முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓவம்மா #6 (தொடர்கதை)

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5

சேகருக்கும் எனக்கும் எப்பவும் சண்ட வரும், எல்லாரும் "அடிக்கிற கை தான் அணைக்கும்" மு எங்கள ஏத்தி விடுவாங்க. என்ன செய்ய, அப்போல இருந்து இப்போ வரைக்கும் இந்த கூட இருக்கவிங்க தான் இப்டி உசுப்பேத்தியே ஒன்னும் இல்லாதத, காதலா மாத்திடறாங்க.

ஆனா, என் விசயத்துல அப்டி நடக்கல, நான் நடக்க விடல. எனக்கு வேற மாதிரி கனவுகள் இருந்தது. இந்த தேவைதைக் கதைல எல்லாம் வர்ற மாதிரி, என்னத் தேடி ஒரு ராச குமாரன் வர மாட்டானா.. இப்படி ஏங்கிக்கிட்டு இருந்தேன்.

இது தெரிஞ்ச என்னோட கூட இருந்த பிள்ளைங்க எல்லாம், ஆமா அதெல்லாம் கதைல தாண்டி நடக்கும், உனக்கு நம்ம கடி நாய் தான், இப்படிக் கேலி பேசும்க, ஆனா, எனக்கு மட்டும் என்னவோ, உள்ளுக்குள்ள தோனிக்கிட்டே இருந்தது, ஒரு ராச குமாரன் வருவான்னு. காத்திருந்தேன்.

ஆனா, கடி நாய்க்கும் எனக்கும் இருந்த சண்டை மட்டும் தொடர்ந்துக்கிட்டே இருந்தது.

என்னோட வாழ்க்கைல, இந்தக் கட்டத்துல, எனக்கு நெறைய சோகம் இல்ல, காசு இல்லனாலும், அத்தையோட பாசம் என்ன சந்தோசமா தான் பாத்துக்குச்சு.

எனக்கு வயசு பதினெட்டு, பாக்க ரொம்ப நல்லா இருக்க மாட்டேன், ஆனா ஓரளவு இருப்பேன், நல்ல செகப்பு நான். ஆனா காசில்லாம கொஞ்சம்.. கொஞ்சமில்ல, ரொம்பவே எலும்பும் தோலுமா தான் இருந்தேன். ஆனாலும் பாக்க ஓரளவு இருப்பேன்னு வைங்களேன். என்னையும் நெறைய பேர் சுத்தி சுத்தி வந்திருக்காங்க, உருகிருக்காங்க கொடம் கொடமா.. ஆனாலும், நானே நெனச்சதுண்டு, நம்ம கிட்ட என்ன இருக்குன்னு இவங்க எல்லாம் நமலயே சுத்தி வராங்கன்னு.

என்னோட ராச குமாரன் கனவு மட்டும் நீடிசுக்கிட்டே இருந்தது. என் கூட இருந்த பிள்ளைங்க எல்லாம் என்ன கேலி பேசுவாங்க, இவளுக்கு ராச குமாரன் வரானாம்னு.

நான் சொல்வேன், ராச குமாரன்னா ராசானு இல்ல, நல்ல வேல பாக்குற, படிச்சவன், இப்படி இந்தக் கடி நாய் மாதிரி வெட்டிப் பையன் இல்ல...

ஆனாலும் யாரும் அத ஏத்துக்கல, என்ன ஏசத் தான் செஞ்சாங்க.

நாள் ஆக ஆக எங்க அத்தை எனக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சாங்க, நானும் என் ராச குமாரன் கனவா கை விட ஆரம்பிச்சேன். பணக்காரப் பொண்ணுனா கனவெல்லாம் நெனவாகும். எனக்கு எங்க ஆகப்போதுனு இருந்தேன்.

ஆனா, ஆச்சு, என்னத் தேடி, வந்தாரு.. என் ராசக் குமாரன்.

----------------------------------------------------------------

ஓவம்மாவின் கதை தொடரும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்