மழையே நியாயமா
சொல், மழையே நியாயமா?
மழையே நியாயமா?
நீ செய்வது நியாயமா?
புள்ளிப் புள்ளி வைத்து,
தெருவில் போட்ட கோலம்,
துள்ளித் துள்ளி வந்து அழித்தாயே!
கன்னம் மட்டும் காட்டி,
முத்தம் போடு என்றால்,
சொட்ட சொட்ட என்னை நனைத்தாயே!
மழையே நியாயமா
சொல், மழையே நியாயமா?
மழையே நியாயமா?
நீ செய்வது நியாயமா?
தினமும் என்னைப் பார்க்க,
வருவாய் என்று நின்றேன்,
ஏக்கம் தந்து எங்கே சென்றாயோ?
மின்னல் இடிகள் முழங்க,
காதல் மணம் செய்ய,
என்னைத் தேடி இன்று வந்தாயோ?
மழையே நியாயமா
சொல், மழையே நியாயமா?
மழையே நியாயமா?
நீ செய்வது நியாயமா?
நீ செய்வது நியாயமா?
nice man,,,
பதிலளிநீக்குநன்றி மழைக் காதலரே!
பதிலளிநீக்குGood one...
பதிலளிநீக்குRain In my view...
http://www.mokkaiswami.blogspot.in/2011/10/blog-post_23.html
http://www.mokkaiswami.blogspot.in/2011/10/blog-post_24.html
Good One...
பதிலளிநீக்குRain in my view...
http://www.mokkaiswami.blogspot.in/2011/10/blog-post_23.html
http://www.mokkaiswami.blogspot.in/2011/10/blog-post_24.html