முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாகுபாடின்றி நேசிப்போம் !!!


"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" -- பாரதியார் 

  பெண்களின் நிலை மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆயினும் சில இடங்களில் பெண்கள் சில கொடுமைகளை அனுபவித்து தான் வருகிறார்கள். நான் இங்கு பெண்களுக்குச்  சாதகமாய், பெண் உரிமைக்குக் குரல் கொடுக்க முற்படவில்லை.  கிடைத்த 
உரிமைகளையும் , சுதந்திரத்தையும் தவறாகக் கையாளும் சில பெண்களைப் பற்றியும்., பெண்களைத் தாழ்வாக என்னும் சில ஆண்களைப் பற்றியுமே  எழுத முற்படுகிறேன்.


  பெண்களுக்கு எதிரான செயல்கள், கொடுமைகள் இன்றும் பல இடங்களில் நடந்து வந்தாலும்., சில பெண்களால் ஆண்களுக்கே துன்பம் ஏற்படும் அளவிற்கு, சில இடங்களில் பெண்கள் அதீதமாக முன்னேறி இருக்கிறார்கள். ஏதேனும் வெறுப்பு இருப்பின், கணவரின் மீதே பொய்ப் புகார் கொடுக்கும் பெண்கள் இன்று பெருகி வருவதென்னவோ  உண்மை தான். 

  இயற்கையிலேயே, பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்களே. ஆண்களின் துணை பல இடங்களில் தேவை தான் எமக்கு. ஆயினும் இதனால் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றில்லை. பெண்ணின் துணை இன்றி ஒரு ஆண் வாழ்வதும் கூட கடினமே. தாயாகவோ., தாரமாகவோ., தங்கையாகவோ., ஏதேனும் ஒரு விதத்தில் பெண்ணைச் சார்ந்தே ஆணும் இருக்கிறான். 

   பெண்மை உண்டு ஆண்களிடமும்., ஆண்மை உண்டு பெண்களிடமும்.,
பெண்களின் உடல் பலவீனத்தைக் கொண்டு அவர்களைத் தாழ்வாக ஆண்கள் எண்ணாமல்., ஆண்களை எதிரிகளைப் போல் எண்ணி , அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க பெண்கள் புறப்படாமல்., பாசம் பகிர்ந்து வாழ்ந்தால்., வாழ்க்கை பவித்ரமாக அமையும்.

                        " பெண்மையும் ஆண்மையும் ஒரு சேர உழைப்பின்.,
                          பாரினில் பிரிவுகள் பெருமளவு குறையும்"
                                         "  பாகுபாடின்றி நேசிப்போம் !!! "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்