முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அத்தனைக்கும் ஆசைப்படு!

ஆயிரம் கனவுகள் இருந்தபோதும், ஒருசில மட்டுமே நனவாகும்! கோடிகள் அதிலே இருந்துவிட்டால், ஆயிரம் நனவாகும் வாய்ப்பு தரும்! நினைவு தெரிந்த நாள் முதலாய், ஆசை நிறைய, நிறைய உண்டு. களிமண் பொம்மை உடைய வேண்டாம், காகிதக் கப்பல் கிழிய வேண்டாம். பாலின் நிறம் வெண்மை வேண்டாம், புல்லின் நிறம் பசுமை வேண்டாம். "இப்படி ஆசை இருந்த போது, எப்படியம்மா நிறைவேறும்? அது எப்படியம்மா நிறைவேறும்?" இப்படி சொன்ன சிலருக்காக, நல்லன சில நான் ஆசைப்பட்டேன்! நம் நாட்டவர் கண்ணீர் கலைந்திடவும், சோகங்கள் எல்லாம் அழிந்திடவும். இதற்கும் இல்லை என்று சொன்னால், பேதை எங்கே சென்றிடுவேன், "அத்தனைக்கும் ஆசைப்படு" சொன்னது யார்? சொல்லுங்கள் அவரிடம், ஆசையே சாபம் என்று!

என் முதுகு அழுகிறது!

நல்லது என்று தான் நினைத்தேன், உனக்கு, நல்லது என்று தான் நினைத்தேன்! கசக்கும் காய்ச்சல் மருந்து போல, கடுக்கும் வாத்தியார் தண்டனை போல, நல்லது என்று தான் நினைத்தேன், உனக்கு. முன்னே சிரித்து, என் பின்னே பழிக்கிறாயே? தோழன் என்று சொல்லி, துரோகம் செய்கிறாயே? முடிந்தால் நேராக, முகத்தில் உமிழ்ந்து விடு! முன் சிரித்தும், பின் நடிப்பும் வேண்டாமே? கண்களால் தான், காலமெல்லாம் அழுது வந்தேன்! இன்று உன்னால், என் முதுகும் அழுகிறது! முடிந்தால் உதிரம் வழிய, என் நெஞ்சில் குத்திவிடு. முதுகில் ரணமாக்காதே! மன்றாடிக் கேட்கிறேன்!