முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் முதுகு அழுகிறது!

நல்லது என்று தான் நினைத்தேன்,
உனக்கு,
நல்லது என்று தான் நினைத்தேன்!

கசக்கும் காய்ச்சல் மருந்து போல,
கடுக்கும் வாத்தியார் தண்டனை போல,
நல்லது என்று தான் நினைத்தேன்,
உனக்கு.

முன்னே சிரித்து,
என் பின்னே பழிக்கிறாயே?
தோழன் என்று சொல்லி,
துரோகம் செய்கிறாயே?

முடிந்தால் நேராக,
முகத்தில் உமிழ்ந்து விடு!
முன் சிரித்தும்,
பின் நடிப்பும் வேண்டாமே?

கண்களால் தான்,
காலமெல்லாம் அழுது வந்தேன்!
இன்று உன்னால்,
என் முதுகும் அழுகிறது!

முடிந்தால் உதிரம் வழிய,
என் நெஞ்சில் குத்திவிடு.
முதுகில் ரணமாக்காதே!
மன்றாடிக் கேட்கிறேன்!

கருத்துகள்

  1. முதுகும் அழுகிறது "செம ஃபீலிங்க்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கிண்டல் அடிக்கிறீங்களோ?

      எனினும் நன்றி :)

      நீக்கு
  2. முதுகில் குத்தாதே கோழையே என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது தங்கள் கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் அது தான், அதே தான். கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. வா(ழ்)(ரம் ஒரு மு)த்துகள் சகோதாரி!!

    பதிலளிநீக்கு
  4. ஒருவரின் முதுகுக்குப்பின்னால்
    செய்யக் கூடிய ஒரே காரியம்
    தட்டிகொடுப்பதுதான் என ஒரு
    அருமையான பொன்மொழியைப் படித்திருக்கிறேன்
    ஆயினும் பெரும்பாலும் இப்போதெல்லாம்
    துரோகங்கள்தான் அதிகம் அரங்கேறுகின்றன
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //முடிந்தால் நேராக,
    முகத்தில் உமிழ்ந்து விடு!
    முன் சிரித்தும்,
    பின் நடிப்பும் வேண்டாமே... loved this line :) sooper :)

    பதிலளிநீக்கு
  6. நன்றி அண்ணா. ரொம்ப நாள் ஆச்சு உங்க கவிதை வாசிச்சு. வாசிக்க இதோ வரேன் உங்க வலைப்பூவிற்கு :)

    பதிலளிநீக்கு
  7. கவிதை முதுகில் குத்தும் கோழைகளை படம் பிடித்துக் காட்டுகிறது, கண்மணி!
    //தோழன் என்று சொல்லி
    துரோகம் செய்கிறாயே?'

    என்ற வரிகளில் வலியை உணர முடிகிறது

    நாளை தொடங்கும் வாரத்தில் உங்களை 'வலைச்சரம்' இணையத்தில் இந்தக் கவிதையுடன், பெருமையுடன் அறிமுகம் செய்கிறேன். தவறாமல் படிக்கவும்.

    அன்புள்ள
    ரஞ்ஜனி

    பதிலளிநீக்கு
  8. உங்களது இந்தப் பதிவு பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    வருகை தருக, ப்ளீஸ்!

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_10.html

    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னிக்கு தான் கல்லூரி விடுதில இருந்து வந்தேன். :( மன்னிக்கணும் அம்மா :(

      நீக்கு
  9. என் நெஞ்சில் குத்திவிடு.
    முதுகில் ரணமாக்காதே!

    கனக்கும் வரிகள் !1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... கனமாகத் தான் இருக்கிறது பல நேரங்களில்!

      நீக்கு
  10. முடிந்தால் உதிரம் வழிய,
    என் நெஞ்சில் குத்திவிடு.
    முதுகில் ரணமாக்காதே!
    மன்றாடிக் கேட்கிறேன்!

    அன்பின் கண்மணி - அருமையான கவிதை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....