முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை ---> பாகம் 5 ---> சிக்ன(க)ல்




(பாகம் நான்கு படிக்கவில்லையா? இந்த link உபயோகப்படுத்துங்க
தொடர்கதை ---> பாகம் 4 ---> சிக்ன(க)ல்படிச்சிட்டு, இங்க வாங்க .)


அன்று இரவு ஒன்பதரை மணி இருக்கும்.,


கிருஷ்ணாவும் சுவாதியும் வழக்கம் போல் சிறிது நேரம் text செய்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.


" நான் உன்ன short-ஆ கிருஷ்-ணு கூப்டவா கிருஷ்ணா? "


"இதெல்லாமா permission வாங்கிட்டு கூப்டுவ ? கூப்டு உனக்கு புடிச்ச மாத்ரி no probs "  type செய்து அனுப்பிய போது , கிருஷ் என்று சுவாதி வைத்த செல்லப் பெயர் " பாரத ரத்னா விருது " பெற்ற இன்பம் தந்திருந்தது கிருஷ்ணாவிற்கு.


"தூக்கம் வருது கிருஷ் , நாளிக்கு exam இருக்கு படிக்கணும் இன்னும் கொஞ்சம் morning எந்திச்சு தான்., good night..." 


"ஏ சுவாதி நாளிக்கு என் birthday, உனக்கு treat குடுக்கலாம்னு நெனைக்கிறேன் . evening நம்ம first meet பண்ண சிக்னல் கிட்ட இருக்ற Friend connect pizza hut- கு வரியா?? " 


"ம்ம்ம்ம்... ok. கிருஷ்ணா, நான் friend ஒருத்திய கூட கூட்டிட்டு வருவேன் பரவாலியா? "


" ஓகே பரவால " 


" நீ வரேன்னு சொன்னியே பிகு பண்ணாம அதுவே போதும் ... " மனதில் நினைத்தான் கிருஷ்ணா..


" ம்ம் நாளிக்கு உனக்கும் exam இருக்குல?? birthday-னு குஷில படிக்காம போய்டாத படிச்சிட்டு போ நல்லா.. ok good night..." எப்பொழுதும் பத்து மணிக்கு மேல் text செய்வதை தவிர்ப்பாள் சுவாதி., அதேபோல் அன்றும் சரியாக பத்து மணிக்கு உறங்கச் சென்றாள்.


"ok good night சுவாதி" , கிருஷ்ணாவும் மனம் இன்றி முடித்தான்.


மறுநாள் சுவாதியை சந்திக்கப் போகிறோம் என்ற குஷி கிருஷ்ணாவிற்கு., தூக்கம் இன்றி இரவு நெடுநேரம் என்ன பேசுவது , எப்படிப் பேசுவது., காதல் சொல்வது .. என்று ஒத்திகை பார்த்தான்.


பின்பு கட்டிலில் படுத்து கனவு கண்டவாறே எப்படியோ உறங்கிப் போனான்.


காலையில் எழுந்ததும் முதல் text சுவாதியின் happy birthday text ஆகத் தான் இருந்தது.


"all the best" சொல்லிக் கொண்டார்கள் இருவரும் பரிட்சைக்கு.
                 
                                                         ----------------------------


கல்லூரி முடிந்து கிருஷ்ணா வந்து காத்திருந்தான் சுவாதிக்காக friend connect pizza hut-ல்


சுவாதி தூரத்தில் பேருந்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்து ஓடிச் சென்றான்..


" sorry கிருஷ்ணா college-ல class முடிய கொஞ்சம் late ஆய்டுச்சு 
sorry and wish you a very happy birthday " என்று ஒரு பரிசுப் பொட்டலத்தைக் கொடுத்தால் சுவாதி.


" .ம்ம் இத இப்பவே பிரிக்கக் குடாது... வீட்டுக்கு போய்.. பிரிச்சுப் பாரு.."
புதிர் போட்டால் சுவாதி.




" அவளும் , காதல் சொல்ல பரிசு கொண்டு வந்திருப்பாளோ?? " கிருஷ்ணாவின் மனம் எட்டி குதித்தது





" ம்ம் சரி " என்று உள்ளே அழைத்துச் சென்றான் கிருஷ்ணா..


தன் தோழியை அறிமுகம் செய்து வைத்தாள் சுவாதி. பின்பு சிறிது உரையாடி pizza கொறித்து விட்டு , விடை பெற முயன்றாள்,  அரை மணி நேரத்தில் , நேரம் ஆகிறது என்று.


" ஏ இரு சுவாதி, ஒரு five minutes..please.. நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..." கிருஷ்ணா சொல்ல,


தோழியை busstop செல்லச் சொல்லிவிட்டு , " என்ன கிருஷ்ணா??! "
தயங்கி சற்று பயத்தோடு கேட்டாள் சுவாதி..


சொல்ல முற்பட்டு , அவள் கண்களைப் பார்த்தான் கிருஷ்ணா..


ஊரில் உள்ள மின் விளக்குகள் எல்லாம் ஒன்றாய் எரிவது போல்., மின்னின சுவாதியின் கண்கள்...


அதன் பிரகாசத்தில் கிருஷ்ணாவின் கண்கள் கூசின..


சற்று தயங்கினான்... பதறினான் ..


                                                                     ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥


காதல் சொன்னானா கிருஷ்ணா???


சுவாதி என்ன பரிசு வைத்திருந்தாள்???


காத்திருங்கள் நாளை இரவு வரை !!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்