முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#5

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4 

ரேணுகாவின் வீட்டில்:


"அப்பா எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்பா..", ரேணுகா.

"ஏன்? இப்போ கல்யாணம் பண்ணிக்க என்ன வந்துச்சாம்?", முருகானந்தம்.

"இல்லப்பா.. நான் மேல படிக்க போறேன்பா, மேல படிச்சா இன்னும் நல்ல வேல கெடைக்கும் பா.."

"நீ பெரிய வேலைக்கு எல்லாம் போக வேணாம், ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு மாப்ள வீட்ல சொல்றத கேட்டு நடந்துக்கோ."

"அப்பா.. எனக்கு தான் வேணாம்னு சொல்றேன்ல.." கோபமாய்க் கத்தினாள் ரேணுகா.

"என்ன எவனையும் காதலிக்கிறியா? காதல்-னு சொல்லி எவனையாச்சும் நெனச்சுக்கிட்டு பேசறியா?"

"ஆமா நான் காதலிக்கிறேன், என்னோட கூட படிச்ச பையன, பேரு ராமச்சந்திரன்"

"என்னது? காதலிக்கிறியா? குடும்ப மானம் போகணும்னே எல்லாம் செய்றியா?"

"ஏன்பா? காதலிச்சா தப்பா? ராமு ரொம்ப நல்லவன் பா, என் மேல உயிரா இருக்கான், என்ன சந்தோஷமா பாத்துப்பான் பா"

"சரி என்ன வேல பாக்குறான்? படிப்பு முடிஞ்சி ஒரு மாசம் ஆச்சுல, மொத மாசம் எவ்ளோ சம்பளம் வாங்கிருக்கான்? வேல பாக்குறானா?

"இல்லபா.. அவன் படிக்றான்.. அவனுக்கு மாவட்ட ஆட்சியர் ஆகணும்னு ஆச, அதுக்காக படிச்சுட்டு இருக்கான் பா, இப்போ சும்மா பகுதி நேரமா தான் பாக்குறான். இன்னும் ஒரு நாலு வருசத்துல தேர்வாகிடுவான்-பா.."

"ஆமா மாவட்ட ஆட்சியர் ஆகறது எவ்ளோ கடினம் தெரியுமா? அதுக்காக கைல படிக்கிறப்போவே கெடச்ச வேலைய விட்டானாக்கும்? அவன் தேருவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல, நீ நாலு வருசம் காத்திருந்து ஏமாந்து போக தான் போற, பேசாம நான் பாக்குற மாப்ளைய கல்யாணம் பண்ணிக்கோ, ராணி மாதிரி வாழலாம்"

"இல்ல என்னால ராமுவ மறக்க முடியாது", வீடே அதிர கத்தினாள் ரேணுகா.

"முடியாதா? என்னையே எதிர்த்து இவ்ளோ சத்தம் போட துணிச்சல் வந்துடிச்சா? அம்மா இல்லாத பொண்ணுன்னு செல்லமா வளத்ததுக்கு நல்ல பரிசு குடுத்துட்ட", ஓங்கி கன்னத்தில் அறைந்தார் முருகானந்தம்.

அழுதவாறு அறைக்குள் சென்று கதவை அடைத்தாள் ரேணுகா.

தந்தையை நினைத்து கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.

ராமுவின் வீட்டில் - இரவு 12 மணி -

எப்படியேனும் தேரிவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு, படித்துக் கொண்டு இருந்தான் ராமு.

ராமு, தன் சிறு வயதிலேயே தாய் தந்தையை விபத்தில் இழந்தவன், குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்தான், மிகவும் சிரமப்பட்டு படித்து பொறியியல் முடித்தவன். வாடகைக்கு ஒரு சிறு அறை எடுத்து தங்கி இருந்தான்.
சிறு வயதிலேயே ஒரு பெரிய அதிகாரியாக வேண்டும் என்ற லட்சிய விதையை மனதில் விதைத்து, அதை நாளும் நீர் ஊற்றி வளர்த்து, இன்று விருட்சமாக்கி, பூப் பூத்து நிற்கும் மரத்தை, கனிக்காக தயார் செய்து கொண்டிருப்பவன்.

மிகவும் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தான்.

கதவை யாரோ தட்டும் சத்தம்.

"இந்நேரத்துல யாரு..", யோசனையோடு கதவைத் திறந்தான்.

திறந்தவனுக்கு அதிர்ச்சி, நின்றிருந்தது ரேணுகா.


-------------------------------------------------------------------------

ரேணுகா ஏன் அங்கு வந்தாள்? ராமு அவளை வீட்டினுள் சேர்த்துக் கொண்டானா?

வாசிக்கலாம் நாளை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்