முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறு கதை

                                                               
குளிர்ந்த காற்று.....


அந்தப் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அவளின் கண்களின் ஓரம் வெள்ளமாய் கண்ணீர் பெருகி வந்தது. நடந்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.
தான் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றியது. வீட்டை விட்டு வெளியேறியது தவறு என்று தோன்ற, அவள் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
இருப்பினும், தன் தந்தையின் மீது அவளுக்கு கோபம் அதிகமாகவே வந்தது.
குளிர்ந்த காற்று அவள் கோபம் தணிக்க முயன்றது. ஆனால் காற்றுக்கும் தோல்வியே!
நடந்ததை நினைத்து பார்த்தாள்......
"எவ்வளவு கம்மியா mark வாங்கியிருக்க? 1130! இந்த மார்க்குக்கு உனக்கு எவன்
medical seat தருவான்? .... என் கனவுல மண்ண போடுட்டியே." "அப்பா.. என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணேன், இவ்வளவு தன்பா முடிஞ்சுது என்னால please... புரிஞ்சுக்கோங்கப்பா..."(இது பொண்ணு)
"என்னமோ போ! இனி உனக்கு படிக்க என்னால செலவு பண்ண முடியாது,
உன் மார்க்குக்கு எவன் ஓசில சீட் தரானோ , அந்த காலேஜ்ல போய் நீயா சேந்து படிச்சுக்கோ,இல்லன்னா  போ எங்கயாவது..!"
"அப்பா..... அப்படி..."
"நிறுத்து, நான் உனக்கு அப்பனில்ல"
"அப்பா..."
"அப்படி கூப்டாத"
(இந்தப் பாச போராட்டத்துக்குப்  பின் சற்றும் சிந்திக்காமல் வீட்டை விட்டு
வெளியேறினால் அந்த பேதைப் பெண்)
               
மழைச்சாரல் அவள் நினைவைக் கலைத்தது, தன் நிலையை எண்ணி வருந்தி அழுதாள். தன் தாயின் பாசத்தை, தம்பியின் நேசத்தை உதறி வீட்டை விட்டு வந்ததை எண்ணி வருந்தினாள். அச்சமயம், அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஒரு இளைஞன். தன்னை குமார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவளது பெயரைக் கேட்டான்.
பேருந்து இரைச்சலில், அவள் காதில் அவன் கேட்டது விழவில்லை.
"என்ன கேட்டீங்க?....",என்றாள்.
"என் பெயர் குமார் , உங்க name என்ன?
"சுவாதி"
"sweet name"
"ஏன் சோகமா இருக்கிங்கனு தெருஞ்சுக்கலாமா?"
தயங்கியவாறு அவளது கதையைச் சொன்னாள்.
                    "oh what's this shwathi? உங்க அப்பா, உங்க மேல நிறைய நம்பிக்கை வச்சிருந்திருக்காங்க, அதான் அவங்களுக்கு நீங்க 1130 mark வாங்கினதுல கோபம் , நீங்க இன்னும் நிறைய வாங்கனும்னு நினைச்சிருப்பாங்க.!"
"அப்படியா? நெஜமாவா சொல்றிங்க? அப்பாவுக்கு என் மேல நம்பிக்கைன்னு சொல்றிங்களா?
"உண்மையாதான். நீங்க இப்படி வெளிய வந்ததால, உங்களுக்கு எவ்வளவு ஆபத்து? எங்க போவீங்க??என்ன செய்வீங்க?? வீட்டுக்குப் போங்க"
"சரி",சுவாதி.
(குமாரின் பேச்சால் மனம் மாறி வீடு திரும்பினாள் சுவாதி)
        வீட்டில்.............
"அம்மாடி.. வாம்மா... எங்கடா போன? அப்பா ஒரு வார்த்த கோபத்துல சொல்லிட்டா இப்படியா பண்றது..?",என்று சிறு பிள்ளை போல அவளைக் கட்டிக் கொண்டு அழுதார் சுவாதியின் தந்தை.
மனிச்சுடுங்கப்பா... தெரியாம பணிட்டேன்,,,"
"பரவா இல்லம்மா......"
தன் தந்தையின் அன்பைப் புரிந்தவளாய்த் தேம்பி அழுதாள், அவள் ஆனந்தத்தில்.....
குளிர்ந்த காற்று, அவள் அழுகையை தணிக்க விருப்பமின்றி, அவள் தன் தந்தையின் அன்பைப் புரிந்ததால், காற்றும் ஆனந்தத்தில் அழுதது, மழையாய்......
அன்றிலிருந்து, அவள் வாழ்வில் குளிர்ந்த ஆனந்தக் காற்று வீசத் தொடங்கியது...

                                         முற்றும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்