முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா!#2(தொடர்கதை)

முந்தைய பகுதிகள்:

ஓவம்மா! #1


ஏய் எந்திரி எந்திரி.. எந்திரி ஓவம்மா.. கணக்குப் பிள்ள வந்துட்டாருடி.. எந்திரிக்கியா இல்லையா..?, ஓங்கி எத்துவா எங்கக்கா.. எங்கக்கா தான் எழுப்புவா தினமும் காலைல மூனு மணிக்கெல்லாம் கணக்குப்பிள்ள வந்து கூப்ட உடனே. தினமும் வேலைக்கு எல்லாரையும் எழுப்ப அங்க பக்கத்திலயே இருந்த கணக்குப்பிள்ள வருவாரு. எனக்கு ஒரு பத்து வயசு கிட்ட இருக்கும் அப்போ. எங்கக்காக்கு இருவது வயசு, கல்யாணமாகி ரெண்டு பொம்பளப் பிள்ளை வச்சிருந்தா.

அவ பிள்ளைங்க ரெண்டும் பள்ளிக்கூடம் போவும், நான் எங்க ஊருக்கே ரொம்ப பிரபலமான, தீப்பெட்டி ஆபீசுக்கு (தொழிற்சாலை) வேலைக்குப் போவேன். வேலைக்குப் போகத்தான் எங்கக்கா எழுப்புவா மூனு மணிக்கெல்லாம்.

மூனு மணிக்கி எந்திச்சி வீட்டுப் பக்கத்துல ஒரு அடி கொழாய் இருக்கும், அதுல தண்ணி அடிச்சு, அங்கனயே குளிப்பேன். குளிக்கிறது ரொம்ப நேரம் குளிச்சா, பின்னாடி கூடி வந்து எங்கக்கா நடு முதுகுல ஓங்கி எத்துவா. அதுக்கு பயந்துக்கிட்டே ரெண்டு நிமிஷம் தான் குளிப்பேன்.

அவசரமாக் குளிச்சு, ஆபீசுக்குப் போவேன். கட்ட அடுக்குவேன் நான் நல்லா. காலைல போனதும் என்ன தான் கட்ட கலைக்க சொல்லுவாங்க, நான் கலாச்சா அன்னைக்கு நெறையா கட்ட ஓடும், மூவாயிரம் கட்ட கூட ஓடும். என்ன எல்லாரும் ராசிக்காரின்னு சொல்லுவாங்க எங்க ஆபீசுல.

கட்ட அடுக்குரதுல எல்லாரும் போட்டி போட்டு அடுக்குவோம், யாரு நெறைய கட்ட அடுக்குறது சாயுங்காலத்துக்குள்ளனு, நெறைய கட்ட அடுக்கரவங்களுக்கு பரிசு குடுப்பாங்க, சோப்பு டப்பா, கண்ணாடி, ரப்பர் பேண்ட்னு.

கட்ட அடுக்கும்போதே கத பேசுரதுனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். முந்துன நாள் பாத்த எம்.ஜி.ஆர். படம் கதைய சொல்லிக்கிட்டே அடுக்குவேன் என் பக்கத்துல இருக்க அக்கா கிட்ட.

சிலநேரம் கத பேசிக்கிட்டு அடுக்காம உக்காந்திருவேன், எங்கக்கா, அந்நேரம்னு பாத்து எங்க இருந்து தான் வருவாளோ. வந்துருவா.
ஏண்டி கழுத, கட்ட அடுக்காம சொகமா கத கேக்குதோ, உனக்கு தெண்டச்சோறு போடச் சொல்லுறியா வேல பாக்காம, ஒழுங்கா சாயங்காலம் காசு வீடு வந்து சேரனும், எங்கயாவது வாங்கித் திங்கப் போன.. அவ்வளவு தான், வீட்ல சேக்க மாட்டேன். பன்னெண்டு ரூவாய்க்கு கொறச்சலா இருக்கக் குடாது.., முதுகுல ஓங்கி எத்திட்டு, கத்திட்டுப் போவா.

அவளும் என்கூட அதே ஆபீசுல தான் வேல பாத்தா, நான் கட்ட அடுக்குவேன், அவ அடப்பா.

ஒரு நாளைக்கு முப்பது கட்ட அடுக்குனா, எனக்கு பன்னெண்டு ரூவா தருவாங்க, அப்போ ஒரு கட்டைக்கு எவ்வளவுன்னு கணக்குப் பாத்துக்கோங்க. வேகமா நல்லா அடுக்குற பெரியவங்கன்னா ஒருநாளைக்கு அம்பது கட்ட கூட அடுக்குவாங்க. நானு முப்பது தான் அடுக்குவேன் என் வயசுக்கு.

 ------------------------------------
ஓவம்மாவின் கதை நீளும் அடுத்த பாகத்தில். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்