முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உடைந்த பொம்மை!

இது என் தோழி சிறுவர்களுக்கு ஏற்றார் போலக் கதை வேண்டும் என்று கேட்டதால் எழுதியது.
அதனால நீங்களும் சிறுபிள்ளையாக உங்களை பாவித்துக் கொண்டு வாசிக்க ஆரம்பிங்க.

அன்னைக்கு கமலேசோட அப்பா ஊர்ல இருந்து வந்தாங்க. கமலேசுக்கு அவ்வளவு ஆனந்தம். அப்பா வருவாங்க வருவாங்கன்னு வாசல்லயே
நின்னுட்டு இருந்தான். அவனோட அப்பா ரொம்ப நாள் கழிச்சி, ஊர்ல இருந்து வந்துட்டு இருந்தாங்க. அதனால ரொம்ப ஆசையா இருந்தான்.

வந்துட்டாங்க அப்பா. தூரத்துல அப்பா வண்டி வரத பாத்ததுமே, குதிக்க ஆரம்பிச்சுட்டான். அப்பா அவனுக்காக ஒரு பூனை பொம்ம வாங்கிட்டு வந்திருந்தாங்க. அதுல இருந்து, அந்த பொம்ம தான் அவனோடநெருங்கிய தோழன். தூங்குவான் அது கூட தான், வெளயாடுவான், சாப்டுவான், எல்லாம் அந்த பொம்மையோட தான்.

அது ஒரு பீங்கான் பொம்ம. கீழ போட்டா உடைஞ்சிடும். உண்டியல் மாதிரி காசும் சேத்து வைக்கலாம் அதுல. காசு நெறஞ்சுட்டா அந்த உண்டியல் பொம்மைய ஒடச்சு தான் எடுக்கணும்.

கமலேசும் சேத்து வச்சான் காசு அதுல. முழு உண்டியலும் ஒரு நாள் நெறஞ்சிடிச்சு. அம்மா சொன்னாங்க ஒடச்சு காச எடுடா, வேற உண்டியல் வாங்கலாம்னு. அந்தக் காசு வருமைல இருக்கிற அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கும்னு சொன்னாங்க.

ஆனா கமலேசுக்கு ஒடைக்க மனசே வரல. அவங்க அம்மா எவ்வளவோ சொல்லியும் ஒடைக்கல. அந்த பொம்மைய அவன் உசுரா நெனச்சான்.

ஒரு நாள், ரோட்ல நடந்து போயிட்டு இருந்தாங்க அவனும் அவனோட அம்மாவும். அப்போ தெருவுல எல்லாருக்கும் துண்டுச் சீட்டு குடுத்துட்டு இருந்தாங்க சிலர்.

அதா அவங்க அம்மாவும் வாங்குனாங்க. அவன் அம்மா கிட்ட, அது என்னனு கேட்டான்.

அம்மா சொன்னாங்க, இது ஒரு வேண்டுகோள். ஒரு குட்டி பையனுக்கு ஒடம்பு சரி இல்லையாம், அவனுக்கு அறுவை சிகிச்சை பண்ண, ரொம்ப செலவாகுமாம், அதுக்கு உதவி கேட்ருக்காங்க-னு அவங்க அம்மா சொன்னதும், அவன் "நம்ம உதவி செயலாம் மா"னு சொல்றான்.

நம்ம கிட்டயே காசு இல்ல, நம்மளால முடியாதுன்னு அம்மா சொல்லறாங்க.

வீட்டுக்குப் போனதும் உண்டியல ஓடைகிறான் கமலேசு. அவன் முகம் கொஞ்சம் வாடி இருந்தாலும், "அம்மா இந்த காச குடுக்கலாம்" னு சொல்லி சிரிக்கிறான்.

அவன இருக்க கட்டிக்கறாங்க அவங்க அம்மா.

நீதி:
நமக்கு பிடிச்ச பொருளா இருந்தாலும், அதால அடுத்தவங்களுக்கு நல்லதுனா, அத நம்ம இழக்கறதுல தப்பு இல்ல.
எதிர் பார்ப்பு இல்லாம, யோசிக்காம உதவனும். நமக்கு இழப்பு ஆகுதேன்னு நினைக்காம, உதவனும்.

கருத்துகள்

  1. கதையைப் படித்ததும், இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருந்த ஈரம் குபுக் என்று கண்களுக்கு வந்துவிட்டது. அருமை !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்