முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம்-2 ---> சிக்ன(க)ல்!!!


( முதல் பாகம் படிக்கவில்லையா?இந்த " link " உபயோகப்படுத்துங்க.,
தொடர் கதை - பாகம் 1 - சிக்ன(க)ல் !!! படித்துவிட்டு , இங்க வாங்க!! )


திரும்பிய சுவாதியை பார்த்து ஒரு நொடி மலைத்து நின்றான் கிருஷ்ணா!
ஆனால் சட்டென்று சுதாரித்துக் கொண்டு., பேசத் தொடங்கினான்!!!


" ஹாய்.. உங்க பேர் என்னனு தெரிஞ்சுக்கலாமா??!!" 


"இல்ல., யார் நீங்க??!!!", திரு திருவென பயந்து போய் முழித்தால் சுவாதி.


" கூல்., பயப்டாதிங்க., உங்கள அன்னிக்கு சிக்னல்ல பாத்தேன் ; அழகா இருந்திங்க., ரொம்ப புடிச்சு போச்சு., அதான்... இன்னிக்கு பாத்ததும் பேர தெரிஞ்சுக்கலாம்னு கேக்றேன்., வேற ஒன்னுமில்ல., பயப்டாதிங்க., 
சொல்லுங்க உங்க பேர் என்ன??!" 
" ம்ம்ம்... அது.. என் பேரு... சுவாதி!! " , அதே பயத்தோடு தயங்கி தான்  சொன்னாள்.


" சரி., thanks ., இதுக்கு ஏன் இப்டி பயபட்றிங்க? அவ்ளோ தான்., thanks bye! " , அலட்டிகொள்ளாமல் அசால்டாய் சென்றான் கிருஷ்ணா!


நண்பர்கள், " டேய் நம்பர் கேக்காம ஏண்டா வந்த??! "


" ஏ பாவம்டா அவ., போய் பேர கேட்டதுக்கே பயந்துட்டா ரொம்ப.. இதுல நம்பர் கேட்ருந்தா அழுதிருப்பாடா.. !!" .,


நாட்கள் சென்றன.,


சுவாதி வீட்டில், வலை தளத்தை வலம் வந்து கொண்டிருந்தாள் .,  facebook -ல் friend request பார்த்துக் கொண்டிருக்க., நம் கிருஷ்ணா அனுப்பிய request- ஐ
பார்த்தாள், "இது அன்னிக்கு நம்ம கிட்ட பேர் கேட்ட பையனாச்சே.."  accept கொடுத்தாள்.


அடுத்த நாள்...


 online வந்ததும்., கிருஷ்ணாவும் அந்நேரம் online-ல் இருக்க., "hai " என்று ஆரம்பித்த பேச்சு... அப்பா அம்மா என்று.. அறிமுகம் வரை ஓடியது.. அறிமுகம் முடிந்து., இருவருக்குள்ளும் சிறு புரிதல் மலர்ந்தது..


நாட்கள் ஓட ஓட " புடித்தது புடிக்காதது" என எல்லாம் பரிமாறியாயிற்று இருவரும்...


சுவாதி கிருஷ்ணாவிடம் இருக்கும் " சிறு சிறு" தீய பழக்கங்கள் எல்லாம் தவறு என்று திருத்தத் தொடங்கினாள். அம்மா சொல்லி class cut  அடிப்பதை நிறுத்தாத கிருஷ்ணா., சுவாதி சொன்னதும் படிக்கத் தொடங்கினான். " சுவாதி சொல்லே வேதம் ஆயிற்று." சுவாதியும் நல்ல விஷயம் நிறைய சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள் நம் கிருஷ்ணாவிற்கு.


வேறு வேறு கல்லூரி என்பதால் ., இருவரும் நேரில் பார்க்காமல் வலை தளத்திலேயே பேசி வந்தார்கள். ஆனால் காதல் என்று இருவரும் சொல்லிக் கொள்ளவில்லை.


                                                                  ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


சொல்லிக் கொண்டார்களா? வாசிக்க வாங்க நாளைக்கு!!!


கருத்து சொல்லிச் செல்ல வேண்டுகிறேன் .நன்றி!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்