முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா சொன்ன கதை - தவளை ராசா !!!



இப்போ உங்க அம்மா கத சொல்ற மாதிரி கற்பனை செஞ்சுக்கோங்க...

ஒரு நாளு குட்டி வயசுல.,
சாப்பிடாம அழுதுகிட்டு இருந்தேன்..
அம்மா கத சொல்ல..
"ஆ,,,"ன்னு கத கேட்டு சாப்பிட்டு முடிச்சேன்...
அது என்ன கத சொல்லட்டா..?!!
அது தான் தவள ராசா கத...

" ஒரு ஊர்ல ஒரு அழகான பொண்ணு இருந்தாளாம்..
அவள கல்யாணம் பண்ண
எல்லா நாட்டு ராசாவும்
ஆசப்பட்டாங்களாம்..!!!
ஆனா அவளுக்கோ யாரையும் புடிக்கலையாம்
அவ தோழிங்க எல்லாரும்,
அழகான ராசாவ கல்யாணம் செஞ்சாங்களாம்..
இவளோ,.. அவள, ஒரு நாள் தண்ணில விழுந்தப்போ,
காப்பாத்துன தவளைய தான்
கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாளாம்...
வேற வழி இல்லாம.,
அவ வீட்லயும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாகளாம்!!!!
கல்யாணம் ஆகி அந்த பொண்ணு ,
அந்த தவள ராசாவ நல்ல பாத்துகிட்டாளாம்
கல்யாணம் ஆகி 30 நாள்ல தவள ராசா.,
அழகான இளவரசனா மாறிட்டாராம்....
அவங்க ரெண்டு பேரும் அடுத்து,
சந்தோஷமா இருந்தாங்களாம்."


நீதி :-அழகா இருக்கிறது முக்கியம் இல்ல.,
அன்பா இருக்கணும்.,
எல்லா உயிரினத்துட்டையும் அன்பு காட்டணும்..
என்ன புரியுதா செல்லம்???

இப்போலாம் சின்ன வயசு சுட்டிகளுக்கு அம்மா எல்லாரும் கதையே சொல்றதில்லயாம், :( பாவம்... :( :( :( 
எல்லாரோட வாழ்க்கையும் இயந்திரத் தனமா மாறிப் போச்சு..
சின்ன சின்ன நல்ல விஷயம் எல்லாம் காணாம போகுது..
இத எல்லாம் தொலைக்காம பாத்துப்போம்????

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்