முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்மணி Diary 2018

எப்போதும் வருடம் முடியும் சமயம் ஒரு ஞான உதயம் வரும், அது என்ன என்றால், blogஇல் எழுத வேண்டும் என்பது. இப்போது 2018 ஆம் வருடம் முடிய இருப்பதால் அந்த ஞான உதயம் வந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை! என்னுடைய பழைய பதிவுகளை எல்லாம் படித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன், எல்லாம் என்றால், எல்லாம் இல்லை, ஒரு சிலவற்றை. எனக்கே நான் எவ்வளவு மாறி இருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கையில் அத்தனை ஆச்சர்யமாக இருந்தது. மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்களே அது போல, என் அப்பா எவ்வளவு மாறி இருக்கிறார், என் குடும்பம், என் priorities, எனக்கு முக்கியமானவை, எனக்கு முக்கியமானவர்கள், என்று எவ்வளவு மாற்றம்! ஆனால், எல்லாமே மாறிவிடுமா? இல்லை, நிறைய விஷயங்கள் இன்னும் மாறாமல் தான் இருக்கின்றன. நான் இதற்கு முன்பு இருந்தது போலவே இப்போதும் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமாக இருக்கிறேன், புதிதாக நிறைய படித்து கற்றுக்கொண்டு இருக்கிறேன், இது எனக்கு சிறுவயதில் இருந்தே பிடித்த விஷயங்கள். இந்த 2018ஆம் வருடம் வாழ்க்கையில் இது வரை இருந்ததிலேயே மிகவும் கடினமான வருடம், அதே நேரம் இனிமையான வருடம்! இன்பம் துன்பம் இரண்டையும் குற