முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #4 (தொடர்கதை)

முந்தைய பகுதிகள்:

ஓவம்மா! #1 | #2 | #3

அக்கா அன்னிக்கு ஊருக்குப் போய்ட்டா, ஏதோ கல்யாண வீடுன்னு சொல்லி. சோறு பொங்கச் சொன்னா என்ன. வீட்டப் பாத்துக்கோ, மாமா இருப்பாரு தொணைக்குனு சொல்லிட்டு.


எனக்கு அவ்வளவு சந்தோஷம் அக்கா ஊருக்குப் போனது. என் விருப்பம் போல அன்னிக்கி பொழுதக் கழிக்கலாம்னு நெனச்சேன்.

ஆனாலும் அப்படி முடியாது, கண்டிப்பா வேலைக்கு போயே தீரனும். போனேன். ஆனா, வேலைக்கு நடுவுல அக்கா முதுகுல ஓங்கி எத்துவாலேன்ற கவல இல்லாம, நிம்மதியா கத பேசிக்கிட்டே வேல பாத்தேன்.

சாயந்தரம் வீட்டுக்குப் போனேன், காலேல பொங்குன சோறு தான் இருந்துச்சி, எனக்கு முட்ட சாப்டனும்னு ஆசையா இருக்க, அன்னிக்கி சம்பளக் காசுல, ஒரு முட்ட வாங்கி, பொரிச்சுத் தின்னேன். கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயும் வாங்கித் தின்னேன்.

தெரியும் எனக்கு, ஊருக்குப் போன அக்கா வந்தா, "ஏண்டி சம்பளக் காச வாங்கித் தின்ன"னு அடிப்பானு. ஆனாலும், அடி தானனு வாங்கித் தின்னுட்டேன்.

அடி வாங்கி வாங்கி, பன்னெண்டு வயசுல, எனக்கு மரத்துப் போய் இருந்தது.
அடிக்கு பயமே இல்லாமப் போய் இருந்தது. எங்கக்கா பொம்பள தான், ஆனா என்ன அடிக்கிறப்போ, மிதிக்கிறப்போ, அவளுக்கு பொம்பளப் பிள்ளைய அடிக்கிறோமேன்னு தோனவே தோனாது. கண்ணா மூடிட்டு எங்க வேணாலும் மிதிப்பா.

அன்னிக்கி ராத்திரி, தூங்கிட்டு இருந்தேன், திடிர்னு ஏதோ யாரோ கிட்ட வராப்ள தோன, டக்குனு முழிச்சிட்டேன்.

என் மாமா... தொணையா இருப்பாரு னு சொல்லிட்டுப் போனா எங்கக்கா, ஆனா அவரே தான் அன்னைக்கு வெனையாப் போனாரு.


எனக்கு அப்போ வெவரம் தெரியாது, ஆனாலும் எங்க மாமா, சீ, அவனுக்கு என்ன மரியாத, நாய், அப்படிச் சொன்னாக் கூட தப்பு, நாய் நன்றி உள்ளது! ஓநாய்.. . சின்னப் பிள்ளையைக் கூட, காமத்தோட பாக்குற ஓநாய், எனக்கு பன்னெண்டு வயசு தான், ஆனாலும் உணர முடிஞ்சுது, ஏதோ இது தப்புன்னு. அந்தத் தொடுதல் தப்புன்னு.

அந்த ஓநாய் கிட்ட வரும் போதே, தள்ளிப் போனேன், விடல, மேல மேல தப்பா நடக்க முயற்சி பண்ணுச்சு, போட்டேன், ஒரே போடாப் போட்டேன், பக்கத்துல இருந்த படிக்கல்லத் தூக்கி, ரெத்தம் கொட்டுச்சு, அலறுச்சு, இருட்டுல கத்துச்சு, ஏதோ தப்பிச்சோம்னு, ஓடிட்டேன், வீட்ட விட்டு ஓடிட்டேன்.

இனியும் வீட்ல இருந்தா, என்னால இருக்க முடியாது, நல்லது இல்லன்னு தோனுச்சு, கைல அன்னிக்கு வாங்குன சம்பளக் காசு இருந்துச்சு, அத தூக்கிட்டு ஓடிட்டேன் எங்க அக்கா வீட்ட விட்டு.

வெளிய வந்துட்டேன், இருட்டு, ராத்திரி நேரம், என்ன செய்ய, எங்க போகனு தெரியாம, நடந்தேன், நடந்து போயிட்டே இருந்தேன், எங்க போறதுனே தெரியாம.

அன்னிக்கு தெருவுல நடந்து போனப்போ, பேசுனேன், " அப்பா.. ஏன்பா என்ன விட்டுப் போனீங்க...? எனக்கு இங்க யாருமே இல்லப்பா.. எங்கப்பா போவேன்... யாரப்பா பாப்பேன்.." நடு ரோட்ல ராத்திரி இருட்டுல அன்னிக்கி நான் பயந்து பயந்து, சோகத்தோட அழுது பொலம்புனது, யாருமே இல்ல னு நெனைக்கிறப்போ இருந்த அந்த வலி, அது கொடுமையானது.

என்ன நானே தான் காப்பாத்திக்கணும், ஓடுனேன், எங்க போறதுன்னு தெரியாம.

நடந்துக்கிட்டே இருந்தேன், ஒரு கோயில் இருந்தது, சின்னக் கோயில், யாரும் அத மூட்றது இல்ல போல, எனக்கும் தெரு நாய்களுக்கும் அது தான் அடைக்கலமா இருந்தது! உள்ள போனேன், ஒரு ஓரமா உக்காந்தேன், நடந்து நடந்து கால அப்படி வலிச்சது. தூக்கம் வந்தது அசதியில, ஆனா, பயமா இருந்தது, இங்கயும் யாராவது வந்துடுவாங்கலோனு, பயமா இருந்தது.

எங்க போறதுன்னு தெரியாம, தூங்காம, ராத்திரி முழுக்க அழுதேன், அழுதுக்கிட்டே இருந்தேன், நான் அழுத அளவு, யாரும் அழுதிருப்பாங்கலானு தெரியல.

அப்பா அம்மா இல்லாம, ஒரு பொண்ணு வளர்றது, சாபம்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்