முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#5

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4 

ரேணுகாவின் வீட்டில்:


"அப்பா எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்பா..", ரேணுகா.

"ஏன்? இப்போ கல்யாணம் பண்ணிக்க என்ன வந்துச்சாம்?", முருகானந்தம்.

"இல்லப்பா.. நான் மேல படிக்க போறேன்பா, மேல படிச்சா இன்னும் நல்ல வேல கெடைக்கும் பா.."

"நீ பெரிய வேலைக்கு எல்லாம் போக வேணாம், ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு மாப்ள வீட்ல சொல்றத கேட்டு நடந்துக்கோ."

"அப்பா.. எனக்கு தான் வேணாம்னு சொல்றேன்ல.." கோபமாய்க் கத்தினாள் ரேணுகா.

"என்ன எவனையும் காதலிக்கிறியா? காதல்-னு சொல்லி எவனையாச்சும் நெனச்சுக்கிட்டு பேசறியா?"

"ஆமா நான் காதலிக்கிறேன், என்னோட கூட படிச்ச பையன, பேரு ராமச்சந்திரன்"

"என்னது? காதலிக்கிறியா? குடும்ப மானம் போகணும்னே எல்லாம் செய்றியா?"

"ஏன்பா? காதலிச்சா தப்பா? ராமு ரொம்ப நல்லவன் பா, என் மேல உயிரா இருக்கான், என்ன சந்தோஷமா பாத்துப்பான் பா"

"சரி என்ன வேல பாக்குறான்? படிப்பு முடிஞ்சி ஒரு மாசம் ஆச்சுல, மொத மாசம் எவ்ளோ சம்பளம் வாங்கிருக்கான்? வேல பாக்குறானா?

"இல்லபா.. அவன் படிக்றான்.. அவனுக்கு மாவட்ட ஆட்சியர் ஆகணும்னு ஆச, அதுக்காக படிச்சுட்டு இருக்கான் பா, இப்போ சும்மா பகுதி நேரமா தான் பாக்குறான். இன்னும் ஒரு நாலு வருசத்துல தேர்வாகிடுவான்-பா.."

"ஆமா மாவட்ட ஆட்சியர் ஆகறது எவ்ளோ கடினம் தெரியுமா? அதுக்காக கைல படிக்கிறப்போவே கெடச்ச வேலைய விட்டானாக்கும்? அவன் தேருவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல, நீ நாலு வருசம் காத்திருந்து ஏமாந்து போக தான் போற, பேசாம நான் பாக்குற மாப்ளைய கல்யாணம் பண்ணிக்கோ, ராணி மாதிரி வாழலாம்"

"இல்ல என்னால ராமுவ மறக்க முடியாது", வீடே அதிர கத்தினாள் ரேணுகா.

"முடியாதா? என்னையே எதிர்த்து இவ்ளோ சத்தம் போட துணிச்சல் வந்துடிச்சா? அம்மா இல்லாத பொண்ணுன்னு செல்லமா வளத்ததுக்கு நல்ல பரிசு குடுத்துட்ட", ஓங்கி கன்னத்தில் அறைந்தார் முருகானந்தம்.

அழுதவாறு அறைக்குள் சென்று கதவை அடைத்தாள் ரேணுகா.

தந்தையை நினைத்து கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.

ராமுவின் வீட்டில் - இரவு 12 மணி -

எப்படியேனும் தேரிவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு, படித்துக் கொண்டு இருந்தான் ராமு.

ராமு, தன் சிறு வயதிலேயே தாய் தந்தையை விபத்தில் இழந்தவன், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தான், மிகவும் சிரமப்பட்டு படித்து பொறியியல் முடித்தவன். வாடகைக்கு ஒரு சிறு அறை எடுத்து தங்கி இருந்தான்.
சிறு வயதிலேயே ஒரு பெரிய அதிகாரியாக வேண்டும் என்ற லட்சிய விதையை மனதில் விதைத்து, அதை நாளும் நீர் ஊற்றி வளர்த்து, இன்று விருட்சமாக்கி, பூப் பூத்து நிற்கும் மரத்தை, கனிக்காக தயார் செய்து கொண்டிருப்பவன்.

மிகவும் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தான்.

கதவை யாரோ தட்டும் சத்தம்.

"இந்நேரத்துல யாரு..", யோசனையோடு கதவைத் திறந்தான்.

திறந்தவனுக்கு அதிர்ச்சி, நின்றிருந்தது ரேணுகா.


-------------------------------------------------------------------------

ரேணுகா ஏன் அங்கு வந்தாள்? ராமு அவளை வீட்டினுள் சேர்த்துக் கொண்டானா?

வாசிக்கலாம் நாளை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...