முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முகப்புத்தகப் பதிவுகளை வலைப்பூவில் பொதிப்பது (Embed) எப்படி?

"அவரு ரொம்ப நல்லா எழுதுவாரு, ஆனா, இப்போ எல்லாம் அவரு ப்ளாக்-ல எழுதுறதே இல்ல.. எல்லாம் முகப்புத்தகத்துல தான். இதனால நெறைய பேருக்கு அவர் எழுதுறது சில நேரம் போய்ச் சேரமாட்டிக்குது..", இப்படி நன்றாக எழுதும் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தோம், நானும் நண்பர் ஒருவரும். உண்மை, கட்டுரைகள் கதைகள், இப்படி எழுதுவது குறைந்து, சிறு சிறு வாசகங்களாக, நக்கல் பேசும் வரிகளாக மாறிவிட்டன இப்போது எழுத்துக்கள் எல்லாம். "சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது", என்பது சிறப்புதான் என்றாலும், விரிவாக ஒன்றை எழுதுவதும் திறமை தானே? சரி, நாம் கதைக்கு வருவோம், ஒருவர் நன்றாக முகநூலில் எழுதுகிறார், அது உங்களுக்குப் பிடித்து இருக்கிறது, உங்கள் வலைப்பூவில் அதைப் போட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இப்படி நான் நினைத்தால், "copy - paste" செய்து, ஒரு இணைப்புக் கொடுத்து இருப்பேன். ஆனால், இதற்கு மாற்றாக ஒரு வழி உள்ளது. நேரடியாக அந்த நபர் முகநூலில் எழுதியதை நீங்கள் அப்படியே உங்கள் வலைப்பூவில் போடலாம். எப்படி? அந்த நபர் எழுதி இருக்கும் பதிவை உங்கள் வலைப்பூவில் சேர்க்க, கீழ் வருமாறு செய்யல

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே