முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடர்கதை --> காதலி காதலி!#3


காதலி காதலி!  #1 | #2 


படிச்சிட்டு இங்க வாங்க


வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மாவிடம் கேட்க எண்ணினான்... ஆனாலும், திட்டு விழுமோ என்று பயம், தயங்கி மெளனமாக அமர்ந்து கொண்டான்.

ரேணுகா முகம் கழுவி, பால் குடித்து விட்டு, முரளியிடம் வந்தாள்; முரளி தயக்கமும் ஏக்கமுமாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து பேசத் தொடங்கினாள், "முரளி, என்னப்பா ஆச்சு? ஏன் ஒருமாதிரி இருக்க?

"நீங்க திட்ட மாட்டேன்னு சொல்லுங்க", முரளி தயக்கமாய் பேசினான்.

"சரி திட்டல, ஏண்டா பாடசாலையில ஏதும் சேட்ட செஞ்சிட்டியா?"

"இல்லம்மா.. இன்னிக்கு எங்க வகுப்புல புதுசா ஒரு பையன் சுரேசு-னு வந்திருக்கான். அவனோட அப்பாவும் வெளிநாட்ல தான் இருக்காங்களாம்.."


சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரேணுகாவின் முகம் மாறியது..

"பாருங்க உங்களுக்கு கோவம் வருது.."

"சரி சொல்லு, அதுக்கு என்ன? அவங்கப்பா இருந்தா?"

"இல்லமா.. அவங்கப்பா வராங்களாம் அடுத்த வாரம், நம்ம அப்பா எப்போமா வருவாங்க? சொல்லுங்கம்மா, இல்ல தொலைபேசிலயாச்சும் பேசறேன்மா.. நானும் எவ்ளோ நாளா கேக்கறேன் தொலைபேசில பேசறேன்னு.."

tears fall"எத்தன தடவ சொல்லிருக்கேன், அப்பாவப் பத்தி பேசாதனு, சொன்னாக் கேளுடா, அப்பா வருவாங்க, உனக்கு அப்டியும் அப்பாவ உடனே பாக்கணும்னா.. எண்ணக் சிரமப்படுத்திப் பாக்கணும்னா.. கேளு, தினமும் கேளு, கேட்டு என்ன சிரமப்படுத்து.." கோபத்தில் கத்தினாலும், அழுதாள் கதறி பின்பு.

அப்பாவைப் பற்றிக் கேட்டாலே அம்மாவுக்கு ஏன் இவ்வளவு கோவம்? புரியாமல் அமைதியானான் முரளி.

"அம்மா.. அழுவாதிங்கம்மா நான் இனிமேல் கேக்கமாட்டேன்மா, அப்பா வரப்போ பாத்துக்கறேன்மா.. மன்னிச்சுடும்மா தயவு செஞ்சு அழுவாதிங்கம்மா..", தானும் அழுதவாறு சமாதானம் செய்தான், அம்மா அழுவது பொறுக்காமல்.


முரளியை கட்டி அணைத்தவாறு, அழுதாள் ரேணுகா.

"நான் கேக்கமாட்டேன்மா இனிமேல்... எல்லாரும் அப்பா கூட போறப்போ எனக்கும் ஆசையா இருக்குமா.. எல்லாரும் அவங்க அப்பாவ பத்தி பேசறப்போ, எனக்கு வருத்தமா இருக்குமா.. அதான் கேட்டுட்றேன் கேக்கக்குடாதுனு நெனச்சாலும், அழுவாதிங்கம்மா...", அவனே தாயாய் மாறி, அவளது தலை கோதி ஆறுதல் சொன்னான்.

"எனக்கும் புரியுதுடா.. நேரம் வரப்போ அப்பாவ பாக்கலாம் கண்டிப்பா.. அப்பா நெஜம்மா வருவாங்கடா.. அம்மாகிட்ட சொல்லிருக்காங்க, வருவாங்க நிச்சயமா..", அழுகையுடன் பேசினாள் ரேணுகா.


அம்மாவின் அழுகை, அமைதியாக்கினாலும், மனதுள் வருத்தமும், ஏக்கமும் நிறைந்து இருந்தது முரளிக்கு.

இரவு வெகுநேரமாகியும் உறங்காமல், தான் செய்த முட்டாள்தனம் எண்ணி வேதனை அடைந்து கொண்டிருந்தாள் ரேணுகா. கணவன் அருகில் இல்லாமல் மகனின் கேள்விக்கும், சமுதாயத்தின் கேள்விக்கும் விடை சொல்ல வழி இன்றி தவித்து வாழும் வாழ்க்கை கசந்தது அவளுக்கு.

கணவனோடு சேர்ந்து இருந்த நொடிகள், கணவனின் அன்பு, அனைத்தும் நினைவாக வந்து வதைத்தது.


--------------------------------------------------------------------------------

ஏன் கணவன் ரேணுகாவோடு இல்லை? பிரிந்தது ஏன்...?
நாளை வாசிக்கலாம் அடுத்த பாகத்தில்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்