முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#15

முந்தைய பாகங்கள்:   

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 |  #12 | #13 | #14


அருமையான உணவு, தமிழ்நாடும் தில்லியும் சேர்ந்தார் போல இருந்தது!
தமிழக உணவு வகைகளும், தில்லியின் உணவு வகைகளும் சேர்த்துப் பரிமாறி இருந்தார்கள்.

சிந்துவின் தந்தையும் முரளியும் சாப்பாட்டு மேசையின் ஒரு புறம் அமர்ந்திருக்க, சிந்து மறுபுறம் அமர்ந்திருந்தாள் முரளியின் எதிரே!

சிந்துவின் தந்தையும் முரளியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

சிந்துவின் தந்தை வெங்கட்ராமன். சற்று ஒல்லியான உடல், வயதால் கண்களுக்குக் கீழ் கருப்புப் படிந்திருந்தது! ஐந்தரை அடி உயரம்!

" அப்போ இங்க நம்ம வீட்டு மாடில எடம் இருக்குது தம்பி, இங்கயே தங்கிக்கோங்க.", வெங்கட்ராமன் முரளியிடம் சொல்ல,

"இல்லபா, என்னோட நண்பனோட வீடு, பயிற்சி மையத்துக்கு பக்கத்லயே இருக்கு. அதனால அங்க தங்கிக்கறேன். அது தான் வசதியா இருக்கும்."

"சரி தம்பி, வாரத்துக்கு ஒரு தடவ சனி ஞாயிறு இங்க வாங்க.. நல்லபடியா படிங்க, இங்க தங்குனா இந்த சிந்துவே உங்கள படிக்க விடமாட்டா.. அதுவும் இருக்கு.", சொல்லியவாறே செல்லமாய் சிந்துவைப் பார்த்துப் புன்னகைத்தார்.

"அப்பா .. உங்களுக்கு என்ன வம்புக்கு இழுக்கலைனா தூக்கம் வராதே.. ஆமா முரளி, உன்ன நான் படிக்க விடமாட்டேன், அப்பா சொல்றதும் சரி தான். மாடில இருந்தேனா உன்கிட்ட வந்து பேசிப் பேசியே படிக்க விடாம செஞ்சிடுவேன்.", சொல்லி விட்டு குறும்பாய் சிரித்தாள் சிந்து.

"சாப்டுங்க சும்மா பேசிக்கிட்டு இருக்காம,", தன் பங்குக்குப் பேசினார் சிந்துவின் அம்மா.

சாப்பிட்டு முடித்து கிளம்பினான் முரளி தன் நண்பனின் வீட்டுக்கு.

"நானும் வரேன்டா, வீட பாத்துக்கிட்டேன்னா அடுத்து நானா வந்துடுவேன்ல..?",உடன் கிளம்பினாள் சிந்து.

"ம்ம்.. அங்கயும் நான் படிச்சிடக்குடாது.. வந்துடனும்.. என்ன?", செல்லமாய்க் கேட்டான் முரளி.

"உனக்கு நான் பேசுனா எப்டி தான் இருக்குமோ.. போடா நான் வரல."

"ஏ ஏ சும்மா சிந்து, உன்கிட்ட பேசாம எங்க போகப் போறேன்.."

"நீ பேசலனாலும் சும்மா விட்ருவனா.. வா வா கெளம்பு போலாம்.."

இருவரும் செல்லமாய் சண்டையிட்டவாறே கிளம்பினார்கள் முரளியின் நண்பன் வீட்டிற்கு.

-----------------------------------------------------------------------

நண்பனின் வீட்டில் பின் பகுதியில் முரளிக்கு அறை கொடுத்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்தார்கள் முரளியும் சிந்துவும். முரளியின் பொருள்களை எல்லாம் எடுத்து அடுக்க ஆரம்பித்தார்கள்.

துணிகளை எடுத்து சிந்து அடுக்கிக் கொண்டு இருந்தாள்.

முரளியும் அடுக்க வந்தான். ஒரு சட்டையைக் கையில் எடுத்தான். அடியில் அவனது அம்மாவின் புகைப்படம்.

அம்மாவின் புகைப்படம் பார்த்ததும், அதைக் கையில் எடுத்து அணைத்தவாறு அமர்ந்து விட்டான் முரளி.

சோகத்தில் மூழ்கினான் முரளி. தன்னையே அறியாமல் அழத் தொடங்கினான்.

துணியை அடுக்கிக் கொண்டிருந்தவள் முரளியை கவனிக்கவில்லை.

அடுக்கி முடித்துத் திரும்பினாள் முரளியின் பக்கம்.

முரளியின் கண்ணில் கண்ணீரைப் பார்த்துப் பதறிப் போனாள் சிந்து.

"ஏ.. என்னாச்சு? முரளி........", கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தாள். கையில் இருந்த புகைப் படத்தை அப்போது தான் பார்த்தாள்.

"அம்மாவ நெனச்சு அழறியாடா?", ஏக்கமும் சோகமும் கலந்த குரலில் கேட்டவாறே, ஆறுதலாய் அவன் கை பற்றினாள்.

அமைதியாய் இருக்கும் வானம் மழையின் போது மட்டும் இடியாய் உடைவது போல, உடைந்து அழுதான். மேகமாய் அழுதான். அவளது தோளில் சாய்ந்து அழுதான். சிந்துவையே அம்மாவாய் எண்ணி அழுதான். 
அழாத முரளி, நான் இருக்கேன் உனக்கு, நீ இப்டி ஒடஞ்சு போகக் குடாது. நான் அம்மா அப்பா எலாம் உன்ன பாத்துப்போம்.", தலை கொதி ஆறுதலாய்ப் பேசினாள் சிந்து.

"உன்னப் பாத்தாதான் சிந்து தைரியமா இருக்கு, உன் சிரிப்பைப் பாத்துட்டே இருக்கலாம்"

"ம்ம், அழாத, நான் எப்பவும் உன்னோட சேந்து இருப்பேன், உன்ன நல்லா பாத்துப்பேன்.", அழுத்தமாய் முரளியின் கை பற்றிப் பேசினாள் சிந்து.

"நீ கூட இருந்தாப் போதும் சிந்து, நீ எப்பவும் இதே மாத்ரி என் கையப் புடிச்சுட்டு கடைசி வர என்னோட இருக்கணும்.."


இருவரும் பேசும் போது அழகாய்க் காதல் மலர்ந்து கொண்டிருந்தது மீண்டும் ஒரு முறை இருவருக்குள்ளும், வாசனையோடு, புதிதாய்..!

இவர்களது காதல் செடியில் இன்னொரு பூ. அன்பின் வாசம் கொண்ட பூ.


*****************************************************
அடுத்த பாகத்தில் வாசிக்கலாம் தொடர்ச்சியை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...