குமரேசன் அண்ணன் இன்று வாடுவதை மனம் ஏற்கவில்லை, கண்ணீரோடு அழைத்தார் ராமு.

"இல்லப்பா.. என்னதான் இருந்தாலும், உன்னோட வந்துட்டா,  ஊர்ல இன்னும் என் புள்ளைய தான்பா தப்பாப் பேசுவாங்க, பாரு, யாரு பெத்த புள்ளையோ பாத்துக்குது, சொந்தப் புள்ள இருந்து என்ன புண்ணியம்னு, என் புள்ளைக்கு அந்தப் பேரு வேணாம்பா.. கால் காசுனாலும் என் புள்ளயோட காசுல வாழ்ந்துட்டு போறேன்பா.. உம்பாசத்துக்கு ரொம்ப சந்தோசம்பா.."

"ஏண்ணே இப்டி பேசறிங்க, நீங்க என் வீட்டுக்கு வரலேனாலும், நான் உங்கள அடிக்கடி வந்து பாத்துக்கறேன்.. உங்கள இப்டி பாக்க முடிலணே என்னால.."

"சரி தம்பி, என் கதையக் கேட்டா இப்டி தான் இருக்கும் அழுகையும் பாரமுமா.. நீ நல்லா இருக்கேல? நீ பெரிய அதிகாரியாகப் போறேன்னு சொல்லிட்டு ஊர விட்டுப் போனியேப்பா, உன் மனசுப்போல நடந்ததா எல்லாம்?"

"இல்லண்ணே.. நான் மாவட்ட ஆட்சியாளரா வரணும்னு நெனச்சேன்.. ஆனா முயற்சி பண்ணி, கடைசிக் கட்டத்துல தோத்துப் போய்டேன்ணே"

"அப்போ இப்போ என்ன வேலப்பா பாக்குற?"

"இப்போ ஒரு பெரிய தொழிற்சாலை வச்சுருக்கேன்ணே, ரொம்ப சிரமப்பட்டு இன்னைக்கு இந்த நிலைக்கு வந்த்ருக்கேன்ணே, என் ரேணுகாவ விட்டுப் போனப்ரமா, ரொம்ப சிரமப் பட்டு தான்ணே இந்த நிலைக்கு வர முடிஞ்சுது. இப்போ நான் நல்லா இருக்கேன் அவள நல்லாப் பாத்துக்க முடியும் என்னால, ரேணுகா இப்போ எங்கண்ணே இருக்கா?"

"ரேணுகா, ஏதோ மெட்ராசுக்குப் போறதா சொல்லிட்டு, நீ போன ரெண்டு வாரத்துலயே, கைக்கொழந்தைய தூக்கிட்டு கிளம்பிச்சுப்பா ., நானும் இங்க இருமானு சொன்னேன், கேக்லப்பா, அதோட அப்பா கூட வந்து கூப்டு பாத்தாரு, போகலப்பா.. நான் தான் கடைசிக்கு என் வண்டில கொண்டுபோய் ரயில் ஏத்திவிட்டேன்.."

"இப்போ எங்க இருக்கானு தெரியுமா மெட்ராசுல?"

"எங்கனு சரியாத் தெரியலயேப்பா.. ஏதோ ஒரு அம்ருதானு ஒரு நிறுவனத்துல வேல பாக்றதா கேள்விப்பட்டேன்.."

"அப்படியாணே, நான் போய்ப் பாக்கறேன்.. அவள விட்டுப் பிரிஞ்சு போய் ரொம்ப வருத்தப்பட்டேணே ஆனாலும் ஒரு வைராக்கியம், அதான் பெரியாலாகாம வரக்குடாதுனு இருந்துட்டேன்.. இப்போ எங்க ரேணுகாவ பாக்கவே முடியாமப் போயிடுமோனு வருத்தமா இருக்குணே.."

"அதெல்லாம் ஒன்னும் ஆகாதுப்பா, போய் அந்த எடத்துல விசாரிச்சுப் பாரு, விலாசம் கிடைக்கும்..."

"சரிணே, இதுல உங்களுக்கு வாங்கிட்டு வந்த துணி, பழம் எல்லாம் இருக்கு, ஒடம்ப நல்லாப் பாத்துக்கோங்க..", தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விட்டு கிளம்பினார் ராமச்சந்திரன்.

"சரிப்பா பாத்துப் போயிட்டு வா.. அடுத்த முறை ரேனுகாவோட என்னப் பாக்க வாப்பா.."

மனம் கனத்தது, வீண் வைராக்கியத்தால் ரேணுகாவை இத்தனை நாள் காணாமல் போனது எவ்வளவு பெரிய தவறு என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தார் வீட்டை விட்டு.

அந்த வரிசை வீட்டின் இறுதியில், அவரும் ரேணுகாவும் முதலில் காதல் வாழ்க்கை தொடங்கிய வீடு, இன்று வேறு யாரோ குடியிருந்தார்கள் அதில், ஆனால், இன்னும் அந்த வீட்டின் வாசலில் ரேணுகா பெட்டியோடு வந்து நின்ற இரவு, தன்னைக் கட்டி அணைத்து அழுதது காட்சியாய்த் தெரிந்தது அவருக்கு. மீண்டும் அதே போல் காதல் வாழ்க்கை வாழ மனம் ஏங்கியது.

காட்சியைக் கலைத்தது, விழியில் தேங்கிய நீர்...!

தான் வந்து சென்றதற்கு அடையாளமாய், கண்ணீரை விட்டுச்சென்றார்.
நினைவுகளோடு, பயணத்தைத் தொடங்கினார் ராமச்சந்திரன் சென்னையை நோக்கி.

------------------------------------------------------------------------------------

சேர்ந்தார்களா ரேணுகாவும் ராமுவும்? வாசிக்கலாம் வரும் பாகங்களில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்