முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர் கதை - பாகம் 1 - சிக்ன(க)ல் !!!



பள்ளியில் ஒரே ஒரு முறை சிறுகதை எழுதிய அனுபவம் உண்டு., நிறைய சிறுகதை வாசித்த அனுபவம் உண்டு., முயற்சிக்கிறேன் எழுத.,
படித்துவிட்டு மறக்காமல் கருத்து சொல்லிச் செல்லுங்கள்.. நன்றி.




                                                              சிக்ன(க)ல் !!!
சுட்டெரிக்கும் சூரியனில் "சிக்னலில்" நின்றிருந்தான், கிருஷ்ணா. கல்லூரியை "கட்" அடித்து விட்டு., படம் பார்க்க, பறந்து கொண்டு இருந்த நேரம் சிக்னலில் சிக்கிவிட்டான் பாவம்!!!


அந்நேரம் ., வெயிலின் கொடுமை குறைக்க., குற்றாலமாய் வந்தாள்., சுவாதி. தேவதை போல தான் தோன்றினாள், கிருஷ்ணாவின் கண்ணில்..


காதல் எல்லாம் தோன்றவில்லை., கண்ணுக்குக் குளிர்ச்சியாக,
பார்த்து நின்றான்...


சிக்னலில் இருந்து கிளம்பினான் அடுத்து சில நொடிகளில்., சுவாதி பின்னால் செல்லும் அளவு கிருஷ்ணா இல்லை., படம் பார்க்க விரைந்தான்.சுவாதி கிருஷ்ணாவை பார்க்கவே இல்லை.


நாட்கள் நகர்ந்தது.,


கிருஷ்ணா அன்று ஞாயிறு விடுமுறை என்பதால்., படம் பார்க்க வழக்கம் போல கிளம்பினான். படம் பார்க்க போன இடத்தில் அதே சுவாதி!!! சட்டென்று  பின் நோக்கி நினைவு ஓடி., சுவாதியை அடையாளம் கண்டது!!! சற்று குதூகலித்தான்!


நண்பர்கள் கோரசாக கேட்டார்கள் " யார்டா அது ?? பல்பு எரியுது தலைல பாத்ததும் உனக்கு??!"


                                " தெரில., அன்னிக்கு சிக்னல்ல பாத்தேன்., அதான்., எவ்ளோ அழகுலடா..?!" , இது கிருஷ்ணா..


நண்பர்கள் " டேய்.. அப்போ இது லவ் தான்டா... பேசுடா போ.. போய் பேசு "  கிருஷ்ணாவை மேலும் குதூகலிக்க வைத்தார்கள்.


"டேய் போங்கடா லவ் எல்லாம் இல்ல., சும்மா பாத்தேன் அவ்ளோ தான்" , கிருஷ்ணா.


                                        " இப்டி தான்டா இப்போ சொல்வ.. அப்புறம் நாளிக்கு எங்கள தொல்ல பண்ண கூடாது , அட்ரெஸ் வேணும், நம்பர் வேணும்னு., ஒழுங்கா இப்பவே பேசி கரெக்ட் பண்ற வழியப் பாரு" என்று நண்பர்கள் ஏத்தி விட ., ஒரு வேகத்தில் சுவாதியை நோக்கி நடந்தான் கிருஷ்ணா!!


நடையில் சற்றும் தயக்கம் இல்லை.,


" சும்மா சிங்கம் மாத்ரி போரான்லடா.. கண்டிப்பா கலக்கிருவான்டா",  நண்பர்கள் பேசிக்கொண்டார்கள்!!


கிருஷ்ணா, அருகில் சென்று, சுவாதியை கூப்பிட்டான்., " hello miss !!!" 


"yes", திரும்பினாள் சுவாதி. அழகு கொட்டிக் கிடக்கும் அற்புதத் தீவு போல , தோன்றினாள்!!


சிக்ன(க)ல் தொடரும்...!!!
                                                                   ♥ ♥♥ ♥♥ ♥♥ ♥♥ ♥


( கிருஷ்ணா என்ன பேசினான்? தெரிந்து கொள்ள நாளை வாசிக்க வாங்க! )




கருத்து சொல்லிட்டு போங்க ..?




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....