முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #3 (தொடர்கதை)

முந்தைய பகுதிகள்:

ஓவம்மா! #1 | #2

தினமும் நான் வேல முடிஞ்சதும் வீட்டுக்குப் போவேன், போய் அக்கா கிட்ட காசக் குடுத்துட்டு, அக்கா வேல சொல்லுவா. பாத்திரம் தேச்சு, வீடு கூட்டுவேன்.

சில நேரம், பக்கத்து வீட்ல புது டி.வி வச்சுப் படம் காட்டுவாங்க, ஒளியும் ஒலியும் - அதப் பாக்க வாங்குன சம்பளத்தோட போய்டுவேன், வீட்டுக்குப் போனா அக்கா மிதிப்பானு தெரியும், ஆனாலும் எல்லாப் பிள்ளைகளும் போறப்போ எனக்கு ஆச வந்து போய்டுவேன், அப்பறம் அன்னிக்கு ராத்திரி நல்லா அடி வாங்குவேன்.

அப்பறம் அக்காகிட்ட கெஞ்சிக் கூத்தாடி, பக்கத்து வீட்டு பவளக் கொடியோட வெளையாடப் போவேன் தெனமும். பவளத்தோட அப்பா மிட்டாய், முறுக்கு எல்லாம் செஞ்சு விப்பாங்க. பலகாரக் கட வச்சிருந்தாங்க.

அவங்க கடைக்குப் போனா எப்பவும் ஏதாவது கொஞ்சம் சாப்பிடக் குடுப்பாங்க, அதுக்காகவே தினமும் அவங்க கடைக்குப் போவேன். இப்போ நெனச்சா எனக்கே என்னவோ மாதிரி இருக்கு அப்படி சாபட்றதுக்கே போனது, ஆனா என்ன செய்ய தெனமும் ஒரு வேல தான் எங்கக்கா சுடு சோறு போடும், அதுவும் கொழம்பு வைக்காது, ஊறுகாய கடிச்சுக்கிட்டு, புளிச்ச தயிர் ஊத்தி சில நாளு, தக்காளி வதக்கி சில நாளு, வித விதமா சாப்டனும்னு ஆச எனக்கு, அதான், தவறாம பவளத்தோட கடைக்கு ஓடி ஓடிப் போய்டுவேன்.

பவளம் பள்ளிக்கூடம் போவா, நல்ல துணி போட்ருப்பா, தினமும் அவங்க வீட்ல மூனு வேலையும் சுட சுட சமைப்பாங்க, அவளப் பாத்து என்கூட வேல பாக்குற எல்லாப் பிள்ளைங்களும் சொல்லுமுங்க, "பவளம் குடுத்து வச்சவடி.." னு.

எனக்கும் ஒரு ஆச, "ஓவம்மா குடுத்து வச்சவடி.." னு என்னப் பாத்து எல்லாரும் சொல்லனுமுன்னு...

பவளம் என் கூட வேலையாட வருவா தினமும். நாங்க ரெண்டு பேரும் சேந்து கண்ணக் கட்டி வெளயாடுவோம், ஓடி வெளயாடுவோம்.. எங்க கூட நாளு பிள்ளைங்க இருப்பாங்க.

ரெண்டு கூட்டமா இருப்போம். நா இருந்த கூட்டத்துக்கு பவளம் தான் தலைவி, இன்னொரு கூட்டம் விமலாவோடது.

விமலாவும் பணக்காரி தான். அவளும் பள்ளிக்கூடம் போவா. அவங்க அப்பா டீக்கட வச்சிருந்தாரு.

எங்க ரெண்டு கூட்டமும் சேரவே மாட்டோம். அப்படி ஒரு சண்ட வரும். சண்டை சமயத்துல தூது விடுவாங்க என்ன தான் எங்க கூட்டத்து சார்பா. நான் தான் எங்க பவளத்துக்கு நெருக்கம், எப்பவும் என்ன தான் தூது அனுப்புவா.

ஓடை
நான் அசந்து அசந்து பாத்ததுண்டு, பவளத்த, அவ போட்ருக்க துணி, பாசி, பொட்டு, ரிப்பன்... இப்படி எல்லாத்தையும் ஆசையா பாப்பேன்!

அவ தான் தேவத, என் கதையோட கதா நாயகி அந்த சின்ன வயசுல.
தண்ணி அவ்வளவு கிடைக்காது நாங்க தங்கி இருந்த எடத்துல, தெனமும் துணி தொவைக்க மாட்டோம், வாரத்துக்கு ஒரு நாள், எங்க ஊருக்கு பக்கத்துல ஒரு உப்போட இருக்கும், அங்க பஸ் ஏறிப் போய், வாரத்துக்கு ஒரு தடவ, எல்லாத் துணியையும் தொவச்சிடு வரணும்.

நான் தான் எங்க வீட்ல எல்லாரு துணியையும் தொவப்பேன், அப்போ துணி தொவைக்கறது அவ்வளவு சிரமமா எனக்குத் தெரிஞ்சதிள்ள, சந்தோசமா போயிட்டு, தண்ணிக்குள்ள ஆட்டம் போட்டுட்டு, வருவோம் பிள்ளைங்க எல்லாரும்.

என்னதா இருந்தாலும், சின்ன வயசு, கஷ்டமெல்லாம் கஷ்டமாத் தெரியல, அக்கா என்மேல பாசமா இல்ல, அது, பெருசாத் தோனல, வெளையாட்டுப் போக்குல இருந்துட்டு வந்தேன்! ஆனா.. இன்னும் கொஞ்சம் பெருசானதும் தா, கொடூரம்னா என்னனு புரிஞ்சது, ஒரு பொண்ணுக்கு சிரமம்னா என்னனு புரிஞ்சது.

அப்போ எல்லாம் அழுவேன், என்ன தவிக்க விட்டுப் போன, எங்க அப்பாவையும் அம்மாவையும் நெனச்சு நெனச்சு அழுவேன். :'( :'(

------------------------------------------------------------

ஓவம்மா பேசுவாள், அடுத்த பகுதியில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்