முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#7

முந்தைய பாகங்கள்: 


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6 

அதிகாலை ஐந்து மணி, ராமுவின் அலைபேசியின் மணிக்கடிகாரம் அலறியது.

எழுந்து கொண்டான். ரேணுகாவை எழுப்ப அவளைப் பார்த்தான்.

ஆழ்ந்த தூக்கத்தில், அழகுப் பதுமையாய் இருந்தாள் ரேணுகா.

அசையாமல் ஐந்து நிமிடம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். குழந்தை போல் கள்ளமில்லாமல் தோன்றினாள் ரேணுகா. அவள் அருகில் சென்றான், குழந்தைக்கு தாய் அன்பாய் முத்தமிடுவது போல, அவள் தலை கோதி, நெத்தியில் முத்தமிட்டான் மெதுவாக.

சட்டென்று கண் விழித்தாள் ரேணுகா, "ஏய்.. உன்ன கிட்ட வரக்குடாதுனு ராத்திரி தான சொன்னேன்.. சேட்ட-டா உனக்கு.. போ.. போ.. தள்ளி போ.." செல்லமாய் அவன் தலையை பின் தள்ளி கண் சிமிட்டினாள் ரேணுகா.

"ஏ நான் ஒன்னும் செய்ல ரேணு, நீ கொழந்த மாதிரி அழகா தூங்கிட்டு இருந்த, பாசமா ஒரு முத்தம் வச்சேன் நெத்தில, அது தப்பா?"

"ம்ம்.. என்ன மொத கல்யாணம் பண்ணிக்கோ, அப்புறம் இதெல்லாம் செய்லாம்"

"ஆமா ஆமா ஒரு முத்தம் குடுத்தேன், அதுக்கு இவ்ளோ பெரிய விவாதமா? சரி சரி சீக்கிரமா குளிச்சுக் கெளம்பு, உங்க அப்பாவ பாத்து பேசிட்டு உன்ன வீட்ல விட்டுட்டு வரேன்."

"நான் தான் அங்க வரமாட்டேன்னு சொன்னேன்ல.. நீ வேணும்னா போய் பேசிட்டு வா.."

"ஏ என்ன பேசற.. இந்நேரம் உங்கப்பா உன்னக் காணோம்னு தேடிட்டு இருப்பாங்க"

"தேடட்டும், நான் இங்க தான் இருப்பேன்னு தெரியும், வருவாங்க பாரு இன்னும் கொஞ்ச நேரத்ல..", விளையாட்டாய் பேசிக் கொண்டு இருந்தாள் ரேணுகா.

"அதான் சொல்றேன், சீக்கிரமா கெளம்புன்னு, அவங்க வரதுக்கு முன்னாடி நான் உன்னக் கொண்டு போய் விடனும், அவங்களா தேடி வந்தா நல்லா இருக்காது ரேணு., சொன்னாக் கேளு, அடம் புடிக்காம கெளம்பு."

"இல்ல, நீ அங்க போய் என்ன விட்டுட்டேன்னா எங்கப்பா நிச்சயமா அந்த பணக்கார மாப்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க.. தயவு செஞ்சு, நீ எங்கப்பா வந்தாலும் என்ன அனுப்பாத ராமு, நான் உன்னோட இங்கவே இருக்கறேன்.."

"அது சரி வராது ரேணு.. இப்போ என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, என்னோட லட்சியத்த அடைஞ்சதுக்கு அப்றமா தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு இருக்றேன், சொன்னாப் புரிஞ்சுக்கோ, இப்போ எனக்கு வேலையும் இல்ல.."

"என்ன விட உனக்கு லட்சியம் தான் பெருசாப் போச்சுல? நீ மட்டும் என்ன கல்யாணம் பண்ணிக்கல.. செத்துடுவேன் ராமு?", வேகமாய் ஓடிச் சென்று, அடுப்பின் அருகே இருந்த கத்தியை கையில் எடுத்து கையை வெட்டிக் கொண்டாள் ரேணு.

விளையாட்டாய்ப் பேசுகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தா ராமு அதிர்ந்தான், குருதி ஆறாய் வழிந்தது ரேணுவின் கையில் இருந்து, ஓடிச் சென்று அவளது கையில் அருகில் இருந்த துண்டை வைத்துக் கட்டினான், அவளை நாற்காலியில் அமர்த்தி விட்டு, "இரு ரேணு ஒரு அஞ்சு நிமிசம், வரேன், பக்கத்துல வண்டிக்காரர் இருக்காரு கூட்டிட்டு வரேன்.

ஓடினான் பக்கத்து வீட்டை நோக்கி, கதவை படபடவென தட்டினான், கண்ணீர் கடலாய் வழிந்தது அவனது கண்களில் இருந்து அவனை அறியாமலே.

கதவைத் திறந்தார் அந்த வீட்டுக்காரர், " அண்ணே, அவசரமா வண்டி வேணும்னே, ரேணுகா கைய வெட்டிக்கிட்டாணே , பட படத்தான்".

"பொறுப்பா தம்பி, என்னாச்சு? யாரு ரேணுகா? என்னப்பா சட்டையெல்லாம் ரத்தம்?", ரேணுவின் குருதி அவன் நெஞ்சோரம் சட்டையில் வழிந்து இருந்தது, அதைப் பார்த்துப் பதறியவாறு கேட்டார் அந்த வண்டிக்கார அண்ணன்.

"அண்ணே நான் வெவரமா சொல்றேண்ணே, வாங்கண்ணே அவசரம்ணே  .." கண்ணீரோடு கதறினான்.

"சரி தம்பி நீ போ, சட்டைய போட்டுட்டு வரேன் ரெண்டு நிமிசத்துல, வண்டில போய் உக்காரு."

வேகமாய் ஓடினான் வீட்டுக்குள், "ரேணு, ரேணு, வா வண்டி கூப்ட்ருக்கேன் வைத்தியர் கிட்ட போகலாம்..", அவன் அவளை நோக்கி ஓடினான், ரத்தம் அதிகம் வெளியேறியதால், மயங்கி இருந்தாள் ரேணு.

"ரேணு, ரேணு, ரேணு.. கன்னத்தில் தட்டினான்.."

அரை மயக்கத்தில், "ராமு.. " பேச முயன்று தோற்றுப் போனாள் ரேணு.

குழந்தையாகவே அவளை பாவித்து தோளில் தூக்கிச் சென்று வண்டியில் அமர வைத்தான்.

"யாரு தம்பி இந்தப் பொண்ணு, ஏன் கைய வெட்டிக்கிச்சு?", குழப்பமாய்க் கேட்டவாறே வண்டியை எடுத்தார் குமார்(குமரேசன்) அண்ணன்.

"நான் வெவரமா அப்புறம் சொல்றேண்ணே, கொஞ்சம் வேகமா போங்கண்ணே..", அழுதவாறே பேசினான் ராமு.

"சரி தம்பி கவலப்படாத ஒன்னும் ஆகாது", வேகமாய் செலுத்தினார் வண்டியை.

-------------------------------------------------------------------------

ரேணுகாவின் தந்தை வந்தாரா? நாளை வாசிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்