முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#16

முந்தைய பாகங்கள்:   

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 |  #12 | #13 | #14 | #15


"இங்க ரேணுகானு ஒருத்தவங்க? அவங்கள பாக்கணும்..? பாக்க முடியுமா?", ராமச்சந்திரன் கேட்டார் அந்த நிறுவனத்தில் வரவேற்பரையில் இருந்த பெண்ணிடம்.

"அப்படி இங்க யாரும் வேல பாக்கலையே..", பொறுமையாய்ப் பதில் சொன்னாள் அந்தப் பெண்.

"இல்ல... இங்கதான் ரொம்ப வருசமா வேல பாக்றதா சொன்னாங்க.."

"அப்டியா..? எனக்கு சரியா தெரிலயே, நான் வேலைக்குப் புதுசு.., கொஞ்ச நேரம் காத்திருங்க, நான் உள்ள போய் கேட்டுட்டு வரேன், இங்க உக்காந்திருங்க..", அருகில் இருந்த நாற்காலியைக் காட்டினார் அந்தப் பெண்.

அமர்ந்தார் அந்த நாற்காலியில் ராமச்சந்திரன். நல்ல குளிரூட்டப்பட்ட அறை, நவீனமான கட்டிடம், மெத்தென இருந்தது அந்தப் பஞ்சு நாற்காலி. முன்னே நிறைய ஆங்கில நாளேடுகள் இருந்தன மேசையில்.
நாளேடுகளைப் படிக்க மனம் வரவில்லை. ரேணுகாவைப் பார்க்க வேண்டும், ரேணுகாவின் முகம் தான் அவர் கண் முன் தெரிந்தது எல்லாப் புறமும். உள்ளே சென்ற பெண் எப்போது வெளி வருவார் என்று எட்டி எட்டிப் பார்த்தவாறு ஏக்கத்தோடு அமர்ந்திருந்தார் அவர்.

காதலிக்காகக் காத்திருப்பது சுகம் என்று சொல்லித் திரியும் காதலர்களைக் கண்டிருப்பீர்கள். இவர் காதலியைப் பற்றிய செய்திக்காகக் காத்திருப்பதில் இருந்த சுகத்தை உணர்து கொண்டிருந்தார்.

மனைவியானவளை இன்றும் காதலியாகத் தான் எண்ணிக் காதலித்துக் கொண்டிருந்தார். ரேணுகாவைப் பார்த்ததும் அவள் கரம் பற்றி, கட்டி அணைத்து அழ வேண்டும், ஆசையாய்ப் பேச வேண்டும், இருவரும் நெடு நேரம் வாசலில் அமர்ந்து, தெருவில் செல்வோரையும், விளையாடும் குழந்தைகளையும் பார்த்துக் கதை பேசி மகிழ வேண்டும், எண்ணங்கள் வளர்த்துக் கொண்டிருந்தார்.

உள்ளே சென்ற அந்தப் பெண் வெளி வந்தார், உடன் இன்னொரு பெண்ணும் வந்தார். வயது ஐம்பது இருக்கும் அவருக்கு.

"நீங்க...? ராமச்சந்திரன்?", ராமச்சந்திரனைப் பார்த்த உடன் அந்தப் பெண் கேட்டார்.

"ஆமா.. உங்களுக்கு என்னத்தெரியுமா? ரேணுகா இப்போ எங்க இருக்கா? உங்களுக்கு ரேணுகாவ தெரியுமா?"

"எனக்கு உங்கள ரேணுகா சொல்லித் தான் தெரியும்"

"ரேணுகா எங்கனு கேட்டதுக்கு நீங்க சொல்லலயே..?"

"ம்ம்.. சொல்றேன்.. வாங்க நெறைய பேசணும் உங்க கிட்ட, ரேணுகா என்னோட ரொம்ப நல்ல தோழி, உள்ள போய் தேநீர் சாப்டுட்டே பேசலாம்.."

"இல்ல, எனக்கு முகவரி மட்டும் போதும்", சொல்ல நினைத்தார், ஆயினும் அப்படிச் சொல்வது நன்றாக இருக்காது என்றெண்ணி, "சரி" என்றவாறு அந்தப் பெண்ணுடன் தேநீர் அருந்தச் சென்றார்.

-----------------------------------------------------------------------------------

விமான நிலையம்,
விமானத்திற்காகக் காத்திருந்தார் ராமச்சந்திரன். அருகே ரேணுகா, அமைதியாய் அமர்ந்திருந்தாள். இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அருகருகே அமர்ந்திருந்தார்கள், ரேணுகா மட்டும் ராமச்சந்திரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள், காதலோடு!

ராமச்சந்திரன் மட்டும் அவள் பக்கம் திரும்பவே இல்லை, எங்கோ பார்த்துக் கொண்டு இருந்தார்.

கிளம்பினார்கள், விமானத்தில், தில்லி சென்று அடைந்தார்கள், பேசிக்கொள்ளவே இல்லை இருவரும்.

பழைய நினைவுகள் இருவருக்குள்ளும் நிறைந்து இருந்தது பயணம் முழுவதும். வார்த்தைகள் தான் வெளிவர மறுத்தன.

இருவருக்கும், மகனைப் பார்க்கும் ஆசை, ஆவல் நிறைய இருந்தது.

முரளியின் முகவரியை நோக்கிப் பயணப்பட்டார்கள்.

------------------------------------------------------------------------------------


இருவரும் ஏன் பேசிக்கொள்ளவில்லை? வாசிக்கலாம் அடுத்த பாகத்தில்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்