பள்ளியில் ஒரே ஒரு முறை சிறுகதை எழுதிய அனுபவம் உண்டு., நிறைய சிறுகதை வாசித்த அனுபவம் உண்டு., முயற்சிக்கிறேன் எழுத.,
படித்துவிட்டு மறக்காமல் கருத்து சொல்லிச் செல்லுங்கள்.. நன்றி.
சிக்ன(க)ல் !!!
சுட்டெரிக்கும் சூரியனில் "சிக்னலில்" நின்றிருந்தான், கிருஷ்ணா. கல்லூரியை "கட்" அடித்து விட்டு., படம் பார்க்க, பறந்து கொண்டு இருந்த நேரம் சிக்னலில் சிக்கிவிட்டான் பாவம்!!!
அந்நேரம் ., வெயிலின் கொடுமை குறைக்க., குற்றாலமாய் வந்தாள்., சுவாதி. தேவதை போல தான் தோன்றினாள், கிருஷ்ணாவின் கண்ணில்..
காதல் எல்லாம் தோன்றவில்லை., கண்ணுக்குக் குளிர்ச்சியாக,
பார்த்து நின்றான்...
சிக்னலில் இருந்து கிளம்பினான் அடுத்து சில நொடிகளில்., சுவாதி பின்னால் செல்லும் அளவு கிருஷ்ணா இல்லை., படம் பார்க்க விரைந்தான்.சுவாதி கிருஷ்ணாவை பார்க்கவே இல்லை.
நாட்கள் நகர்ந்தது.,
கிருஷ்ணா அன்று ஞாயிறு விடுமுறை என்பதால்., படம் பார்க்க வழக்கம் போல கிளம்பினான். படம் பார்க்க போன இடத்தில் அதே சுவாதி!!! சட்டென்று பின் நோக்கி நினைவு ஓடி., சுவாதியை அடையாளம் கண்டது!!! சற்று குதூகலித்தான்!
நண்பர்கள் கோரசாக கேட்டார்கள் " யார்டா அது ?? பல்பு எரியுது தலைல பாத்ததும் உனக்கு??!"
" தெரில., அன்னிக்கு சிக்னல்ல பாத்தேன்., அதான்., எவ்ளோ அழகுலடா..?!" , இது கிருஷ்ணா..
நண்பர்கள் " டேய்.. அப்போ இது லவ் தான்டா... பேசுடா போ.. போய் பேசு " கிருஷ்ணாவை மேலும் குதூகலிக்க வைத்தார்கள்.
"டேய் போங்கடா லவ் எல்லாம் இல்ல., சும்மா பாத்தேன் அவ்ளோ தான்" , கிருஷ்ணா.
" இப்டி தான்டா இப்போ சொல்வ.. அப்புறம் நாளிக்கு எங்கள தொல்ல பண்ண கூடாது , அட்ரெஸ் வேணும், நம்பர் வேணும்னு., ஒழுங்கா இப்பவே பேசி கரெக்ட் பண்ற வழியப் பாரு" என்று நண்பர்கள் ஏத்தி விட ., ஒரு வேகத்தில் சுவாதியை நோக்கி நடந்தான் கிருஷ்ணா!!
நடையில் சற்றும் தயக்கம் இல்லை.,
" சும்மா சிங்கம் மாத்ரி போரான்லடா.. கண்டிப்பா கலக்கிருவான்டா", நண்பர்கள் பேசிக்கொண்டார்கள்!!
கிருஷ்ணா, அருகில் சென்று, சுவாதியை கூப்பிட்டான்., " hello miss !!!"
"yes", திரும்பினாள் சுவாதி. அழகு கொட்டிக் கிடக்கும் அற்புதத் தீவு போல , தோன்றினாள்!!
சிக்ன(க)ல் தொடரும்...!!!
♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥
( கிருஷ்ணா என்ன பேசினான்? தெரிந்து கொள்ள நாளை வாசிக்க வாங்க! )
கருத்து சொல்லிட்டு போங்க ..?
Hmm nice beginning... Superb attempt :D
பதிலளிநீக்குthank you :)
பதிலளிநீக்குhello miss
பதிலளிநீக்குyes
கவிதையாய் பூக்கட்டும் காதல்...
arambame amarkalam........:-)
பதிலளிநீக்கு