முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #5 (தொடர்கதை)

ஓவம்மா! #1 | #2 | #3 | 4

அழுதுட்டே இருந்தவ அப்படியே தூங்கிப் போயிட்டேன், காலைல அஞ்சு மணி இருக்கும், அந்தக் கோயிலுக்குப் பூச செய்ற ஐயர் வந்து தான் என்ன எழுப்புனாரு. ஒரே குளிர், பனி, அது எழுந்தப்றம் தான் எனக்கு உணர்ந்துச்சு.

"நீ யாரு மா? இங்க இப்டி வந்து படுத்திருக்க?", அந்த ஐயர் கேக்க, என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சேன்!

சாலை!
அவரு, "போ போ, இங்க எல்லாம் தூங்கக் கூடாது வீட்டுக்குப் போ" னு சொல்லிட்டாரு.

எந்திச்சி நடந்தேன், எங்க போறதுன்னு யோசிச்சிட்டே நடந்தேன். ரொம்பக் குளிரா இருந்தது. இந்நேரம் எங்கக்கா வீட்டுக்கு வந்திருக்கும், ஆனா வீட்டுக்கு என்னால போக முடியாது.

பசிக்க ஆரம்பிச்சுடுச்சு, என்ன செய்யனு தெரியல, இந்நேரம் வேலைக்குப் போயிருந்தா சாப்டிருப்பேன், பசில நடக்க முடியல, நடந்துக்கிட்டே இருந்தேன் ஆனா நிக்காமா, எங்க எங்கயாச்சும் நின்னா, யாராவது, "யாரு மா நீ"னு கேள்வி கேப்பாங்கலே னு நெனப்பு, அந்த நெனப்பு தான் என்னத் தொரத்தி நடக்க வச்சது!

ஒரு கட்டத்துல நான் மதியம் நெருங்க நெருங்க, சக்தி எல்லாம் எழந்து, மயங்கி விழுந்திருந்தேன்.

முழிச்சுப் பாத்தப்போ, எங்க அத்த வீட்ல இருந்தேன். அவங்க என் அத்தைனு அவங்க சொல்லி தான் எனக்கே தெரியும், அதுக்கு முன்னாடி அவங்கள நான் பாத்ததே இல்ல.

ஆனா அவங்களுக்கு என்னத் தெரியும்னு சொன்னாங்க. சரி னு அவங்க வீட்லயே இருந்தேன். எங்க அக்கா வீட்ல நடந்ததெல்லாம் அவங்க கிட்ட சொன்னேன், மாமா தப்பா நடந்ததையும், தயங்கித் தயங்கிச் சொன்னேன்.

அத்த என்ன பத்ரமாப் பாத்துப்பேன்னு சொன்னாங்க. அங்க இருந்தும் கட்ட அடுக்க வேலைக்குப் போனேன்.

அத்த படிக்கச் சொன்னாங்க, ஆனா எனக்கு தான் படிக்கப் பிடிக்கலயே! அன்னைக்கு மட்டும் நான் படிச்சிருந்தா, இன்னிக்குக் கண்டிப்பா ரொம்ப நல்லா இருந்திருப்பேன். ஆனா என்ன செய்ய, படிக்கலையே!

அக்கா என்னத் தேடி எங்கயும் அலையால, அவ்வளவு பாசம், ஒரு சொம கொறஞ்சதுனு நெனச்சா போல. ஆனா, இப்போ அத்த வீட்ல, பெரிய பணம் கெடயாது, ஆனா, பாசம் இருந்தது நெறைய! நான் வேல பாத்தாலும், அந்தச்
செரமம் எனக்குத் தெரிஞ்சதே இல்ல.

எங்க வீட்டுப் பக்கத்துல ஒருத்தன் இருந்தான். அவன் பேரு, "கடி நாய்" , அது அவனுக்கு என் சோடுப் பொண்ணுங்க எல்லாரும் சேந்து வச்சப் பட்டப் பேரு.
அவனோட உண்மையான பேரு சேகர்! ஆனா, அவன ஒரு நாள் கூட நாங்க யாரும் சேகர் னு கூப்டதே இல்ல!

அவனுக்கு கோவம் ரொம்ப வரும், அதனால தான் எல்லாருமா சேந்து அப்படி ஒரு பேர வச்சோம்!

அவனையும் என்னையும் செத்து வச்சு, பிள்ளைங்க எல்லாம் கேலி செய்யும்க.
ஆனா, எனக்கென்னவோ, அவனப் பிடிக்கும்னும் இல்ல, பிடிக்காதுனும் இல்ல!

-----------------

ஓவம்மா கதை தொடரும்!
தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துவிட்டுச் செல்லுங்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்