முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#2

பாகம் 1 --> காதலி காதலி!#1
படிச்சிட்டு இங்க வாங்க.

"அம்மா, அப்பா எப்போமா வருவாங்க?", வருத்தமும் ஏக்கமும் கலந்து கேட்டான் முரளி.

"அப்பா வருவாங்கடா..,, சீக்ரமா வருவாங்க, வரப்போ உனக்கு நெறைய வாங்கிட்டு வருவாங்க.. இப்போ நீ சமத்தா school-க்கு போயிட்டு வா", சிரித்து வழி அனுப்பினாள் முரளியை.

அனுப்பி வீட்டுக்குள் நுழையும் பொழுது, தினமும் இருக்கும் அதே வெறுமை அவளைக் கொன்றது. தனது நிலையை எண்ணி ஏங்க நேரமின்றி, அரை மணி நேரத்தில் அவசரமாய் வீட்டையும் சுத்தம் செய்து, குளித்துக் கிளம்பினாள் வேலைக்கு.

மாலை:
பள்ளிப் பேருந்து முரளியின் வீட்டு வாசலில் வந்து நின்றது. அயர்ந்து போன முகத்தோடு பேருந்தில் இருந்து இறங்கினான். தன்னிடம் இருந்த சாவியை வைத்து வீட்டைத் திறந்தான்.

முகம் கை கால் கழுவி சுத்தம் செய்து அடுப்படிக்குச் சென்றான்.
காலையிலேயே வாங்கி வைத்த பால் ஒரு ஓரமாய் அடுப்படியில் இருக்க, அதை மீண்டும் காய்ச்சினான், முரளி. cupboard-ல் இருந்த biscuit packet ஐ எடுத்து சாப்பிட்டு, பால் குடித்தான். அம்மாவுக்காக flask-ல் பாலை எடுத்து வைத்தான்.

வாசலில் சென்று புத்தகத்தோடு அமர்ந்து அம்மாவின் வருகைக்காக காத்திருந்தான், முரளி.


பள்ளியில் தன் நண்பன் சுரேஷ் சொன்னது முரளிக்கு நினைவுக்கு வந்தது.

பள்ளியில்:
சுரேஷ் பள்ளிக்கு புதுவரவு. இருவரும் அறிமுகம் ஆன பின்பு, பேசத் தொடங்கினார்கள்.

"ஏய் உன் bag நல்லாருக்குடா, எங்க வாங்குன?", முரளி சுரேஷிடம் கேட்டான்.

"எங்கப்பா U.S-ல இருக்காங்கடா, அங்க இருந்து அனுப்பினாங்க."

"எங்கப்பாவும் அங்க தான் இருக்காங்கனு அம்மா சொல்வாங்கடா. ஆனா நான் பேசினது கூட இல்ல, எங்கப்பாக்கு நேரமே இருக்காதாம், பெரிய வேலையாம்."

"அப்படியா, எங்கப்பா தினமும் எங்கிட்ட பேசுவாங்கடா., ஆனாலும் மித்த பசங்கள பாக்றப்போ, நான் அப்பா கூட இல்லியேன்னு வர்த்தமா இருக்கும். உனக்கு இருக்காதாடா? நீ பாவம், பேசனது கூட இல்லல?"

"ஆமாடா, எங்கம்மாகிட்ட போன் பேசணும்னு சொன்னாலும், அது முடியாதுனு திட்டிடுவாங்கடா.."

" வருத்தப் படாத, இவ்ளோ நாள், நான் எங்கப்பாவ ரொம்ப miss பன்னேன்டா, next week எங்கப்பா foreign-ல இருந்து வராங்கடா. இனிமேல் அப்பாவ நேர்ல பாக்கலாம் நான், daily phone-ல பேசிட்டே இருந்தேன், இனி அப்பாவ நேர்லயே பாக்கலாம். உங்கப்பா எப்போடா வராங்க? நீ போன்ல கூட பேசனது இல்லேல? எப்போடா வருவாங்க?", சுரேஷ் முரளியிடம் கேட்டான்.

"சீக்கிரமா வருவாங்கடா.."

நினைவு கலைந்தது முரளிக்கு.முரளி அப்பாவைப் பார்க்க ஏங்கினான்... தூரத்தில் அம்மா வருவது தெரிந்தது, இன்னிக்கு அம்மாகிட்ட கேட்டு, அப்பாகிட்ட பேசிடனும், முடிவு செய்து எழுந்தான் முரளி.

புன்னகையோடு அம்மாவை நோக்கி ஓடினான். ரேணுகாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்..
---------------------------------------------------------------------------
பேசினானா முரளி தன் அப்பாவிடம்? நாளை வாசிக்கலாம் அடுத்த பாகத்தில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்