முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#6

முந்தைய பாகங்கள்: காதலி காதலி!#1|#2|#3|#4|#5


ரேணுகாவைப் பார்த்ததும், "ஏ ரேணு, என்ன இந்நேரத்துல? தனியாவா வந்த? குறுஞ்செய்தி அனுப்பி இருக்கலாம்ல? எதுனாலும் காலைல வந்திருக்கலாமே? என்னாச்சு?"

"இல்ல ராமு, நான் வீட்ட விட்டு வந்துட்டேன், இனி உன்னோட இங்க தான் இருக்க போறேன், எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கல, அதான் கெளம்பி வந்துட்டேன்..."

"என்ன காரியம் பண்ணிருக்க? இது தப்பு ரேணு, அப்பா பொறுமையா சொன்னா புரிஞ்சுப்பாங்க.. நீ மொத கெளம்பு வீட்டுக்குப் போ"

"என்ன ராமு பேசற? எங்கப்பாகிட்ட சொல்லி பாத்துட்டேன், கேக்கறாப்ல இல்ல அவங்க, எனக்கு வேற பணக்கார மாப்ள பாக்குறாங்க, நீ இப்போ என்ன போக சொன்னா, ஒரு மாசத்துக்குள நான் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்."

"ஆனாலும் இது தப்பு, நீ வீட்டுக்குப் போ, நாளைக்கு நான் வந்து உங்க அப்பாகிட்ட பேசறேன்."

"இல்ல முடியாது, திருப்பி நான் அங்க போக மாட்டேன்"

"போனு சொல்றேன்ல., சொன்னாக் கேளு ரேணு, எல்லாரும் தப்பா பேசுவாங்க. யாருக்கும் தெரியறதுக்குள கெளம்பு, நீ பொண்ணு, உன் பேரு தான் ரேணு கெட்டுப் போகும் அதிகமா"

"முடியாது, உன்னோட சேத்து தான தப்பாப் பேசறாங்க, பேசட்டும், நீ என்ன போ போனு சொல்ற..? என்ன புடிக்கலையா உனக்கு? ஏமாத்தப் பாக்குறியா? இன்னொரு தடவ போன்னு சொல்லாத.. வீட்டுக்குப் போமாட்டேன், ஒரேடியா போய்டுவேன் மேல.."

"ஏய், ரேணு.. என்ன பேசற.. நல்லதுக்கு தான் சொல்றேன்.. நான் உன்ன மொத பாத்த நாள்ல இருந்து உன்னத் தவற வேற யாரையும் நெனச்சதிள்ள தெரியுமா.. நீ இல்லாம ஒரு வாழ்க்க எனக்கு இருக்காது ரேணு, உன்ன மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன், ஆனா அது இப்போ முடியாதுனு தான் சொல்றேன், எனக்கு லட்சியம் இருக்கு ரேணு, உனக்கே தெரியும்ல?"

"நீ என்ன கல்யாணம் பண்ணிக்கோ ராமு, நான் உனக்கு துணையா இருப்பேன், நீ படி, உன்ன தொல்ல செய்ய மாட்டேன், தயவு செஞ்சு போன்னு சொல்லாதடா., நீ போ போ னு சொல்றது, செத்து போன்றாப்ள இருக்கு..", கதறி அழுதவாறு ராமுவை அணைத்துக் கொண்டாள் ரேணுகா.

"அவள் அழுகையை ராமுவால் தாங்க இயலவில்லை, அணைத்துக் கொண்டான், என்ன இவ்ளோ புடிக்குமா ரேணு உனக்கு? சரி வா, உள்ள வா, நான் நாளைக்கு உங்க அப்பாகிட்ட பேசறேன், அழாத வா.."

"ம்ம்.. போடா, உள்ள வானு கூப்ட தொரைக்கு இவளோ நேரம்? உனக்கு அழுது பொலம்புனா தான் மனசு கரையுமோ? நமக்காக வந்திருக்காளே போன்னு சொல்றோமேனு தோனுச்சா..? போடா..", செல்லமாக ராமுவின் நெஞ்சில் குத்தினாள் கை குவித்து.

"சரி ரேணு, வா உள்ள வா, என்னோட பழசே இது தான்..", கையை உள் நோக்கி பவ்வியமாக நீட்டி, வரவேற்றான் தன் மகாராணியை.

"ம்ம்.. பரவால, ஒரு அறைனாலும், ரொம்ப சுத்தமா வச்ருக்க ராமு, பசங்க அறைனா கலஞ்சு இருக்கும்னு சொல்வாங்க, ஆனா உன் அறை உன்ன மாதரியே ரொம்பச் சமத்தா இருக்கு கலையாம."

"ம்ம்.. படிச்சிட்டு இருந்தேன், இனி உன்னக் கிட்ட வச்சுக்கிட்டுப் படிச்சாப்ல தான்.."

"ஏன்.. நான் என்ன செஞ்சேன், படிங்க படிப்பாளி, படிங்க, நான் ஒன்னும் செய்ல, நான் ஒரு ஓரமா தூங்கறேன்..", சற்று கோபமாக நடித்தாள் ரேணு.

"ஏ ரேணு ரேணு கோச்சுக்காதடா.... நான் சும்மா சொன்னேன், இது நான் தூங்கற நேரம் தான், தூங்கலாம்னு தான் நெனச்சுட்டு இருந்தேன்.."

"ம்ம்.. சரி, எனக்கு தூக்கமா வருதுடா, தூங்கறேன், எங்க படுக்க?"

"ம்ம்.. நீ மேல கட்டில்-ல படுத்துக்கோ, நான் கீழ பாய் போட்டுப் படுத்துக்கறேன்.."

"ம்ம் சரி, எனக்கு தரைல படுத்துப் பழக்கம் இல்லடா., தப்பா எடுத்துக்காத?"

"சரி ரேணு, நான் படுதுக்றேன்னு தான சொல்றேன்.."

"சரி.. தூங்கறேன்.. கீழ மட்டும் தான் படுத்திருக்கணும் நல்ல பிள்ளையா?", குறும்பாக சொல்லி, கண்ணடித்தாள் ரேணு.

அழகு தேவதையைத் தோன்றினாள் அவள்.

"சரி சரி, நான் எதும் செய்யாட்டியும் செய்னு சொல்வ போல, தூங்கு தூங்கு,

இருவரும் கதை பேசியவாறே உறங்கிப் போனார்கள் மறு நாள் நடக்க இருக்கும் விபரீதம் அறியாமல்.


-------------------------------------------------------------------------------

என்ன ஆயிற்று மறுநாள்? வாசிக்கலாம் நாளை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில: 1) நல்ல பிள்ளையா இருக்கணும். 2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும். 3) தெனமும் skype ல பேசிரணும். 4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது! இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை. Ginger, Guy, Kanmani :D Lab Friends “கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா...